Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விலைகள் மேலும் அதிகரிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் - நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on 2022-03-20 20:00:02

 
 

 

நேர்காணல் ரொபட் அன்டனி

 

 

உலகில் எங்குமே மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் சில விடயங்களில் முரண்பாடுகள் இருக்கும். கப்பல் மூழ்கி விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும். இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய  செலாவணி  அதிகரிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் பொருத்தமற்ற நிபந்தனைகளை அரசு நிராகரிக்கும் நான் ஜோதிடம் கூறமுடியாது.

 

 

 

 

 

ரூபாவின் பெறுமதியை மிதப்பதற்கு இடமளித்து இருக்கின்றோம்.  எனவே டொலர்  வருகை அதிகரிக்கும் என நம்புகிறோம். அத்துடன் டொலர் வருகைக்கு மேலும் பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதனூடாக   மக்கள்  வரிசையில் நிற்கும் பிரச்சினை பெரும்பாலும் நிறைவு பெற்றுவிடும். அதாவது சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கு முன்பாக வரிசை பிரச்சினை தீரும். ஆனால்   விலைகள் மேலும் அதிகரிக்கலாம். காரணம் உலக நிலைமைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.  எனினும் வரிசை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

 

நாடு தற்போது கடுமையான ‍பொருளாதார ‍நெருக்கடி நிலையை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை  நாடுவதற்கு தீர்மானம் எடுத்திருக்கின்றது.   அது தொடர்பாகவும்  நெருக்கடி நிலை குறித்தும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு  வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

 

 செவ்வியின்  விபரம் வருமாறு

 

கேள்வி கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்‍தை நாட மாட்டோம் என்று கூறி வந்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்திருக்கிறது.   இது எவ்வாறான தீர்மானம்?

 

 பதில் சர்வதேச நாணய நிதியத்துடன்  நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கின்றோம்.  பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை தீர்மானித்திருக்கிறது. தற்போதைய இந்த நெருக்கடி நிலை, உலக நெருக்கடி நிலை என்பவற்றை கருத்தில் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்.  உலகமே இன்று பல்வேறு பிரச்சினைகளினால் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது.  அமெரிக்காவில் இருக்கின்ற பிரச்சனைகள்,  இங்கிலாந்தில் இருக்கின்ற பிரச்சனைகள், ஆஸ்திரேலியாவில் எண்ணெய் விலை அதிகரிப்பு,  இதுபோன்று பல நெருக்கடிகள் காணப்படுகின்றன.  சீனாவில் தற்போது பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.  ரஷ்ய மற்றம் உக்ரேன் யுத்தம் காரணமாக பாரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.  ஐரோப்பிய நாடுகளிலும் விலைகள் அதிகரித்திருக்கின்றன.  எனவே இந்த நெருக்கடி நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம்    நிதி ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருப்பின் அதனை நாம் நிச்சயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது தீர்மானமாகும்.   அரசாங்கத்தினதும் மத்திய வங்கியினதும் நிலைப்பாடாக இது இருக்கின்றது.

 

கேள்வி சர்வதேச நாணய நிதியத்திடம் எவ்வாறான நீண்ட கால கடன் திட்டத்துக்கு நாம் செல்ல முடியும்? ஒரு டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கு எமக்கு இருக்கின்ற சந்தர்ப்பங்கள் என்ன?

 

 பதில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பையும் அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு எமது திட்டங்களையும் முன்வைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரவே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.  இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் எவ்வாறான  ஒரு நீண்ட கால கட்டத்திற்கு செல்வது என்பதை  நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை.    நாணய நிதியத்துடனான  தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பின்னர் எவ்வாறான திட்டத்திற்கு செல்வது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.  அந்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

 

 கேள்வி எப்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்?

 

 பதில் விரைவில் இந்த பேச்சுவார்த்தைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆரம்பிக்கப்படும்

 

கேள்வி சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் ஒரு உடனடியாக டொலர் கடனை பெற்றுக்கொள்ள முடியுமா?

