Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பரப்புரையா?: லக்ஸ்மன் செனிவிரட்ன.

Featured Replies

புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பரப்புரையா?: லக்ஸ்மன் செனிவிரட்ன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்திய ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசாங்க ஊடகங்கள் பரப்புரை மேற்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் பேசியதாவது:

குடும்பிமலை தொடர்பாக ரணில் இன்று பேசியதை அரச ஊடகங்கள் திரிபுபடுத்தி பிரசாரப்படுத்தி வருகின்றன.

1993 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு அன்றைய பிரதமர் ரணில்தான் தலைமை தாங்கினார்.

குடும்பிமலை கைப்பற்றப்பட்டது இது முதல் தடவை போல கூறுகின்றனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் குடும்பிமலை கைப்பற்றப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.

குடும்பிமலையைக் கைப்பற்றி கிழக்கில் தேர்தல் நடத்தியதன் பின்னர்தான் முன்னாள் அரச தலைவரிடம் 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை கையளித்தது. ஆனால் அந்த அரசாங்கம் வடக்கை கைப்பற்ற முயற்சித்து கிழக்கை கைவிட்டு விட்டது. அதற்கு அன்றைய பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தவும் பொறுப்பேற்க வேண்டும்.

குடும்பிமலையை மட்டுமல்ல, இதர பிரதேசங்களையும் படையினரால் கைப்பற்ற முடியும். ஆனால் அதற்கு நல்ல தலைமைதான் தேவைப்படுகின்றது.

கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டு விட்டதாக கூறினால் அமைச்சர்கள் முன்னே செல்லுங்கள். நாங்கள் பின்னால் சுற்றுலா வருகிறோம்.

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணா பிரிந்த போது கிழக்கு மாகாண மக்கள் புலிகளின் தலைவரின் படத்தை அவமரியாதை செய்ததாக தெரிவித்தனர். யார் தீட்டிய திட்டத்தின் மூலம் ஏற்பட்ட பிரதிபலனால் இப்படி நடந்தது என்பது தெரியுமா?

ரணிலுடைய ஆட்சியின் காலத்தில் புலிகளின் இயக்கத்தை இரண்டாக பிளவுபடுத்தியதன் காரணமாகவே கிழக்கு மாகாண மக்கள் இப்படி நடந்து கொண்டனர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார் அவர்.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலாரும் மங்களமானவரும் சிங்கள மக்களுக்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், தாங்கள் தற்போதைய அரசைவிடப் போரை சர்வதேச நாடுகளின் உதவியோடு திறமையாக நடாத்தி புலிகள் இயக்கத்தை அழிப்போம், அதன் மூலம் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் என்பதே ஆகும். இவர்களது தேவையெல்லாம் மகிந்தவையும் அவரது சகோதர்களையும் ஆட்சியில் இருந்து அகற்றி தாங்கள் ஆட்சிக்கு வருவதே ஆகும். எனவே கிழக்கை இராணுவம் பிடித்ததற்கு தாங்களே உண்மையில் காரணம் என்று சிங்கள மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையும் அவர்களுக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் பிளவை ஏற்படுத்தி கருணாவை பிரித்தெடுத்த பெருமைக்குரியவர் ரணில்

[21 - July - 2007]

* ஐ.தே.க. எம்.பி.லக்ஷ்மன் செனிவிரட்ண சபையில் பெருமிதம்

டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் முதன் முதலில் பிளவொன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் கருணா அம்மானை பிரித்தெடுத்த பெருமை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாருமென ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் செனிவிரட்ண நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தொப்பிகல வெற்றி தொடர்பாக படையினரை கௌரவிக்கும் முகமான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே லக்ஷமன் செனவிரட்ண எம்.பி.இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலம் பேசுகையில்;

படையினர் பெற்ற வெற்றியை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏளனப்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால், 1993 இல் கிழக்கை கைப்பற்றியபோது ரணில் விக்கிரமசிங்கதான் படைகளுக்கு தலைமை தாங்கியிருந்தார். அவர் ஒருபோதும் படை யினரை ஏளனப்படுத்துவதில்லை. எனினும், அவர் சொன்ன ஏதோவொன்றை வைத்துக்கொண்டு அரச ஊடகங்கள் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொள்கின்றன. அரசின் இந்தமாதிரியான செயற்பாடுகள் குறித்து நாம் வெட்கப்படுகிறோம்.

இதேநேரம், தொப்பிகலயை முதற் தடவையாக பிடித்ததுபோல் அரசாங்கம் செயற்படுகிறது. இதை முப்படைத் தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போராடி தொப்பிக்கலயை பிடித்தது போல அரச தரப்பினர் பேசுகின்றனர்.

இதேநேரம், படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கிய ஜனாதிபதி ஒருவர் இருக்கும் நாடு இது. இது பற்றி விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக் குழு கேட்டும் அதற்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அத்துடன், எதற்கெடுத்தாலும் பெரிய உரையையே நடத்தும் ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் இவ்விவகாரத்தில் வாய்மூடி மௌனம் சாதிக்கின்றனர்.

