Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எல்லை நிர்ணயம் – புனானை கிழக்கு மக்கள் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை நிர்ணயம் – புனானை கிழக்கு மக்கள் போராட்டம்!

spacer.png

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராமசேவகர் பிரிவினை இணைப்பது தொடர்பாடன விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  பிரதேச மக்கள்  வீதியில் இறங்கி  கவனயீர்ப்பு போராட்ட்தில் ஈடுபட்டனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் சிங்களம் என இரு தரப்பும் இணைந்து இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் திடிர் என தங்கள் கிராமம் உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தங்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களத்தில் இருந்து காணி தொடர்பான எல்லை நிர்ணயக் குழு நேற்று (ஞாயிற்றுக் கிழமை) புனானை பிரதேசத்திற்கு சென்று எல்லை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இவ் விடயம் தொடர்பாக அறிந்த பிரதேச மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு  குறித்த விடயம் தொடர்பாக கொண்டு வந்தமையினையிட்டு அமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆர்பட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன்போது மக்கள் தாங்கள் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்தே வாழப்போவதாகவும்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து வாழ விருப்பமில்லை எனவும் இதனை தடுத்து நிறுத்தி தறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் தன்னால் இயன்ற உதவிகளை மேற்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபிஸ் நசிர் தெரிவிக்கும் காணி தொடர்பான புள்ளி விபர நடவடிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் வாகரை பிரதேச செயலகம் ,கிரான் பிரதேச செயலம்,மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு  பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழ்ந்து வருவதாகவும்  மக்களுக்கிடையில் இன முரன்பாடு ஏற்பாடுத்தும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது என அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

spacer.png

 

https://athavannews.com/2022/1259684

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.