 

  பதில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் மட்டுமல்ல பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நாங்கள் ஆராய்கிறோம்.   முக்கியமாக வேறு நாடுகளுடன் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல்கள், ஏனைய நிதி வசதிகள் என்பன தொடர்பாக பல விடயங்களை உள்ளடக்கி  பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம்.  கடன் மட்டும் பெறுவது நோக்கமல்ல.

 

 கேள்வி அப்படியானால் இந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் ஊடாக   நாட்டின் தற்போதைய நெருக்கடிகளை தீர்க்க முடியும் என்று நம்புகிறீர்களா?

 

 பதில் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  தற்போது பாரதூரமான பிரச்சனைகள்   காணப்படுகின்றன.  அதேபோன்று முழு உலகிலும் இந்த பிரச்சினைகள் காணப்படுகின்றன.  அந்த பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும் என்று எல்லோரும் கருதுகின்றனர்.  எனவே அதுபோன்ற ஒரு பிரச்சினைகள் தீவிரமடையும் நேரத்தில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பயணிப்பது சிறந்ததாக இருக்கும்.

 

 கேள்வி நாட்டில் தற்போது எரிபொருள் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு   மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.  சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதன் ஊடாக  இந்த வரிசைகளுக்கு முடிவுகட்ட முடியுமா?

 

பதில்   தற்போதைய மக்களின் வரிசை  பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு முன்பாகவே நாம் தீர்வு காண நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன்  பேச்சுவார்த்தை நடத்தி ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக இந்த நாட்டின் வரிசையில் நிற்கும் பிரச்சனைகளுக்கு நாம் முடிவு காண்போம். ஆனால் மேலும் வேறு பல பிரச்சனைகள் உருவாகும். கொரோனா  காலத்தில் இந்த நாட்டை முடக்க வேண்டாம்,  திறந்து வையுங்கள் என்று நான் கூறியது உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.  ஆனால் நாட்டை மூட வேண்டும் என்று பலரும் கூறினார்கள்.  அவ்வாறு சில மாதங்கள் நாட்டை மூடியதன்  விளைவையே  நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 

கேள்வி எப்படி வரிசை பிரச்சினைக்கு தீர்வு காணப் போகிறீர்கள்?

 

பதில் தற்போதைய சூழலில் டொலர்  வருகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  அத்துடன் ரூபாவை  மிதப்பதற்கு இடமளித்து இருக்கின்றோம்.  எனவே டொலர்  வருகை அதிகரிக்கும் என நம்புகிறோம். அத்துடன் டொலர் வருகைக்கு மேலும் பல ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதனூடாக   மக்கள்  வரிசையில் நிற்கும் பிரச்சினை பெரும்பாலும் நிறைவு கிடைத்துவிடும். அதாவது சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கு முன்பாக வரிசை பிரச்சினை தீரும். ஆனால்   விலைகள் மேலும் அதிகரிக்கலாம். எனினும் வரிசை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். 

 

 கேள்வி பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமா?

 

 பதில் உலகத்தின் நிலைமைகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. நிலக்கரியின் விலையை கட்டுப்படுத்த முடியாது. எரிபொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது. உலகில் இருக்கின்ற பொருட்களின் விலைகளையும் நாம் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவ்வாறான நிலைமை ஏற்படும்.

 

 கேள்வி விரைவில் வரிசை பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்று கூறுகிறீர்கள்? எப்போது அது நடக்கும்?

 

 பதில் நான் அதற்கு தினங்களை  சரியாக குறிப்பிட்டுக் கூற முடியாது. நான் ஜோதிடம் கூறமுடியாது.  ஆனால் ஏப்ரல் மாதம் ஆகும்போது வரிசை பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட முடியும்.  நிலைமை வழமைக்குத் திரும்பும்.

 

 கேள்வி நீங்கள் ரூபாவின் பெறுமதியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தீர்கள். அதனை திடீரென இவ்வாறு மிதக்க விட்டதன் விளைவே இந்த பொருள் விலை உயர்வுகள் காண்பிக்கின்றனவா?

 

பதில்   தற்போது இந்த எது சரி எது தவறு என்று விவாதித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நாம்    ரூபாவை மிதக்கவிட்டு இருக்கின்றோம்.  தற்போது அந்த நிலைமையில் இருந்தே நாம் அடுத்தகட்ட விடயங்களை ஆராய வேண்டும்.

