Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் இரண்டு இராணுவத்தினருக்கு எதிரான அமெரிக்காவின் தடை இலங்கை யின் அரசியல் தலைமைக்கான ஒரு செய்தி – உலக தமிழர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரண்டு இராணுவத்தினருக்கு எதிரான அமெரிக்காவின் தடை இலங்கை யின் அரசியல் தலைமைக்கான ஒரு செய்தி – உலக தமிழர் பேரவை

இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்த செய்தியை ஆழமாக ஆராயவேண்டும் என வேண்டுகோள் விடு;த்துள்ள உலக தமிழர் பேரவைநாடு பயணித்துக்கொண்டிருக்கின்ற திசையில் அர்த்தமுள்ள மாற்றத்தை மேற்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
gtf.jpg
இலங்கை பல நெருக்கடிகளின் மத்தியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை அது பயணித்துக்கொண்டிருக்கின்ற பாதை- அதிகளவு ஏதேச்சதிகாரம், இராணுவமயமாக்கல்கொண்டதாக காணப்படுகின்து- தமிழ் முஸ்லீம் இந்து சமூகத்தினர் மேலும் புறக்கணி;க்கப்படுகின்றனர்- பொதுமக்கள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளனர் இதன் காரணமாக நாட்டில் புதிய மோதல்களிற்கு வித்திடும் சூழ்நிலை காணப்படுகின்றது எனவும தெரிவித்துள்ளது.

சமீப வருடங்களில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கைக்குரிய சகா என்ற இலங்கையின் நம்பகதன்மை பாதிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை ,மனித உரிமைகள் அதிகளவிற்கு மேற்குலகின் வெளிவிவகார கொள்கையின் மையக்கல்லாக காணப்படும் அதிகரித்த புவிசார் அரசியல் நிலைமை ,இலங்கையின் நிலைமையை இன்னமும் மோசமானதாக மாற்றும் எனவும் எச்சரித்துள்ளது.
sunil-rat.jpg
 
அமெரிக்க ஜனாதிபதி டிசம்பர் ஒன்பதாம் திகதி முதல் பத்தாம் திகதி அரசாங்கங்கள் சிவில் சமூகங்கள் தனியார் துறையினருக்கான இணையவழி உச்சிமாநாட்டினை நடத்தினார் என்பதை சுட்டிக்காட்டியுள்ள உலக தமிழர் பேரவை இந்த உச்;சி மாநாடு ஜனநாயக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனம் செலுத்தியது தலைவர்கள் தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் தங்கள் பற்றுதியை வெளியிடுவதற்கான தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்கியதுஎனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயகத்தை விட அதிகளவிற்கு ஏதேச்சதிகார குணாதிசயங்கள் கொண்டதாக கருதப்படும் தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்த உச்சிமாநாட்;டில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்ட 110 நாடுகளில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது

சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 ம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பான தடைகளை விதித்துள்ளது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. 11 பேர் கடத்தப்பட்ட விவகாரத்திற்காக ( 2008-2009) இலங்கையின் கடற்படை புலனாய்வு உத்தியோகத்தர் சந்தன ஹெட்டியராச்சிக்கு எதிராகவும்,2000 ம் ஆண்டு ஆகக்குறைந்தது பத்து தமிழ் கிராமத்தவர்கள் நீதிவிசாரணைக்கு புறம்பான விதத்தி;ல் கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் இந்த தடைகள் விதிக்கப்பட்டன என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. முதலாவது நபர் விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார், இரண்டாவது நபர் தண்டனை வழங்கப்பட்ட பின்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டார்- இந்த செயற்பாடுகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளிற்கு முரணாணவை எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த இரு உத்தியோகத்தர்களிற்கும் எதிரான தடை அவர்கள் இருவர்களிற்கும் எதிரான நேரடியான நடவடிக்கை என்பதற்கு அப்பால் இலங்கையின் அரசியல் தலைமைக்கு வழங்கப்பட்ட செய்தியாகவே காணப்படுகின்றது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டொனி பிளிங்டனின் மனிதஉரிமை தின அறிக்கையில் மனித உரிமைகளை அமெரிக்க வெளிவிவகார கொள்கையின் மையக்கல்லாக முன்னிறுத்துவது குறித்தும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளை மீறுபவர்களை பொறுப்புக்கூறலிற்கு ஊக்குவிக்கவும் கவனத்தை ஈர்க்கவும் பொருத்தமான கருவிகளை பயன்படுத்த அமெரிக்கா தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

 

https://thinakkural.lk/article/155964

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.