Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் : டொலர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவாரா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் : டொலர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவாரா ?

(லியோ நிரோஷ தர்ஷன்)

உத்தியோகப்பூர்வ விஜயத்தை  மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர்  வோங் யீ   சனிக்கிழமை (08) இலங்கை வருகின்றார். 

கிழக்கு ஆபிரிக்க  நாடுகளுக்கான விஜயத்தையடுத்து மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் முக்கிய பல சந்திப்புகளில் ஈடுப்படவுள்ளார்.  

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ,  பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்புகளின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விசேடமாக கவனம் செலுத்துவார் என்பதுடன் , கடன் தவனை சலுகை அல்லது மேலதிக கடன் திட்டங்களுக்கு  முக்கியத்துவம் அளித்து இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படுவார்கள் என்றும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கை  சர்வதேச கடன் சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீடம் கடன் நிவாரணத்திற்கான இணக்கப்பாட்டை நோக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஈடுப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறிப்பாக இலங்கைக்கு வெளிநாட்டுக் கடன் வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக சீனா உள்ளது. அந்த கடன் தொகையானது மொத்தக் கடனில் 10 வீதத்திற்கும்  அதிகமானதாகவே காணப்படுகின்றது. 

பெரும்பாலான கடன்கள் வர்த்தக அடிப்படையில் சர்வதேச சந்தையில் இருந்து பெறப்பட்டவையாகும். இதுவே நெருக்கடி தீவிரமடையவும் காரணம்.

அந்நிய செலாவணி கால நிதியளிப்பு வசதி  ஊடாக 2018 ஆம் ஆண்டில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது. 

மேலும் 2020  ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றுள்ளது.  

அதே போன்று  ஏற்பட கூடிய பொருட்களின் தட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்துவதற்காக சீன மக்கள் வங்கியிடமிருந்த  1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீன நாணயத்தை வழங்க பெய்ஜிங் விருப்பம் தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் தரம் குறித்த பிரச்சினையை  அடிப்படையாக கொண்டு 20 ஆயிரம் மெட்ரிக் டொன் சீன  உரத்தை அண்மையில்  இலங்கை நிராகரித்தது. இதனால் இலங்கை – சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் பாரம்பரியமான இருதரப்பு நட்புறவு பாதிப்படைந்து விட கூடாது என்ற உறுதிப்பாட்டில் இரு தரப்பினரும் தற்போது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

எனவே தான் சீன வெளிவிவகார அமைச்சரின்  வருகைக்கு முன்னதாக  உரப் பிரச்சினைக்கு  பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சீன நிறுவனம் புதிய  உரத்தை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இலங்கைக்கு உதவ சீன வெளிவிவகார அமைச்சர் மேலதிக நிதியை வழங்குவரா அல்லது கடன் தவனைகளுக்கு நிவாரணம் அளிப்பாரா என்பது குறித்து உறுதிப்பட குறிப்பிட இயலாது. 

ஆனால் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்கக்கூடும் என்பதே கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளின் கணிப்பாடுகின்றது.  

மறுப்புறம் சீனாவின் மிக முக்கிய முதலீடுகளில்  ஒன்றான துறைமுக நகரின் புதிய முதலீடுகள் ஊடாக இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த வெளிவிவகார அமைச்சர் வோங் யீ நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏனெனில் சில முன்னணி சீன நிதி நிறுவனங்கள் துறைமுக நகரத்தில்  முதலீடு செய்ய  ஆர்வத்துடன் உள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹோன  அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/120335

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இலங்கை  சர்வதேச கடன் சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீடம் கடன் நிவாரணத்திற்கான இணக்கப்பாட்டை நோக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஈடுப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

 

7 hours ago, கிருபன் said:

எவ்வாறாயினும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இலங்கைக்கு உதவ சீன வெளிவிவகார அமைச்சர் மேலதிக நிதியை வழங்குவரா அல்லது கடன் தவனைகளுக்கு நிவாரணம் அளிப்பாரா என்பது குறித்து உறுதிப்பட குறிப்பிட இயலாது.

இவரும் தவிச்ச முயலடிக்க சும்மா சும்மா  ஓடி வாறார். இப்படியே வாழ்க்கை பூராவும் கேட்க கேட்க கடன் கொடுக்க சீனா ஒன்றும் அட்ச்சய பாத்திரம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வரும் சீன வெளிவிவகார அமைச்சரின் இலக்கு என்ன?

spacer.png

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ளார்.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65ஆண்டுகளாகின்றன.