 

கேள்வி சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் செல்லும்போது அவர்கள் நிபந்தனைகளை விதிப்பார்கள். அந்த நிபந்தனைகள் எவ்வாறு அமையும்?

 

பதில் அந்த விடயங்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எம்முடன் விடயங்களை ஆராய்ந்து முன்வைக்கப்படும். நாமும் அந்த விடயத்தில் பேச்சுவார்த்தைகளை அவர்களுடன் நடத்துவோம். மத்திய வங்கியை பொருத்தவரையில்கூட அரசாங்கம் ஒரு சில விடயங்களை செய்யவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.  அதே போன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லும் போது அந்த நிதியமும் எமக்கு சில விடயங்களை முன்வைக்கும். அதில் ஒரு சிலவற்றை அரசாங்கம் ஏற்கும்.   ஒரு சிலவற்றிற்கு இணங்காது. அவற்றுக்கு மாற்று விடயங்கள் ஆராயப்படும். அதுதான் பேச்சுவார்த்தை என்று கூறப்படுகிறது.

 

கேள்வி  தற்போது ரூபாவை மிதக்கவிட்டதன் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலர்  அதிகரிக்குமா?

 

பதில்     அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது அதிகரித்து கொண்டிருப்பதை நாங்கள் காண்கிறோம்.

 

கேள்வி  உங்களுக்கு நிதி அமைச்சருக்கும் இடையில்  முரண்பாடு இருப்பதாகவும் நீங்கள் ஆறு மாத காலமாக அவரை சந்திப்பதற்கு முயற்சிப்பதாகவும் அது சாத்தியமாகவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?

 

பதில் அவ்வாறு ஒன்றும் இல்லை. கொள்கை தீர்மானங்கள் எடுக்கும் போது பேச்சுவார்த்தைகளை நடத்தி அவற்றை செய்ய வேண்டியிருக்கும்.

 

 கேள்வி அப்படியானால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள இரண்டு அமைச்சர்களும்  முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள்?

 

 பதில் அப்படி எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.  என்னை பற்றி ஜனாதிபதி கூறியிருக்கின்ற விடயங்களை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா?

 

கேள்வி அமைச்சரவையில் இருந்த இருவர் அல்லவா   குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்?

 

 பதில் அது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.  உலகில் எங்குமே மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் சில விடயங்களில் முரண்பாடுகள் இருக்கும்.  அது இலங்கைக்கு மட்டும் உரித்தான நிலைமையல்ல.  

 

 கேள்வி நாட்டில் ஒரு பொருளாதார நெருக்கடி இருக்கின்றபோது இவ்வாறான விடயங்கள் முன்வைக்கப்படுகின்றமைனாலேயே   கேட்கிறோம்

 

 பதில் அவ்வாறு  இருந்தால் நாங்கள் அதனை பேசி தீர்த்துக் கொள்வோம். 

 

கேள்வி  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் இந்த கேள்விகளை நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது?

 

பதில்    நான் உங்களுக்கு ஏற்கனவே பதில் அளித்து விட்டேன்.

 

 கேள்வி நாட்டு மக்கள் மற்றும்  வர்த்தகர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் உங்களது செய்தி என்ன?

 

பதில் இது குறிப்பிடத்தக்க அளவில் ஒரு நெருக்கடி மிக்க கஷ்டமான காலமாக இருக்கின்றது.  முழு உலகமும் இந்த நிலைமையை எதிர்கொண்டு இருக்கிறது.  எனவே சகலரும் தமது கடமையை சரியான முறையில் முன்னெடுப்பது முக்கியமானது.  ஏற்றுமதியாளர்கள் தாம் பெற்றுக் கொள்கின்ற டொலர்களை  உடனடியாக இலங்கை  ரூபாவுக்கு மாற்றிக்கொள்வது அவசியமாகும்.  இறக்குமதியாளர்கள் அதிகளவில் பொருட்களை இறக்குமதி செய்யாமல் தேவையான அளவு இறக்குமதி செய்வது  நன்றாக இருக்கும்.  அனைவரும் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர வேண்டும்.  எமது கப்பல் மூழ்கி விடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.