Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கல்வித்துறை அமைச்சகம்

பட மூலாதாரம்,PIB INDIA

 

படக்குறிப்பு,

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொல்காப்பியம் தமிழ் இலக்கிய நூலின் இந்தி மற்றும் கன்னட பதிப்புகளை அதன் பதிப்பக நிறுவனமான இந்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன நிர்வாகிகளுடன் இணைந்து வெளியிடும் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார்.

தொல்காப்பியம் தமிழ் இலக்க நூலின் இந்தி மொழி பெயர்ப்பு நூலையும் கன்னட மொழியில் தொல்காப்பியத்தின் தமிழ் நூல் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை மொழிபெயர்த்து இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது. என்ன காரணம்?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (அ) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் (சிஐசிடி), தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இந்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு ஆய்வு நிறுவனமாகும்.

இந்த மையம் மூலமாக தமிழ் பழங்கால இலக்கணத்தை பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி தற்போது சிஐசிடி தயாரித்துள்ள தொல்காப்பியம் நூலின் இந்தி மொழிபெயர்ப்பு மற்றும் கன்னடத்தில் தொல்காப்பியம் மற்றும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களின் மொழிபெயர்ப்பு நூல்கள் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர். சுபாஸ் சர்க்கார், இந்தி, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தொல்காப்பியத்தின் ஹிந்தி, கன்னட நூல்களையும் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரியத்தைப் போற்றும் பதினெண் கீழ்க்கணக்கின் கன்னட மொழி நூல்களையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சர்கார், இந்திய கலாசார வரலாற்றில் தமிழ் மொழி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரத்தின் செழுமையான பாரம்பரியம் காலத்தின் மாறுபாடுகளைத் தாங்கி பல நூற்றாண்டுகளாக செழித்து வளர்ந்துள்ளது என்று கூறினார்.

 

தொல்காப்பியம்

சங்க இலக்கியங்களும், தொல்காப்பியமும் இந்தச் செழுமையும் பெருமையும் வாய்ந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும் என்றும், இந்த பாரம்பரியத்தை நாடு மிகவும் பெருமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நூல்களில் உள்ளார்ந்த இலக்கிய செழுமையையும் ஞானத்தையும் மக்கள் விரும்புவார்கள் என்று கூறிய அவர், இந்த மொழிபெயர்ப்புகளை வெளிக்கொணரவும், இந்தி மற்றும் கன்னட வாசகர்களுக்கு இந்த இலக்கியம் கிடைக்கச் செய்யவும் சிறந்த பங்களிப்பை வழங்கிய செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் மற்றும் அதன் மொழிபெயர்ப்பாளர்கள் குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி, சிஐசிடி பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் மற்றும் கல்வி அமைச்கத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொல்காப்பியம் நூல் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது குறித்து பேராசிரியர் சந்திரேகரனிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, "தமிழ் பழங்கால இலக்கிய, இலக்கண நூல்களை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வது தமிழாய்வு நிறுவனத்தின் நோக்கம்," என்று கூறினார்.

சங்க காலத்தில் நீடித்த படைப்புகள்

 

சங்க கால படைப்புகள்

தமிழ் எழுத்து முறைகள் கிமு 250க்கு முந்தையவை. தமிழ் சங்க கால பாடல்கள் என்பது 473 புலவர்களால் இயற்றப்பட்ட 2,381 பாடல்களைக் குறிக்கின்றன. சில 102 பாடல்கள், இயற்றியவரின் அடையாளம் அறியப்படாதவை.

பெரும்பாலான அறிஞர்கள் வரலாற்றில் சங்க இலக்கிய சகாப்தத்தை கிமு 300 முதல் கிமு 600 வரையிலான காலகட்டத்தை உலகின் மிகச் சிறந் இலங்கியங்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

தொல்காப்பியம் எனும் செய்யுளில் இலக்கண நூலான தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் மட்டுமே பண்டைத் தமிழுக்கு உண்டு என்று நம்புவது நியாயமானதாக இருந்தாலும், எட்டுத்தொகைகளும் பத்துப் பாடல்களும் காலத்தைக் கடந்து நிற்கின்றன. எட்டுத்தொகை என்பது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவற்றைக் கொண்டது.இந்த நூல்களின் சிறப்பைக் கருத்தில் கொண்டு, அனுபவம் வாய்ந்த தமிழ் மற்றும் கன்னட அறிஞர்கள் குழு மற்றும் பெங்களூர் தமிழ் சங்கம் மூலம் சங்க இலக்கியங்களை கன்னடத்தில் மொழிபெயர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர்கள் இரு மொழிகளிலும் நன்கு அறிந்தவர்கள் மற்றும் மொழிபெயர்ப்புப் பணியை முடிப்பதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றவர்கள் என சிஐசிடி நிர்வாகம் கூறியுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட செம்மொழித் தமிழ் உரையின் கன்னட மொழிபெயர்ப்பை 8,000 பக்கங்களுக்கு மேல் ஒன்பது தொகுதிகளாக வெளியிட சிஐசிடி முயற்சி எடுத்திருக்கிறது.

 

தொல்காப்பியம்

பட மூலாதாரம்,PIB INDIA

தொல்காப்பியம் ஹிந்தி மொழிபெயர்ப்பில் வசனம் (உரை, ஒலிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புகள்) டாக்டர். எச்.பாலசுப்ரமணியம் மற்றும் பேராசிரியர் கே.நாச்சிமுத்து போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டு 1,214 பக்கங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் சில மொழிகளில் தமிழ் இலக்கிய நூல்கள் வெளியிட சிஐசிடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு நூல்கள் என மொத்தம் 36 நூல்கள் வெளிவரும் என்றும், தெலுங்கில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேராசிரியர் சந்திரசேகர் கூறினார்.

மலையாள மொழியிலும் ஐந்து நூல்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றின் சரிபார்ப்புப் பணிகள் முடிந்த பிறகு அவை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொல்காப்பியம் என்பது என்ன?

தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

 

தொல்காப்பியம்

 

படக்குறிப்பு,

பேராசிரியர் இலக்குவனார்

தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என அவை வகைப்படும்.

தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை பேராசிரியர் இலக்குவனார் 1963இல் செய்தார். அந்த நூலுக்கு திமுகவின் அப்போதைய தலைவராக இருந்தவரும் தமிழக முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை முன்னுரை எழுதியிருந்தார்.

அவருக்கு முன்பாக, தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் பேராசிரியர் பி. சுப்பிரமணிய சாஸ்திரி எழுதியிருந்தார். திருவையாறை சேர்ந்த அவர் அடிப்படையில் சமஸ்கிருத பேராசிரியர். அவரது மொழிபெயர்ப்பு குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தாதல் அது பல்வேறு தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-59758537

  • கருத்துக்கள உறவுகள்

எதோ திருட்டுத்தனம் செய்யபோகினம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பல இடறுகள் நடந்தன கடைசியாகவும் தமிழை செம்மொழியாய் அறிவித்தார்கள்  கருணாநிதி காலத்தில்  சிறிது காலத்தில் செம்மொழி ஆண்டை குறைத்து கன்னடம் தெலுங்கு போன்ற தமிழில் இருந்து பிறந்த மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்தை கொடுத்து தமிழை சிறுமைப்படுத்தினர் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.