Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் ஊடகவியலாளன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-07-27

அரசியல் விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் ஊடகவியலாளன்

மனித வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. ஆனால் போராட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டால்.....?

ஆயுதம் தாங்கிய போராளிகளினது மட்டுமல்ல, எழுது கோல் எடுத்த எழுத்தாளர்களின் ஊடகவியலாளர்களின் வாழ்க்கையும் உலகில் இன்று போராட்டம் என்றாகிவிட்டது. அதுவும் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் நிலையோ மிக மோசம்.

இருப்பு என்ற வாழ்வியலுக்குள் இருந்து இல்லாமை என்ற சூனியத்துக்குள் சாவுக்குள் எக்கணமும் வல்வந்தமாகத் தூக்கி வீசப்படலாம் என்ற பேராபத்து நிலைக்குள்தான் ஈழத் தமிழ் ஊடகவியலாளர்களின் அன்றாடப் பணி இன்று கட்ட விழ்கின்றது.

இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தாம் நேசிக்கும் ஊட கப் பணியை விட்டொழிந்தவர்கள் விட்டொளித்தவர்கள் பலர். ஆனால் உயிர் அச்சுறுத்தலைத் துச்சமாக மதித்துத் தமது சமூகக் கடமையை ஆற்றும் ஊடகவியலாளர்கள் இன்னும் பலர் நம் மத்தியிலே இருக்கின்றார்கள் என்பதே நிம்மதி தரும் விடயம்.

தங்களது உயிர் வாழ்க்கைக்கே அச்சுறுத்தல் பேராபத்து எழுந்துள்ள நிலையில், அதற்கு அஞ்சி ஓடாமல், அசட்டுத் துணிச்சலோடு, எதற்காக இத்தொழிலை இப்பணியை தமிழ் ஊடகவியலாளன் தொடரவேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கையானது. இந்த வினாவுக்கு விடைகாணும் தேடலில் புகுந்தால், தன்னைப் பெரிதும் அம்பலப்படுத்தாமல் வெளிப் படுத்தாமல் தனது இனத்தின் மீட்சிக்காக, சமூகப் பிரக்ஞை யோடு, ஒப்புயர்வற்ற சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஊடகப் பணியாளர்களின் பெருமை புரியும்.

ஆயுதங்களின் அராஜகங்கள் அரங்கேறும் இந்த அவலத் துக்கு மத்தியில் தன் எழுதுகோலின் மீதான சத்தியத்தோடு சக்தியோடு தன் பணியில் உறுதியாக இருக்கும் ஈழத் தமிழ் ஊடகவியலாளன் மெச்சப்படவேண்டியவன்; விஞ்சி மதிக் கப்பட வேண்டியவன்.

எழுத்தாளன் யாருக்காக எழுத வேண்டும்? ஏன் எழுத வேண் டும்? எதற்காக எழுத வேண்டும்? இந்த வினாக்களுக்கான விடை புரிந்ததால்தான் தெரிந்ததால்தான் ஈழத் தமிழ் எழுத் தாளன் இவ்வளவு பேராபத்துக்கு மத்தியிலும் தன் உயிரைப் பண யம் வைத்து சமூகத்தின் நேரிய பயணத்துக்கு வழிகாட்டுவது ஏன் என்பது புரியும்.

எழுத்து ஒரு சமூகக் கலை. ஊடகம், சமூக வாழ்வியல் போக்கை நெறிப்படுத்தும் ஒரு பேரியக்கம். உலகியல் போக்கின் மீது வலு வான தாக்கத்தை ஏற்படுத்தும் பலமான சக்தி அதற்கு இருக்கின்றது. சமூக மாற்றத்தின் உந்து சக்திக்கான ஊடகமாக ஊடகத்துறை விளங்குகிறது. மனித விழிப்புணர்வுக்கும், விடுதலைக் கும், சமூகப் பிரக்ஞை பற்றிய சுய எழுச்சிக்கும் அதுவே பாதை அமைத்துக் கொடுக்கக்கூடியது. அத்தகைய ஊடகத்துறையை சரியான செல்நெறியில் வழிப்படுத்துவதன் மூலம் சமூகப் பாதையை செப்பனிடும் பொறுப்பு எழுத்தாளனையே சேருகின்றது.

ஈழத் தமிழினம் இன்று வரலாற்றுத் திருப்பு முனையில் நிற் கிறது. விடுதலை மீட்சியா அல்லது அடிமைத்தளையின் தொடர்ச் சியா என்பதைத் தீர்மானிக்கும் வாழ்வா, சாவா போராட்டத்தில் அது இன்று தகிக்கின்றது.

