Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவர்!

December 10, 2021

spacer.png

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
சபைக்கு அறிவித்ததோடு, அதற்காக சில சட்ட முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது.

அதனை நீதி அமைச்சர் அலி சப்ரி செய்து வருகிறார் எனவும் கூறினார்.வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் உரைக்குக் குறுக்கிட்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், உங்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு ஒருபோதும் உதவியதில்லை.
உதவப்போவதும் இல்லை. எனவே அரசியல் கைதிகளின் விடயத்தில் நாம் அரசியல்ரீதியான
வாக்குறுதிகளை வழங்கப்போவதில்லை. இது தொடர்பில் நாம் முன்பும் எந்தவொரு
வாக்குறுதிகளையும் வழங்கவும் இல்லை என்றார்.

இந்நாட்டு பிரஜைகள் தொடர்பில் அரசாங்கம் என்கிற வகையில் எமக்குப் பொறுப்புகள் இருக்கின்றன. எனவே அதனை நாம் நிறைவேற்றுவோம் எனவும் கூறினார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இதன்போது கூறியதோடு, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியதுபோல பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னாள் நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக 46 பேர் விடுதலை செய்துள்ளனர். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளோரின் வழக்கு விசாரணைகளை நீதிச் சேவை ஆணைக்குழு ஊடாக தினந்தோறும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார் என சுட்டிக்காட்டினார்.

இதனால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தை அரசாங்கம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறது எனவும்
கூறினார்.

 

https://globaltamilnews.net/2021/170130

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.