தொப்பிகல பிரதேசம் என்பது 40 கிலோ மீற்றர் தூரமும், அகலமும் கொண்டது. இதை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள குறைந்தது 8 படையணிகள் தேவைப்படும்.

தொப்பிகல பகுதியிலிருந்து 800 புலிகளை ஆயுதங்களுடன் வன்னிக்கு தப்பிச் செல்ல அனுமதியளித்ததன் மூலம் புலிகளுடன் அரசாங்கத்துக்கு இன்னுமொரு இரகசிய ஒப்பந்தம் இருந்ததா என்று கேட்கிறோம். புலிகளுக்கு பணம் கொடுத்து நாட்டுக்கு துரோகமிழைத்த ஜனாதிபதியுடன் எமக்கு இணைந்து செயற்பட முடியாது.

இதேநேரம், பத்திரிகையொன்றுக்கு பேட்டியளித்துள்ள இராணுவத் தளபதி இதற்கு முன்னர் தொப்பிகல எவராலும் கைப்பற்றப்படவில்லையென தெரிவித்துள்ளார். இதன் மூலம் இதற்கு முன்னர் தொப்பிகல பிடிக்கப்பட்ட போது அதற்காக பாடுபட்டு போராடி உயிரிழந்த, காயமடைந்த படையினரை அவர் அவமதித்துள்ளார்.

நாம் அன்று கிழக்கைக் கைப்பற்றி வைத்திருந்தபோதும், பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது யாழ். குடாநாட்டை கைப்பற்றவென அனுருத்த ரத்வத்தை கிழக்கிலுள்ள படையினரை வடக்கிற்கு எடுத்தமையினாலேயே கிழக்கின் பல பகுதிகள் புலிகளின் வசமாகின. இது எமது தவறல்ல. ஆனால், இன்றோ பிடிப்பது எமது படையினருக்கு பெரிய விடயமில்லை. அதை படையினர் பல தடவைகளிலும் நிரூபித்துக் காட்டியுள்ளனர். சிறந்த தலைமைத்துவமிருந்தால் அது எப்போதும் சாத்தியப்படும்.

ஜே.வி.பி.யினர் எப்படித்தான் அரசாங்கத்தை விமர்சித்தாலும், இந்த அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் வெற்றிபெறச் செய்ய பங்காளியாக செயற்பட்டதிலிருந்து அவர்கள் தப்பிச் செல்ல முடியாது. ஜே.வி.பி.க்கு சரியான தலைவரொருவரை தெரிவு செய்ய முடியாமல் போயுள்ளது என்பது இதிலிருந்து புரிந்துள்ளது.

இதேநேரம், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் விலகிச் சென்றதன் பின்னர் கிழக்கிலுள்ள பெண்கள் பிரபாகரனின் படத்தை செருப்பால் அடித்ததாக விமல் வீரவன்ச பேசும்போது கூறினார். கருணா பிரிந்து செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்கவே காரணமாகவிருந்தார். விடுதலைப் புலிகளில் முதல் முதலாக பிளவொன்றை ஏற்படுத்தி கருணாவை பிரித்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். எனவே ஏதோவொரு வகையில் ரணிலின் செயலை விமல் வீரவன்ச அவராகவே ஏற்று பாராட்டியுள்ளார் என்றார்.

திளக்குரல்

இதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உண்மையில் சிங்கள மக்களுக்கு "அரசியல்" என்று எதுவும் இல்லை. யாராவது ஒரு "அறிவுபூர்வமாக" சிந்திக்கக்கூடிய சிங்களவன் தன் அரசியல்வாதிகளை பார்த்து "எனது நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தாய்?" என்று கேட்டால் அவர்களிடம் சொல்வதற்கு எந்தப் பதிலும் இல்லை. நிச்சயமாக அப்படி ஒருவன் கேட்க மாட்டான் என நம்பலாம். இவர்களின் அரசியல் எல்லாம் "தமிழனை கொல். அவன் சொத்துக்களை காலாகாலத்துக்கும் பறித்தெடுத்து அனுபவி" என்பதுதான்.

எனவே இந்த இரண்டு கட்சிகளும் இதைத்தவிர வேறெதையும் அரசியலில் பேசவும் முடியாது. செய்யவும் முடியாது. தமிழர்கள் சேர்ந்து வாழ்வதென்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிரிந்து செல்வதே அவர்களின் உயிர், உடமைகளுக்கு பூரண பாதுகாப்பு தரும். இதை கொள்கைரீதியில் மிகப்பலமாக முன்னெடுக்க வேண்டியது அவசியம்; அவசரம். ஆயுத போராட்டம் என்பது கொள்கைக்கான போராட்டத்தீன் ஒரு தவிர்க்க முடியாத அம்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.