Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாடுகளுக்கு `கோள்' சொல்லும் தேவை ரணிலுக்கு இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்கு `கோள்' சொல்லும் தேவை ரணிலுக்கு இல்லை

[27 - July - 2007]

* அநுராதபுரம் மாவட்ட ஐ.தே.க. எம்.பி.- பி.ஹரிசன் பேட்டி

- ரொஷான் நாகலிங்கம்-

நாட்டின் இன்றைய நெருக்கடி மிக்க அவல நிலைக்கு அரசின் நிர்வாகம் சீரற்றிருப்பதே காரணம். இதனை மறைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மீது சேறுபூசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களை சுதந்திரமாக வாழ வைப்பதே எமது கட்சியின் நோக்கமென ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

இந்த அவல நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு இன்று போராட்டத்தை முன்னெடுக்கும் இத் தருணத்தில் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

`தினக்குரல்'க்கு அவர் அளித்த பேட்டி வருமாறு;

கேள்வி : கிழக்கு முழுமையாக கைப்பற்றப்பட்டமை தொடர்பான வெற்றியை கொண்டாடும் நிகழ்வை ஐ.தே.க. பகிஷ்கரித்ததேன்?

பதில் : கிழக்கின் வெற்றியின் பெருமை இராணுவம் மற்றும் பொலிஸாருக்கே சேரும். இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கல்ல. இவ்வெற்றி குறித்த நன்றியை இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரிவிக்கின்றேன்.

இன்று பொருட்களின் விலை வானளவ உயர்ந்துள்ளது. நாட்டின் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாகியுள்ளனர். இவர்கள் அநாதரவாக அவலங்களுடன் கூடாரங்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் உதவியும் நிறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உட்பட இதர பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. பஸ், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை மூடி மறைப்பதற்கே இந்த நிகழ்வை நடத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு செலவளித்த பணத்தை யுத்தத்தில் இறந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு உதவியிருக்கலாம் மற்றும் ஊனமுற்ற படையினரின் விபரங்களைச் சேகரித்து உதவியிருப்பதன் மூலம், அவர்களுக்கு தைரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதேபோல் வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவித்து பதவி உயர்வு கொடுத்து சம்பளத்தை உயர்த்துவதன் மூலம் அவர்கள் துணிச்சலுடன் செயற்படுவதற்கு வழிவகுத்திருக்கலாம். அதைவிட்டு விட்டு 700, 800 இராணுவ வீரர்களை வரவளைத்து ஜனாதிபதிக்கு சலூட் அடித்ததுதான் மிச்சம். இதனை தமது அரசியல் லாபம் கருதியே செய்தனர்.

கேள்வி : சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுடன் ஐ.தே.க. உடன்படிக்கை செய்த நோக்கம் என்ன?

பதில் : இன்று நாட்டிலுள்ள ஊழல், மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கே நாம் அவர்களுடன் உடன்பாட்டை செய்துள்ளோம். மேலும் `ராஜபக்ஷ சகோதரர் நிறுவனம்' செய்த மோசடிகள் அனைத்தும் இன்று வெளிப்பட்டுள்ளது. இது எங்களை விட மங்களசமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகியோருக்கு நன்கு தெரியும். இதனை அவர்கள் பாராளுமன்றத்தில் கூட தெரிவித்துள்ளனர். இவை குறித்து ஒன்றும் நடைபெறவில்லை

இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு நாம் கூட்டுச் சேர்ந்துள்ளோம். மங்கள குழுவினருடன் மட்டுமல்லாது ஏனைய அனைத்து தரப்பினருடனும் கூட்டுச் சேரவுள்ளோம். நாம் எல்லோரும் கூட்டுச் சேர்ந்து ஒரு முன்னணியாக இந்த அரசாங்கத்தை கலைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கவுள்ளோம். இதன் ஆரம்பமே மங்கள குழுவினருடனான உடன்படிக்கையாகும்.

கேள்வி : உங்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் குறித்து கட்சி என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

பதில் : இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

கேள்வி : அரசு பலமுடன் இருப்பதாகவும் தங்களிடமிருந்து இருவர் மட்டும் சென்ற நிலையில் ஐ.தே.கட்சியிலிருந்து பெருமளவானோர் வந்துள்ளதாக அரசு தரப்பு அமைச்சர்கள் தெரிவிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்கள் அமைச்சர் பதவிகளுக்காகவும் அதன் சலுகைகளுக்காகவுமே சென்றனர். ஆனால் எம்முடன் கைகோர்ப்பவர்கள் அமைச்சர் பதவிகளை துறந்து நாட்டின் நலன்கருதியே இணைகின்றனர்.

