Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்க

Featured Replies

கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச

தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை

எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள்

இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,

கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில்

தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக்

கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி

சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக்

கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதாகக்

கூறினார். இவ்விடயம் நாட்டு மக்களுக்கு தெரியவந்ததை அடுத்து சீரீபதி மீது

பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி அவரை சிறையில் அடைத்தார்கள். தற்பொழுது

உண்மைகளை மூடி மறைப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்

டிரான் அலஸ் என அவரை கைது செய்துள்ளார்கள். டிரான் அலஸ் கைது

செய்யப்பட்டதும் நானும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் டிரான்

அலஸை சென்று பார்வையிட்ட போது தான் நடைபெற்ற ஜனாதிபதித்

தேர்தலின்போது வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக

விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது. அதனால் தங்களுக்கு

விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தொடர்பை ஏற்படுத்தி தருமாறு

பசில் ராஜபக்சா, லலித் வீரதுங்க, பி.பி. ஜயசுந்தர ஆகியோர் கேட்டுக்

கொண்டதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து, தான் கேட்டுக்

கொண்டவர்களுடன் கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின்

முக்கியஸ்தரான பாலகுமாரனை சந்தித்து ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த

ராஜபக்ஷவுக்கு வாக்குகளைப் பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகக்

கூறினார். பசில் ராஜபக்சா பி.பி. ஜயசுந்தர, லலித் வீரதுங்க ஆகியோரை கைது

செய்து தண்டனை வழங்காமல், விடுதலைப் புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக்

கொடுத்த டிரான் அலஸை கைது செய்துள்ளார்கள். அதுமட்டுமல்ல,

அமெரிக்காவில் குடியுரிமை பெற்றுள்ள பசில் ராஜபக்சா, அந்த நாட்டில் தடை

செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்துக்கு நிதி வழங்கியதற்காக அவரை

கைது செய்யுமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்காமல் தமது

சகோதரர்களை ஜனாதிபதி பாதுகாத்து வருகின்றார். இன்று விடுதலைப்

புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதியைக் கொண்டு ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு

எமது இராணுவத்தை புலிகள் தாக்கி வருகின்றனர். பாதுகாப்புச் செயலாளர்

கோதாபய ராஜபகசா தலைமையில் இராணுவத்துக்கு பெரும் பின்னடைவு

ஏற்பட்டுள்ளது. அண்மையில் தொப்பிகல புலிகளின் முகாம் தாக்கப்பட்டபோது

தோல்வியை எதிர்நோக்கியுள்ளது. ஆனால், இப்பிரச்சினையை யுத்தத்தினால்

ஒருநாளும் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து, நான் ஆட்சியிலிருந்தபோது

விடுதலைப் புலிகளோடு போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டேன். பிறகு

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். இன்று நாட்டுக்கு

நடந்திருப்பது என்ன? இன்று விடுதலைப் புலிகள் விமானம் மூலம் வந்து

கொழும்பில் குண்டு போடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழர்

கடத்தப்படுகின்றனர். நாடு இன்று பெரும்நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு பயந்து, கொழும்பிலுள்ள லொட்ஜ்களில்

தங்கியிருந்தவர்களை பலாத்காரமாக பஸ்களில் வடபகுதிக்கு கொண்டு சென்றனர்.

இதுவொரு மனித உரிமை மீறல் செயல். இவ்விடயத்தினால் விடுதலைப்

புலிகளுக்கு தமிழீழம் அமைப்பதற்கு அரசு பாதை வகுத்துள்ளது. இதற்காக கைது

செய்யப்பட வேண்டியவர்கள் அரசின் முக்கியஸ்தவர்களே தவிர, டிரான் அலஸ்,

சீரீபதி சூரியாராச்சி அல்ல. இந்த நாடு பெரும் அழிவை நோக்கிச் சென்று

கொண்டிருக்கின்றது. அதனால் நாம் எமது கட்சியைப் பலப்படுத்தி அரசைக்

கவிழ்க்க பெரும் பலத்துடன் செயற்பட எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்."

என் கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.