Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடும்பிமலை படை நடவடிக்கையினால் சிறிலங்காப் படையினருக்கு வெடிபொருள் பற்றாக்குறை: "சண்டே ரைம்ஸ்"

Featured Replies

குடும்பிமலை படை நடவடிக்கையினால் சிறிலங்காப் படையினருக்கு வெடிபொருள் பற்றாக்குறை: "சண்டே ரைம்ஸ்"

மட்டக்களப்பு குடும்பிமலை மீதான படை நடவடிக்கையினால் சிறிலங்காப் படையினருக்கு வெடிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வு நிலவரப் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் எழுதிய முக்கிய பகுதிகள்:

கடந்த வியாழக்கிழமை அரசினால் தேசிய மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட குடும்பிமலை படை நடவடிக்கைக்கான கொண்டாட்டங்களில் அதிகளவில் சிங்கள மக்கள் ஆர்வம் கொள்ளவில்லை. சிலரே அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், இல்லங்கள், வாகனங்களில் சிங்கக்கொடியை பறக்க விட்டிருந்தனர்.

அரசின் விளம்பரங்கள், செலவுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மக்களிடம் எழுச்சியை உண்டு பண்ணவில்லை. விடுதலைப் புலிகளின் ஆறு கெரில்லாக் குழுக்கள் நகருக்குள் ஊடுருவி இருப்பதாகவும் இந்த விழாவில் அவர்கள் முக்கிய பிரமுகர்கள் அல்லது முக்கிய இலக்குகளை தாக்கலாம் எனவும் சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினர் எச்சரிந்திருந்ததும் பாதுகாப்புத் தரப்பை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது.

மேல் மாகாணத்தின் முழுப் பாதுகாப்பு பெறுப்பும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஊடகங்களுடனான உயர் இராணுவ அதிகாரிகளின் தொடர்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் எந்தவித குழப்பங்களும் வரக்கூடாது என்பதே அரசின் நோக்கமாக இருந்ததாகவும் அதற்கு அது தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இருந்தாகவும் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு நகருக்குள் ஒரு மில்லியன் மக்கள் வந்து செல்கின்றார்கள், 300,000 வாகனங்களும் தினமும் வந்து செல்கின்றன. இதில் பெரும்பாலானவை களனி பாலத்தினூடாக பயணிக்கின்றன. 10,000 தொடக்கம் 15,000 தொலை தூர மற்றும் குறுந்தூர பேரூந்துகளும் வந்து செல்கின்றன. எனவே எல்லாவற்றையும் சோதனையிடுவது சாத்தியமற்றது.

எனவே முக்கியமான இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகளை தமது மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இதில் பாதுகாப்பு நிலைகள், கொழும்பு துறைமுகம், கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம், கொலன்னாவ, முத்துராஜவெல எண்ணெய்க் களஞ்சியங்கள், களனி திஸ்ஸ மின்சக்தி நிலையம், தொடரூந்து நிலையம் என்பன அடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் படையினரின் வலு அதிகரிக்கப்பட்டதுடன் தொடர்ச்சியான தேடுதல்களும் நடத்தப்படுகின்றன. இது நகரம் முற்றுகைக்குள் உள்ளது போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவை வர்த்தகத்திற்கும், தொழில் துறைக்கும் நல்ல செய்தியாக இருக்கப்போவதில்லை.

உயர்ந்த கட்டடங்களில் உள்ள நட்சத்திர அந்தஸ்த்து உள்ள ஆடம்பர விடுதிகளில் இரவில் வெளிச்சங்களை அணைக்க வேண்டும் என்ற பணிப்ரைகள் விடுக்கப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அச்சத்தினால் இது உருவாகியது. விடுதிகளின் ஜன்னல்கள் முடப்பட வேண்டும் என்பதுடன் அதன் மறைப்புக்களும் போடப்பட வேண்டும் எனவும் விருந்தினருக்கு உத்தரவுகள் இடப்பட்டுள்ளன. விடுதி அறைகளின் களிப்பறைகளில் மெழுகு வர்த்திகளும் தீப்பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன எனவே அவற்றை பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு நடைமுறைகள் சில காலம் தொடரப்போகின்றன என்பதை கூறத்தேவையில்லை. ஆனால் முதலீட்டாளர்கள் இந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் எவ்வாறு மில்லியன் டொலர் பணத்தை முதலீடு செய்ய முன்வருவார்கள் என்பதை கற்பனை செய்வது கடினமானது.

இது கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள நிலைமை. கிழக்கை எடுத்தால், கிழக்கில் இருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றியுள்ளதாக அரசு அறிவித்த பின்னர் நிகழ்ந்த பாதுகாப்புச் சபை கூட்டத்தில். கிழக்கில் 50 விடுதலைப்புலிகள் ஊடுருவியிருப்பதாக ஒரு புலனாய்வுத் தகவலும், 200 பேர் ஊடுருவியிருப்பதாக மற்றுமொரு புலனாய்வு தகவலும் தெரிவித்திருந்தன. எனினும் விடுதலைப்புலிகளின் எண்ணிக்ககைகள் இதனை விட அதிகம் என வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது தவறானது என்பதற்கான முதலாவது ஆதாரம் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்துள்ளது. அன்று கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தா

  • கருத்துக்கள உறவுகள்

Buy Now.. Pay Later.. என்ற அடிப்படையில் கொடுப்பதற்குத்தானே பல நாடுகள் முண்டியடிக்கின்றன. அதன்பின்னர் ஏன் பற்றாக்குறை என்று மகிந்த கவலைப்படப்போகின்றார். கடைசியில் விலைவாசி ஏறி சிங்கள மக்கள் அரைப்பட்டினி, காற்பட்டினி என்று இருக்கும்போது கிளிநொச்சியைப் பிடித்தால் பட்டினியைப் போக்கலாம் என்று பசியைப் போக்க ஏதாவது "போக்குக்" காட்டுவார்.

பிறகென்ன ஹிட்லர் இரும்பு சட்டங்களையும், பெரிய மர சட்டங்களையும் விமானமூலம் கொண்டுவந்து வீசியது போல வீச வேண்டியதுதானே...!

முந்தி பீப்பாய்களும், மலக்குண்டுகளும் வீசிய அனுபவம் இருக்குத்தானே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.