நாம் அமைச்சர் பதவிக்கோ அல்லது அதன் சலுகைகளை பெறுவதற்கோ அரசைக் கலைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. மாறாக நாட்டை, ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களிலிருந்து மீட்டெடுப்பதற்கே முயற்சிகின்றோம். எனவே மக்கள் அனைவரும் எம்முடன் வந்து ஒன்று சேருமாறு கோருகின்றேன்.

கேள்வி : இன்று பொருட்களின் விலைகள் உயர்வு குறித்து....

பதில் : பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் அரசின் சீரான நிர்வாகமின்மையே. நூற்றுக் கணக்கான அமைச்சர்கள் இந்த அரசிலிருந்தும் பொருட்களின் விலை உயர்வே மிகுதியாகவுள்ளது. ஆனால் அமைச்சர்களின் சம்பளங்கள் சலுகைகள் குறைவடையவில்லை. இதனால் சாதாரண பொதுமக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலை உயர்வு, யுத்தத்தினால் ஏற்படவில்லை. ஜே.ஆர்., பிரேமதாஸா மற்றும் சந்திரிகா ஆகியோரது காலத்திலும் யுத்தம் நடந்தது. ஆனால் விலையுயர்வு இவ்வாறிருந்ததில்லை. அரசின் துஷ்பிரயோகம் மற்றும் வீண்விரயத்தினாலேயே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

கேள்வி : தேர்தல் தோல்விகளுக்கு காரணம் கொள்கைகளை தலைவர் அடிக்கடி மாற்றுவதாக சொல்லப்படுகின்றதே?

பதில் : புலிகளுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்தால் வடக்கு, கிழக்கு, தமிழ் மக்கள் வாக்களிக்க இடமளிக்காத அதேநேரம் ரணில் - புலி கூட்டென்றும் நாட்டை புலிகளிடம் பிரித்து கொடுக்கப் போகின்றார் என்றும் நாட்டின் ஏனைய பகுதியிலும் பிரசாரம் செய்யப்பட்டது. இந்தப் பிரசாரத்தில் ஹெல உறுமயவும் ஈடுபட்டது.

இந்த இரகசிய ஒப்பந்தம் குறித்து ஷ்ரீபதி பாராளுமன்றத்தில் விசாரணைக்கு கோரியுள்ளார். நீதியான முறையில் தேர்தல் நடந்திருந்தால் நாம் வெற்றியடைந்திருப்போம்.

கேள்வி: ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுக்கு சென்று சேறு பூசுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து?

பதில்: இங்கு நடப்பது பற்றி வெளிநாட்டுக்கு போய் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க சொல்ல வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டு தூதுவராலயங்கள் இங்கு உள்ளன. அவர்கள் இங்கு என்ன நடக்கின்றதென்பதை தமது நாடுகளுக்கு தெரிவிப்பர். ரணில் விக்கிரமசிங்க சொல்ல வேண்டிய தேவையே ஏற்படாது.

நாட்டின் தலைவர் முதல் அரசில் உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஐ.தே.க.வுக்கும் சேறு பூசுவதிலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணமே கிடையாது. ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐ.தே.க. தலைவராகவுமே இருக்கின்றார். அவர் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுகின்றார். அரசாங்கத்தில் உள்ளவர்கள் தமது பொறுப்புகளை தவறவிட்டு அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது இதனைத் திருத்திக் கொள்ள முற்படாமல் எதிர்த்தரப்பினர் மீது சேறு பூசுவதிலேயே காலத்தை செலவிடுகின்றனர். ரணில் விக்கிரமசிங்க மீது ஏன் இவர்களுக்கு பயம்?

கேள்வி: தற்போது கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது?

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி மக்களை சுதந்திரமாக வாழ வைப்பதே எமது கட்சியின் நோக்கமாகும். இது குறித்து கிராம மட்டத்திலிருந்து இளைஞர் சங்கம், மகளிர் சங்கம் மற்றும் சங்கங்கள் ஊடாக எமது நோக்கத்தை தெளிவுபடுத்தி வருகின்றோம்.

எமது ஆட்சிக் காலத்தில் மக்கள் சுதந்திரமாக வடக்கு முதல் தெற்கு வரை எந்தவித பயமுமின்றி நடமாடினர். அப்போது ஆட்கடத்தல் கடத்தப்படவுமில்லை, கப்பம் கோரப்படவுமில்லை.

நாட்டை ஊழல் மோசடிகளில் இருந்து மீட்டெடுத்து மக்களை சுதந்திரமாக வாழ வைப்பதற்கு ஜே.வி.பி.யோடு மட்டுமல்ல ஏனைய அனைத்து தரப்பினருடனும் கைகோர்க்க தயாராகவுள்ளோம். எனவே, இந்த மீட்புக்கான போராட்டத்தில் அனைவரும் எம்முடன் கைகோர்க்கவேண்டும்.

கேள்வி: அநுராதபுர மாவட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.