அதனை முன்னிட்டு ஏற்பாடாகியுள்ள நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே அவர் வருகை தருகின்றார் என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்திருக்கின்றது.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இலங்கைக்கு வருவது இது முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் வருகை தந்திருக்கின்றார். சந்திப்புக்களை நடத்தியிருக்கின்றார்.

குறிப்பாக, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக இப்போது வருகின்றார்.

இதற்கு முன்னதாக, 2020 ஜனவரியில் வருகை தந்திருந்தார். பின்னர் கடந்த ஆண்டு ஜுனில் வருகை தந்திருந்தார். இப்போது ஆண்டின் முதல் மாதத்திலேயே வருகை தருகின்றார்.

இதற்கிடையில் சீனாவின்  கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரான யாங் யீச்சியும், 2020இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பின்னர், சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் 2021 மே மாதம், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயங்கள் அனைத்துமே சீன, இலங்கை இருதரப்பு உறவுகள் என்பதற்கு அப்பால் சீனாவின் நலன்களை மையப்படுத்தியவை என்பது தான் மிகவும் முக்கியமான விடயமாகும்.

ஏற்கனவே, சீனா இலங்கையில் ஆழமாக கால்பதித்துள்ள நிலையில் அண்மையில் ஏற்பட்ட ‘சீன உரம்’ குறித்த முரண்பாடுகளால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரசல்கள் இல்லாமலில்லை.

இந்த நிலையில் தான் இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் ஆண்டு நிறைவொன்றை கொண்டாடுவதற்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சரே நேரில் வருகின்றார்.

இதுவெறுமனே கொண்டாட்டத்திற்கான வருகை அல்ல. அதனையும் தாண்டி சில விடயங்கள் உள்ளன. குறிப்பாக, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் அண்மையில் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதில், அவர் மன்னார் ஊடாக இராமர் அணையை அண்மித்துள்ள மணற்திட்டு வரையில் சென்றமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பருத்தித்துறைக்குச் சென்றார். கௌதாரி முனைக்குச் சென்றார். அதற்கான காரணங்கள் வெளியாகவில்லை.

உண்மையிலேயே, சீனா வடக்கில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் மற்றும் நகரை அபிவிருத்தி செய்தல், கௌதாரிமுனையில் காற்றாலை மின்சக்தி திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றில் கரிசனை கொண்டிருக்கின்றது. அதற்கான சமிக்ஞைகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை,  கொழும்பிலும் யுகதநவி மின்திட்டம் குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் தரப்பின் மூன்று அமைச்சர்கள் உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

நீதிமன்றம் அந்த உடன்பாட்டை சவாலுக்கு உட்படுத்தி அமெரிக்கா உடன்படிக்கையை கைவிட்டால் அதனைப் பெற்றுக்கொள்வதில் சீனா ஆர்வத்துடன் இருக்கின்றது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன, யுகதநவி மின்திட்டத்தில் சீனா ஆர்வமாக இருக்கின்றது என்ற விடயத்தினை பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே, சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயம் வெறுமனே இராஜதந்திர ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பதற்கு அப்பால் இலங்கையில் மேலும் அழுத்தமாக தமது கால்களை பதிப்பதாகும்.

குறிப்பாக வடக்கில் தமது கால்களை அகலமாக வைத்துக்கொள்வதாகும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது.

எவ்வாறாயினும், சீன வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு முன்னதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் 45 விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பாக, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி திட்டத்தை விட ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீண்செலவுகள் எனவும், சீனா இலங்கையை பாரிய கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் நீக்கப்படும் என்றும் இதன்போது கடந்த 15 வருட காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீண்டும் ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என்றும் இதன் போது ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு  சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் செலன்திவா நிறுவனம் ஊடாக ஏதேனுமொரு சொத்தை கையகப்படுத்தினாலும் அது ஆரம்பத்திலிருந்தே இரத்தாகும் என்பதனை நினைவிற்கொள்ளுமாறு குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, சீனா, ஆழமாக கால்பதிக்க விரும்பினாலும், அதற்கு தற்போது தென்னிலங்கை அரசியல் தரப்பிலிருந்தே பகிரங்கமாக எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இந்தப் பின்னணியில் தற்போதைய அரசாங்கம் சீனாவின் கைகளை மேலும் இறுகப் பற்றுமானால், அது ‘கடன்பொறிக்குள்’ சிக்குவதையும், தென்னிலங்கை மக்களின் ‘எழுச்சிக்கு’ வித்திடுவதையும் தவிர்க்க முடியாது போகும்.

அவ்விதமான நிலைமையானது, அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கைக்கும் ‘சிவப்பு’ சமிக்ஞை தான்.

-யே.பெனிற்லஸ்-

 

https://athavannews.com/2022/1260488

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.