Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரமழான் நோன்பு ஆரம்பிக்கவுள்ளதால் பேரீச்சம் பழத்துக்கான இறக்குமதி தடையை நீக்க வேண்டும் - முஜிபுர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரமழான் நோன்பு ஆரம்பிக்கவுள்ளதால் பேரீச்சம் பழத்துக்கான இறக்குமதி தடையை நீக்க வேண்டும் - முஜிபுர்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் இறக்குமதி செய்ய தடைவிதித்திருக்கும் பொருட்களில் பேரீச்சம் பழத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மாதம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவதால் பேரீச்சம் பழத்தின் தேவை அதிகரிக்கின்றது.

அதனால் பேரீச்சம் பழம் இறக்குமதிக்கான தடையை அரசாங்கம் நீக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டிருக்கும் டொலர் பிரச்சினை காரணமாக அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் 367 பொருட்களுக்கு தடைவிதித்து, அதற்கு அனுமதி பத்திரம் பெறவேண்டும் என அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

இந்த அனுமதி பத்திரத்தை அரசாங்கத்தின் வியாபாரிகளே பெற்றுக்கொள்வார்கள். இதனையே அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து செய்துவருகின்றது.

அரசாங்கத்துக்கு தேவையான வியாபாரிகளை வளர்ப்பதற்கு தேவையான முறையிலேயே அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து வருகின்றது.

காஸ் இல்லாமை காரணமாக காெழும்பு நகரில் சாதாரண ஹோட்டல்கள், தேநீர் கடைகள், சிறிய பனிஸ் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

மின் துண்டிப்பு இடம்பெறுவதால் சிறிய வியாபார நிலையங்களே அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசாங்கம் இறக்குமதி செய்யும் சில பொருட்களுக்கு தடைவிதித்து, அதற்கு அனுமதி பத்திரம் பெறவேண்டும் என தெரிவித்திருக்கின்றது.

அத்துடன் அரசாங்கம் இறக்குமதிசெய்ய தடைசெய்திருக்கும் பொருட்களில் பேரீச்சம் பழமும் இருக்கின்றது. அடுத்த மாதம் ஆரம்பத்தில் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுகின்றது. 

நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பேரீச்சம் பழம் தேவைப்படுகின்றது. ரமழான் நோன்பு ஆரம்பிக்கப்படுவது தெரிந்திருந்தும் பேரீச்சம் பழத்துக்கு தடைவிதித்திருப்பது, பேரீச்சம் பழ மாபியாவை ஏற்படுத்துவதற்காகும்.

அதனால் அரசாங்கம் இந்த பிழையான தீர்மானத்தை எடுக்கக்கூடாது. பேரீச்சம் பழத்துக்கு விதித்திருக்கும் இறக்குமதி தடையை நீக்கவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் நாட்டில் மின் துண்டிப்புக்கு காரணம் எமது அரசாங்க காலத்தில் தேசிய மின் உற்பத்திக்கு எந்த பங்களிப்பையும் செய்ய தவறியதால் ஆகும் என அரசாங்கம் தெரிவிக்கின்றது. மின் உற்பத்திக்கு 2 வேலைத்திட்டங்களை நாங்கள் அன்று ஆரம்பித்தோம். 

ஆனால் அரசாங்கம் அந்த வேலைத்திட்டங்களை இடைநிறுத்தியதன் விளைவே மின்சார பிரச்சினைக்கு காரணமாகும். என்றாலும் இன்று அரசாங்கத்தின்  பிழையான தீர்மானங்களால் ஏற்பட்ட விளைவுகளை கொவிட் தொற்று மீது சுமத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அத்துடன் இலங்கைக்கு டொலர் கொண்டுவரும் வழிகளை அரசாங்கம் அடைத்திருக்கின்றது. டொலர் கொண்டுவந்தால் அதனை ரூபாவுக்கு மாற்றவேண்டும் என அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தினால் மக்கள் நாட்டுக்கு டொலர் கொண்டுவருவதை நிறுத்திக்கொள்வா்கள் என்று நாங்கள் அன்று தெரிவித்தோம். 

அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் டொலரின் பெறுமதியை கடந்த 8 மாதங்களாக அரசாங்கம் குறைத்துவந்தது.

அதனால் நாட்டுக்கு வரவேண்டிய டொலர்கள் வரவில்லை. தற்போது டொலரை மிதக்க விட்டிருக்கின்றது. இந்த தீர்மானத்தை அன்று எடுத்திருந்தால் டொலர் பிரச்சினை இந்தளவு ஏற்பட்டிருக்காது என்றார்.

 

https://www.virakesari.lk/article/123973

 

டிஸ்கி: பழைய இரும்புக்கு பேரீச்சம்பழம் கொடுக்கக்கூட இலங்கையில் வழியில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

டிஸ்கி: பழைய இரும்புக்கு பேரீச்சம்பழம் கொடுக்கக்கூட இலங்கையில் வழியில்லையா? 

காத்தான்குடியில...  பேரீச்சம்பழம், நிறைய காய்ச்சிருக்குதே. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.