Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் பகுதிகளில் சீனத்தூதர்...இந்தியா - இலங்கை உறவைப் பாதிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை தமிழர் பகுதிகளில் சீனத்தூதர்...இந்தியா - இலங்கை உறவைப் பாதிக்குமா?

 

 

ச.கார்த்திகைச்செல்வன் (நெறியாளர்)

விருந்தினர்கள்:

எம்.ஏ. சுமந்திரன் ( யாழ்ப்பாணம் எம். பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு )

ராமு மணிவண்ணன் ( பேராசிரியர் )

ஆர்.கே.ராதாகிருஷ்ணன் (பத்திரிகையாளர்)

கோலாகல ஸ்ரீநிவாஸ் (பத்திரிகையாளர்)

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தலைமுறை டிவி தளத்தில் எழுதிய பதிலின் பிரதி
-----------------------------------------------------------------

மேலோட்டமான விடயங்களையே பலரும் பேசினார்கள். உண்மையில் சினாவின் தற்போதய பதட்டத்துக்கு முக்கிய காரணம் அமரிக்காவுக்கும் இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமமிடையில் உருவாகிவரும் அரசியல் உறவுகள்தான் எனத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுகளாகவே அண்மைக்கால சீன நகர்வுகளை நான் பார்க்கிறேன். அமரிக்காவும் மேற்க்கு நாடுகளும் மட்டுமே 2000 -2006 பேச்சுவார்த்தை காலக்கட்டத்தில் இருந்து இலங்கைத் தமிழரை ஒரு தரப்பாக அங்கீகரித்திருக்கிறது. அமரிக்கா மேற்க்கு நாடுகள் ஐநா போன்ற சர்வதேச அரங்குகளில் போர்குற்றம் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கைக்குப்பின்னே நிற்காமல் தமிழர் மீதும் கரிசனை காட்டுகின்றன. இந்தியா 1987 ஒப்பந்ததின்போதுகூட இலங்கை தமிழரை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவில்லை. இதுதான் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா மீதுள்ள வருத்தம். இலங்கை தமிழர் இந்தியாவிடமிருந்து பொருளாதார உதவிகளைவிட அரசியல் உதவிகளையே முதன்மையாக எதிர்பார்க்கிறார்கள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இலங்கை தமிழருக்கான பொருளாதார உதவிகள் இந்தியா அமரிக்கா மேற்குநாடுகள் மட்டுமல்ல இலங்கை அரசும்கூடச் செய்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்களும் செய்கிறார்கள். இப்போ சீனாவும் செய்கிறது. இந்தியாவில் சிலர் அரசியல் ரீதியாக இலங்கையோடு மட்டும் நின்றுகொண்டு வடகிழக்கில் சில கட்டிடங்களை வீதிகளை அமைப்பதன்மூலம் இலங்கை தமிழர்களை வெண்றுவிடலாமென கருதுகிறார்களா? என்கிற கேழ்வி தமிழ் இளைஞர் மத்தியில் உள்ளது. வடகிழக்கு தமிழர் மத்தியில் இந்தியா காலூன்றும் விடயத்தில் இந்தியாவின் வடகிழக்கு கொள்கை தோற்றுப்போய்விட்டது. அமரிக்காவும் சீனாவும் அதனை உணர்ந்துவருகிறது. அண்மையில் அமரிக்கா மற்றும் மேற்க்கு நாடுகளுக்கும் இலங்கை தமிழர் தரப்புக்குமிடையே நெருக்கம் அதிகரித்து வருவது அண்மை நிகழ்வுகள் மூலம் புலப்படுகிறது. அதற்க்கு அமரிக்கா மேற்க்குநாடுகளின் பொருளாதார உதவிகளல முக்கிய காரணம். அதற்க்கு மேற்குநாடுகள் இலங்கையை கண்டிப்பது போர்குற்றம் செய்த இராணுவ தலைவர்களை எதிர்ப்பது என அரசியல் ரீதியான நகர்வுகளை மேற்கொள்ளுவதே முக்கிய காரணம். இனியாவது இந்தியா இதனை புரிந்து கொள்ளவேணும். சீனா பதட்டபடுவது இந்தியாவின் நகர்வுகள் தொடர்பாக என நான் நினைக்கவில்லை. சீனா பதட்டப்படுவது அமரிக்காவுக்கும் இலங்கை தமிழர் மற்றும் புலம் பெயர்ந்த தமிழருக்குமிடையிலான நெருக்கம் தொடர்பானது எனவே நான் கருதுகிறேன். வடகிழக்கில் இந்தியாவை சீண்டுவதன்மூலம் 1. தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெறுகிற போட்டியில் இந்தியா அமரிக்காவுடன் தானும் களமிறயும்ங்குவது 2 களத்தில் அமரிக்காவுடன் தான் மட்டும் மோதாமல் , இந்தியாவை களத்தில் இறக்கிவிடுவது என்கிற இரண்டுமுனை இராசதந்திரத்தை சீனா கையாள்வதாகவே தோன்றுகிறது. . - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.