Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி கிழக்கில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை பாதிக்கின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.நியூட்டன்)

வடமராட்சி கிழக்கில் பாரம்பரிய மீன்பிடி தொழில்களான கரவலை மற்றும் சிறு தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம்பெற இருக்கின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் தலைவர் சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்  மேலும்  தெரிவிக்கையில்,  

கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பாரிய அளவிலான போராட்டங்களும் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றிருந்தன.நடைபெற்ற போராட்டங்களில் வடமராட்சி கிழக்கு மக்கள் முழுமையாக பங்கெடுத்திருந்தார்கள். சம்பந்தப்பட்ட மக்களை அழைத்து அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.

நாங்களும் இந்த விடயம் தொடர்பில் பல கல்விமான்களை உள்வாங்கி அவர்களும் கடல்நீரை நன்னீராக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்கள். அக் கருத்துக்களை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உரையாடலில் ஏற்றுக்கொண்டு நல்ல செய்தி ஒன்று தரப்பட்டது.

இதனடிப்படையில் வடமராட்சி கிழக்கில் ஆறுமுகம் திட்டத்தை அமல்படுத்துவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. தெளிவாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு விடயம் இருக்கின்றது. யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான எந்த ஒரு எண்ணமும் எங்களிடம் இல்லை.

நிச்சயமாக எங்களுடைய மீனவ மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த உப்புநீரை நன்னீராக்கும் திட்டம் பல இடங்களில் தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதனால் ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு மீண்டும் வலியுறுத்துவதாகவும், கொரோனா பெருந்தொற்று நிலைமை மோசமாக இருக்கும் இந்த நிலைமையில் இந்த திட்டத்தாலும் எமது மக்களுடைய நிலைமை மிக மிக மோசமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றும், மீனவ மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை கைவிட்டு ஆறுமுகம் திட்டத்தை செயற்படுத்துவதற்கு தாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகவும்,வடமராட்சி கிழக்கில் மணல்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரை பாரம்பரிய கரவலை தொழிலேயே ஈடுபடுவதாகவும், இதில் ஒரு கரவலையில் குறைந்தது 30 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுவதாகவும், 60க்கும் மேற்பட்ட கரவலைப் பாடுகளைக் கொண்ட எமது பிரதேசத்தில் இந்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டால் அந்த தொழில்கள் முற்றுமுழுதாக பாதிப்படையும் என்றும், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடுகின்ற அந்தப் பகுதிக்கு உள்ளேயே ஐந்து கரைவலைப்பாடுகளுக்கு இருக்கிறது கட்டுமரத்தில் இருந்து தொழில் செய்தாலும், படகில் இருந்து தொழில் செய்தாலும், பாதிப்புகள் ஏற்படும்,இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று அப்போதும் சரி இப்போதும் சரி தாங்கள் மாற்றுக்கருத்து வைத்துக்கொள்ளவில்லை  இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் ஆறுமுகம் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஏஙகளுக்கு உறுதியளித்திருந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாரம்பரிய மீன்பிடித் தொழிலை பாதிக்கின்ற கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.