Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் ஒரே நம்பிக்கையாகியுள்ள இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஒரே நம்பிக்கையாகியுள்ள இந்தியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக இந்த ஒத்துழைப்புகளானது அரசாங்கத்தின் பேரில் வழங்கப்படுவதுடன் மேலும் பல திட்டங்கள் நேரடியாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. மறுப்புறம் சர்வதேச அரங்கிலும் பல்வேறு ஒத்துழைப்புகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருகின்றது. தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நம்பிக்கையாக இந்தியா உள்ளதாக குறிப்பிடலாம்.

FIf5-nfXoAIRh1N.jfif

ஊதாரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது. எக்ஸிம் வங்கி  ஊடான இந்த கடன் தொகையிலிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள முதலாவது எரிபொருள் தொகையும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்துடன் இந்திய எக்ஸிம் வங்கி 500 மில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தினை கைசாத்திட்டது.

FK-sQIQacAABZzb.jfif

அந்த ஒப்பந்தத்திற்கமைய குறித்த 500 மில்லியன் டொலரில் 75 வீதத்தை இந்தியாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் , 25 வீதத்தை மூன்றாவது தரப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த முடியும் என்றும் இந்திய எக்ஸிம் வங்கி நிபந்தனை விதித்துள்ளது. 

அதே போன்று அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள 500 மில்லியன் டொலர் கடன் மற்றும் 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள நிலையிலேயே , எரிபொருளுக்கான கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

DE2_5896.jpg

மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் , இது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு சென்றுள்ளார்.  

இதேபோன்று பல திட்டங்களை இந்தியா  உள்நாட்டில் நேரடியாக முன்னெடுத்து வருகின்றது. வடமாகாணத்திலுள்ள ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கும் செயற்திட்டம் முன்னெடுத்திருந்தது.

நட்பு ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் இப்பணி எதிர்வரும் நாட்களில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதியளித்துள்ளது.

மேலும் இலங்கையில் சூரிய சக்தி மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உதவி வழங்கியுள்ளது. அதற்கமைய இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்காக, இந்திய அரசாங்கமானது, இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் ஊடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான இரு தரப்பு கடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி வங்கிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இக்கடன் ஒப்பந்தம் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் முன்னிலையில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்துக்கு அமைய, சூரிய சக்தியிலான மின் உற்பத்தியை அதிகரித்து, தேசிய மின் கட்டமைப்புக்கு மீள்பிறப்பாக்கச் சக்திவளப் பங்களிப்பை அதிகரிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

EOf8i2psoTBU596vJ9OyC3wANGWyC0zN.jpg

அரச கட்டிடங்கள், சமய ஸ்தாபனங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் பங்களிப்பைப் பெற்று, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய திட்டமாகும். இதன் மூலம் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரச நிறுவனங்களில் மின்சாரத்துக்காக செலவாகும் அதிக தொகையைக் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

காணித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில், நீரில் மிதக்கும் சூரிய மின்சக்தி முறைமைகளை நிறுவுவதும் இதில் உள்ளடங்கும். இதன் முதற்கட்டமாக, பாராளுமன்றத்துக்குத் தேவையான மின்சாரத்தை, தியவன்னா ஓயாவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன் தேசிய மின் கட்டமைப்புக்கு பிரவேசிக்க முடியாதிருக்கும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு, மின்கலங்களின் மூலம் சூரிய மின் சக்தி களஞ்சிய வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பல திட்டங்களை இலங்கையில் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீனா உள்ளிட்ட பல நாடுகளிடம் இலங்கை ஒத்துழைப்புகளை கோரிய போதிலும் அவை சாத்தியப்பட வில்லை. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்தியாவிற்கு எதிரான போக்கை அரசாங்கம் பின்பற்றியது. 

ஆனால் கொவிட் உட்பட பல்வேறு காரணிகளினால் அந்திய செலாவணி வீழ்ச்சியடைந்து இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது இலங்கைக்கு இந்தியா பல்வேறு கட்டங்களில் உதிவகளை செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/124219

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இலங்கையை இந்தியா பறிச்சு தமிழரிட்டை கொடுத்திடும் என்று சிங்களம் பயப்பிடுதாம் என்று சிலபேர் வக்காலத்து வாங்கிச்சினம், இந்தியாவோ சிங்களத்தை காப்பாற்றுவதிலேயே தன் செல்வம் எல்லாவற்றையும் கரைக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.