Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவை தோற்கடிப்பதற்காக – இலங்கையை கட்டுப்படுத்துவதற்காக சீனா புதிய தந்திரோபாயத்தை பயன்படுத்தலாம்- கொள்கை ஆய்வுகுழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை தோற்கடிப்பதற்காக – இலங்கையை கட்டுப்படுத்துவதற்காக சீனா புதிய தந்திரோபாயத்தை பயன்படுத்தலாம்- கொள்கை ஆய்வுகுழு

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிற்கும் புதுடில்லிக்கும் இடையிலான இராஜதந்திர செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் இலங்கையை கட்டுப்படுத்துவதற்கு சீனா புதிய தந்திரோபாயத்தினை பயன்படுத்தலாம் என கொள்கை ஆய்வுக்குழு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது
basil-nirma-300x146.jpg
இலங்கையின் நிதியமைச்சர் அடுத்த சில நாட்களில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்,பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
மார்ச் 30 ம் திகதிஇடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வாரா என்பது குறித்து இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமாகஅறிவிக்கவில்லை என தெரிவித்துள்ள கொள்கை ஆய்வுக்குழு மார்ச் 18 முதல் 20 ம் திகதி வரை இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளது.
gl-jai-300x174.jpg
இந்தியாவிற்கான அடுத்தவிஜயத்தின்போது இலங்கையின் நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்திப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை என தெரிவித்துள்ள கொள்கை ஆய்வுக்குழு புதுடில்லிக்கான தங்கள் விஜயத்தின்போது இலங்கை வெளிவிவகார அமைச்சரும் இலங்கை நிதியமைச்சரும் பிரதமர் மோடியை சந்திக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.
கடன்களும் அதனுடன் தொடர்புபட்டஏனைய உதவிகளும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்ற போதிலும் குறுகிய காலத்திற்கு நிதிகளை பெறுவதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதே சிறந்தது எனகொழும்பு கருதுகின்றது என தெரிவித்துள்ள கொள்கை ஆய்வுக்குழு இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கான நான்கு தூண்கள் குறித்து ஆராய்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒத்துழைப்பின் முதலாவது தூண் அவசர உணவு மற்றும் மருந்து- இதற்காக ஜெய்சங்கர் இலங்கை நிதியமைச்சருடனான சமீபத்தைய மெய்நிகர் சந்திப்பின் பின்னர் ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை அறிவித்துள்ளார்,என தெரிவித்துள்ள கொள்கை ஆய்வு அமைப்பு இந்த கடனுதவி குறித்து ஆராயப்படுகின்றது இந்த உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக இலங்கையின் நிதியமைச்சர் இன்னுமொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவை தோற்கடிப்பதற்காக இலங்கையை கட்டுப்படுத்துவதற்காக சீனா புதிய தந்திரோபாயமொன்றை முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ள கொள்கை ஆய்வுகுழு கடன்களும் கடன்களை அடிப்படையாக கொண்ட தி;ட்டங்களும் நாட்டிற்கு உதவப்போவதில்லை என்ற போதிலும் இலங்கை இந்த விளையாட்டை தடையின்றி விளையாடும் என தெரிவித்துள்ளது.
china-embassy1.jpg
இலங்கை கடன்வாங்கிய அல்லது திணிக்கப்பட்டயோசனைகளின் அடிப்படையில் இல்லாமல் தனது நிலையான வளர்ச்சிக்கான சொந்த மூலோபாயத்தை வகுக்கவேண்டும் என தெரிவித்துள்ள கொள்கை ஆய்வுகுழு தோல்விகளின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களை இலங்கை உள்வாங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இயற்கை விவசாயத்திற்கு நாடளாவியதீதியில் மாறியது,கொரோனா பெருந்தொற்றின் போது ஏற்றுமதியை கட்டுப்படுத்தியது போன்றவற்றை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

https://thinakkural.lk/article/166194

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.