Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்வுரிமைக்கே எமது போராட்டம் தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல! மீனவர் சமூகம் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வுரிமைக்கே எமது போராட்டம் தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல! மீனவர் சமூகம் அறிக்கை

February 5, 2022
 
spacer.png
 

“எமது போராட்டம் எமது வாழ்வுரிமையை பாது காப்பதற்கே. இது தமிழக உறவுகளுக்கு எதிரானதல்ல” என்று கடந்த ஐந்து நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம் நடத்திய பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர் சமுதாய அமைப்பு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது. இதன்போது அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர்கள், அதில் தெரிவித்தவை வருமாறு,

“வட பகுதி கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இந்திய படகுகளால் கடல் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. எமது தொழில் வளங்களும் அழித்தும் சேதமாக் கப்பட்டும் வருவது தொடர்கதையாக நீடிக்கிறது. இந்தக் கையறு நிலையில்தான் மீனவ சமுதாயம் தன்னை வருத்தி நேற்றுடன 5 நாட்களாக தொழில் மறிப்பு மற்றும் தொடர் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தோம்.

கடற்றொழிலுக்கு பொறுப்பான அமைச்சராக வட பகுதியை சேர்ந்த தமிழர் ஒருவர் பதவி வகிக்கும்நிலையில்தான் இந்தத் துயரம் நடந்தேறி வருகிறது. அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வடபகுதி மீனவர் சமுதாயம் இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு கோரி வந்துள்ளோம். நாம் கோருவது இலங்கைத்தீவின் வடக்கு கடற்பரப்பில் எல்லை மீறி நுழையும் இந்திய படகுகளை நிரந்தரமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. இந்தக் கோரிக்கையானது இலங்கையின் கடற்பரப்பின் மீதான இறையாண்மையை கடற்படை கட்டிக்காக்க வேண்டும் என்பதுடன், இதன் மூலம் வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரத்திற்கு தீர்வையே வலியுறுத்தி நிற்கின்றது. எமது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் உத்தரவாதத்தை தர முடியாத நிலையில் அமைச்சரால் எமது துயரத்துக்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, இந்த விடயத்துக்குப் பொறுப்பானவர் என்ற வகையில் இந்தியப் படகுகளின் சட்டவிரோத உள்நுழைவை தடுக்க முடியாவிடில் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பது அர்த்தமில்லை என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலையில், எமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம். அரசியல் கட்சி பேதமின்றி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விடயத்தின் காத்திரத்தன்மையை உணர்ந்து நிரந்தர தீர்வைக்காணும் வகையில் செயல்படுமாறு வலியுறுத்துகின்றோம். கடல் நீரோடு நீராக கரைந்து காணாமலே போகும் மீன்களின் கண்ணீர் துளிகளாக வட பகுதி மீனவ சமுதாயத்தின் துயரமும் எமக்குள்ளாகவே கரைந்தோடும் அவலம் தொடர்கிறது. இந்தத் துயரத்திற்கு நிரந்தர தீர்வைப் பெற்று எமது வாழ்வாதாரத்தையும் உயிர்களையும் பாதுகாக்குமாறு விநயமாக வேண்டி நிற்கின்றோம் – என்றுள்ளது.
 

https://www.ilakku.org/our-struggle-for-the-right-to-life-is-not-against-tamil-nadu-relations-fisherman-community-report/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.