Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்டங்களை நடத்துவதன் மூலம் தீர்வினை பெற்று விடமுடியாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

போராட்டங்களை நடத்துவதன் மூலம் தீர்வினை பெற்று விடமுடியாது

போராட்டங்களை நடத்துவதன் மூலம் தீர்வினை பெற்று விடமுடியாது

 

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. காணாமலாக்கப்பட்டோர் தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்டோர் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் எமது நிகழ்வு நடக்கும் இடத்திற்கு முன்பும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்றைய தினம் நான் முல்லைத்தீவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போதும் நான் கலந்துகொண்ட நிகழ்வு முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்களை நான் சந்திக்க அழைத்தேன் ஆனால் அவர்கள் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்கள்.

எனவே அதிலிருந்து ஒன்றை நான் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர்கள் போராட்டம் செய்யவே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு பிரச்சனைக்குரிய தீர்வு தேவையில்லை. அவர்களுக்கு போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்காது.

கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன தான் கிடைத்தது. போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இயக்கங்களில் இருந்தவர்களின் உயிரை மீட்டுத் தருமாறு கூறினால் அதை பெற்றுக் கொடுக்க முடியாது தானே? அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த காணாமலாக்கப்பட்டோருக்கான பிரச்சினைக்கு ஒரு தீர்வு வழங்க வேண்டும். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

ஆனால் நான் ஒன்றை கூறிவைக்க விரும்புகின்றேன் நீதி அமைச்சர் என்ற ரீதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அது அரசுடன் பேசித்தான் அதற்குரிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டங்களை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது

போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை அதனை மதிக்கின்றேன் அதனை தடுக்க மாட்டேன் ஆனால் போராட்டங்களை நடத்தி எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=156840

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த வடமாகாண ஆளுநர்!

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக கூடிய
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்
missing-pers-gover-300x139.jpg
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், உறவுகளை திருப்பித்தா, நடமாடும் செயலமர்வில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தை கையில் எடுக்காதே
போன்ற பல கோஷங்களை எழுப்பினார்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் நிகழ்வு மண்டபத்திற்குள் செல்ல முற்படுகையில் பொலிசார் தடுத்து நிறுத்தியதுடன் அங்கு தள்ளு முள்ளு நிலை ஏற்பட்டதுடன் குழப்பமான நிலை ஏற்பட்டது.
காணாமல்போனோரின் உறவுகள் மத்திய கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா போராட்டத்தில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை தன்னிடம் தருமாறு ஆளுநர் கூறிய போது அதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் பல முறை நாங்கள் விபரங்களைக் கொடுத்துள்ளோம்.இதுவரை எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஆளுநர் அங்கிருந்து விலகிச் சென்றார்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்
தொடர்ந்தும் அங்கு கூடியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/163326

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.