இவ்வாறு வீறுகொண்டெழுந்திருக்கும் தன் சமூகத்தின் இனத்தின் இக்கட்டான சூழ்நிலையையும், அந்த இனத்தின் வாழ்நிலைப் பிரச்சினைகளையும், தனது மக்களின் அவலத்தை யும், இன்பத்தையும், துன்பத்தையும், நெருக்கடிகளையும், நோவு களையும், இடர்களையும், இழப்புக்களையும் அந்த இனத்தின் எழுத்தாளன் உதாசீனம் செய்யமுடியாது. வரலாற்றுப் போக்கி லிருந்து விலகி ஓடமுடியாது. தன் கடப் பாட்டிலிருந்து அவன் ஒதுங்கிவிடவோ, ஒளிந்துகொள்ளவோ முடியாது.

அபத்தமான தளைகளிலும் கட்டுகளிலும் இருந்து தனது மக்களை இனத்தை சமூகத்தை விடுவிப்பதற்காக அவன் எழுதவேண்டும். உண்மையை, யதார்த்தத்தை வெளிக்கொணர அவன் எழுத்துப் புரட்சி புரியவேண்டும்.

இன விடுதலைக்காக சுதந்திர வாழ்வியக்கத்துக்காக நீதியான புற நிலையை ஏற்படுத்துவதற்காக சமத்துவத்தையும், சமரசத்தையும் நிலை நிறுத்துவதற்காக அவன் தன் கடன் பணி செய்ய வேண்டும்.

சமூகத்தின் வாழ்நிலையை ஊடுருவி, சக மக்களை சிந்திக் கத் தூண்டி, சரியான வழியில் செயற்பட வைத்து, விழிப்புணர் வுக்கு வித்தூன்றி, சமூக விடுதலைக்கு அவன் தளராது, சளைக் காது உழைக்க வேண்டும்.

எழுத்துகளின் சக்தி அபாரமானது. வாசகனின் அடி மன தில் கருத்துக்களை ஆழமாக விதைத்து, சிந்தனையைக் கிளரச் செய்து, எண்ணத்தை விரிவுபடுத்தி, உத்வேகத்தை ஊட்டி, மக்கள் தம் இலக்குகளை அடையச் செய்யும் ஆற்றல் எழுத்து களுக்கு உண்டு.

தீக்குச்சியைக் கொண்டு விளக்கும் ஏற்றலாம். வீட்டையும் எரிக்கலாம். அது போன்றதே ஊடகவியலாளர்களின் எழுத்தும். சமூகத்தை எழுச்சிபெற வைக்கவும், வீழ்ச்சியுற வைக்கவும் அதனால் முடியும்.

சமூகப் பற்றுணர்வுள்ள எழுத்தாளன் சமூக விடுதலையை இலக்காகக் கொண்டு விளக்கேற்றுகின்றான்.

சமூகப் பொறுப்புணர்வற்ற எழுத்தாளன் சமூக வீட்டைச் சீரழித்து எரிக்கிறான்.

ஈழத் தமிழ் எழுத்தாளர்களோ தமது எழுத்துக் கலையை சக்தியை தமது மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வைத் தூண்டி இனவிடுதலைக்கு வழிகாட்ட சாதுரியமாகப் பயன் படுத்த விழைகின்றனர்.

சமூகப் பிரக்ஞையுடன், சமூக நல்வாழ்வுக்காக இன விடுதலைக்காக எழுதுவதால் தனது இருப்பிற்கும் மற்றவர்களது வாழ்விற்கும் அர்த்தத்தைத் தேடிக்கொடுக்க முனைகிறான் ஈழத் தமிழ் ஊடகவியலாளன்.

இவ்வாறு தனது சமூகத்தின் இனத்தின் எழுச்சிக்கு ஊக்கியாக அவன் இருப்பதால் அந்த எழுச்சியை அடக்கி, இனத்தை அடிமைப்படுத்த விளையும் தரப்புகளின் அதிகார ஒடுக்கு முறைக்கு நேரடியாக ஆளாகும் ஆபத்து அவனைச் சூழ்கிறது. அதனைத் துச்சமாக மதித்து இனப்பணியாற்றும் எழுதுகோல் போராளி மதிக்கப்பட வேண்டும். வரலாற்றுத் திருப்புமுனையிலே தன்மீது சுமத்தப்பட்ட சரித்திரக்கட மையை நிறைவுசெய்வதற்காகத் தயங்காது செயலாற்றும் அவனது சமூகப் பொறுப்புணர்வு விதந்து மதிக்கப்படவேண் டும்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.