Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு - கிழக்கு காணி அபகரிப்பை உடன் நிறுத்து இல்லையேல் போராட்டம் தொடரும் - தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published by T. Saranya on 2022-02-24 15:28:30

 
 

(எம்.மனோசித்ரா)

வடக்கு மற்றும் கிழக்கில் மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் வனவள பாதுகாப்பு எனத் தெரிவித்து இடம்பெற்று வருகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம். 

எனினும் இதுவரையில் காணி அபகரிப்பு நிறுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதற்கட்டமாக ஆரம்பித்துள்ள போராட்டத்தினை வடக்கு, கிழக்கிலும் பாரியளவில் தொடர்வோம் என்று தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தனர்.

shan_news__2_.jpeg

எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில் ,

காணி அபகரிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே ஜனாதிபதிக்கு இரு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். எனினும் அதற்கு எவ்வித பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை. எழுத்து மூலமாகக் கோரியும் , அமைச்சர் சமல் ராஜபக்ஷவை இரு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசிய போதிலும் இந்த காணி அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே தான் இன்றைய தினம்  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

shan_news__13_.jpeg

செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில் ,

எமது பிரதேசங்களில் எமது இருப்பினை சிதைக்கும் வகையிலேயே காணி அபகரிப்புக்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். எமது மக்கள் அவர்களது நிலங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரும்பாடுபடுகின்றனர். இராணுவம் உள்ளிட்ட முப்படைகளினதும் முப்படைகளினதும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

நாட்டில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்தனர் என்ற இருப்பினை குழைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து , உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்துமாறு வலியுறுத்தி இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம் என்றார்.

shan_news__7_.jpeg

சி.வி.விக்கினேஷ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நானும் இதில் கலந்து கொண்டிருக்கின்றேன்.

shan_news__8_.jpeg

சிவஞானம் சிறிதரன்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்,

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலும், தொல்பொருள் என்ற போர்வையிலும், வனவள திணைக்களம் என்ற அடிப்படையிலும் தமிழர் நிலங்கள் பரவலாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. மகாவலி மற்றும் வனவள திணைக்களத்தின் ஊடாக முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இடம்பெறும் காணி அபகரிப்புக்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதே எமது போராட்டத்தின் நோக்கமாகும்.

shan_news__14_.jpeg

இரா.சாணக்கியன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிக்கையில்,

அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெற்ற சிங்கள குடியேற்றத்தினால் தற்போது கிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்ற நிலைமையை இழக்கும் தருவாயிலுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே மகாவலி அபிவிருத்தி, வனவள பாதுகாப்பு எனத் தெரிவித்து தொடர்ந்தும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது , பிரதேச செயலக பிரிவுகளுக்கு கீழுள்ள காணிகள் மகாவலி  அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்கப்பட்டது.

சுமார் 8 மாவட்டங்களிலுள்ள காணிகள், காணி திணைக்களத்திடமிருந்து மகாவலி அபிவிருத்தி திணைக்களத்திற்கு மாற்றியமைக்கப்படவுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த 22 ஆம் திகதி இதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த போதிலும், எமது எதிர்ப்புக்களின் காரணமாக அந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது. இந்நிலையிலேயே முதற்கட்ட நடவடிக்கையாக இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். இதற்கான தீர்வை ஜனாதிபதி உடனடியாக வழங்காவிட்டால் போராட்டம் வடக்கு, கிழக்கில் விஸ்தரிக்கப்படும் என்றார்.

மனோ கணேஷன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழ், சிங்கள, முஸ்லிம் நாடாகும். இந்நாட்டில் நாமும் பங்காளியாகவே இருக்கின்றோம். இது எமக்குரிய நாடாகும். போராடுவதெனில் இங்கு பாரியளவிலான மக்களை எம்மால் ஒன்று திரட்ட முடியும். எனினும் நாம் அவ்வாறு அராஜகம் செய்யாமல் ஜனநாயக போராட்டத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். பௌத்தம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

வடக்கு - கிழக்கு காணி அபகரிப்பை உடன் நிறுத்து இல்லையேல் போராட்டம் தொடரும் - தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.