Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டம்

spacer.png

 

கடந்த வியாழக்கிழமை காணாமல்போயிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரும் இன்று வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர்.இந்நிலையில் வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை வீதிக்கு குறுக்காக மீன்பிடி படகுகள், மரக்குற்றிகள் என்பன போடப்பட்டு வீதி முற்றாக மறுக்கப்பட்டு போராட்டம் இடம்பெறுகின்றது.

எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா’ – ‘உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து’ – ‘இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா’ – ‘வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்’ – ‘எமது கடல் எமக்கு வேண்டும்’ – ‘கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார்’ – ‘மீனவர்களை கொல்லாதே’ போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக மீனவர்கள் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இப்போராட்டத்தில் போராடும் மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.(15)

spacer.png

spacer.png

spacer.png

http://www.samakalam.com/மருதங்கேணி-பிரதேச-செயலகத/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி மீனவர்களும் போராட்டத்தில்!

 

 

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள வடமராட்சி மீனவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம் – பலாலி, வலளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் குறித்த போராட்டத்தால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://athavannews.com/2022/1264783

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.