Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மானுடத்தின் எசமான்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி

 

உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி தங்களுக்கு உண்மை என்று தோன்றுவதை கற்பிக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் பலகலைக்கழகங்களில் அதிகம் இல்லை.

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிப்பவர் அல்ல. ஆனால் மாணவர்களுடன் பல தசாப்தங்களாக அரசியலை பேசி வருபவர். உலக அரசியலை இவரிடமிருந்து கற்றுக்கொள்வைதையே பல பிரபல சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மேலே குறிப்பிட்ட தலைப்பில் பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று சவாலாக இருப்பவர்கள் யார் என்பதை பற்றி இதில் பேசுகிறார். இவர் கூறிய கருத்துக்கள் பின்வரும் ஐந்து பிரிவுகளாக வெளியிடப்படுகிறது.

1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்

2) இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்

3) இன்றைய கிழக்கு-ஐரோப்பியா சவால்கள்

4) இன்றைய இஸ்லாமிய-உலக சவால்கள்

5) இரண்டாவது சக்தி   என்பனவே இவை.

மேற்குலக அதிகாரத்துக்குள்ள அழுத்தங்கள்

“யார் உலகை ஆளுகிறார்கள்” என்று கேட்டால் நாம் வழமையாக கையாளும் முறையில், அரசுகளையும், முக்கியமாக வல்லரசுகளையும், அதன் முடிவுகளையும்,  அவற்றிற்கிடையிலான உறவுகளையுமே கணக்கிலெடுக்கிறோம். அது முற்றிலும் பிழையில்லை. இருந்தாலும் இவ்வாறு சுருக்கி பார்ப்பதால் நாம் பிழையான விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் சாத்தியங்கள் உண்டு என்பதையும் மனம்கொள்ளல் வேண்டும்.

அரசுகளுக்குள்ளேயும் சிக்கலான கட்டமைப்புகள் இருக்கும். இதன் அரசியல் தலைமைத்துவங்கள் எடுக்கும் முடிவுகளில் அரசுகளுக்குள்ளே இருக்கும் அதிகாரபலமுள்ள மையங்கள் அதிக தாக்கம் செலுத்தும். பொதுமக்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்படுவார்கள். சனநாயகத்தை மதிக்கும் நாடுகளுக்கும் இது பொருந்தும்.

சனநாயக தன்மைகள் குறைந்த நாடுகளில் இது மேலும் பொருந்தும். மானுடத்தின் எசமான்கள் உண்மையில் யார் என்பதை புறந்தள்ளி உலகை யார் ஆளுகிறார்கள் என்பது பற்றிய உண்மையான புரிதலை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. image மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) - தமிழில் ந.மாலதி

அடம் சிமித் என்ற பொருளாதார நிபுணர் அவருடைய காலத்தில் (1723-90), மானிடத்தின் எசமான்களை உற்பத்தியாளர்களும் பெரும் விற்பனையாளர்களும் என்று விபரித்தார். இன்றைய காலத்தில் இவர்களை பெரும் பல்தேசிய கம்பனிகளும், பெரும் நிதி நிறுவனங்களும், பெரும் விற்பனை மையங்களும் என்று விபரிக்கலாம். அன்று அடம் சிமித் சொல்லிய மானுடத்தின் எசமான்களின் தாரக மந்திரம்தான் “எல்லாம் எங்களுக்கே. மற்றவர்களுக்கு எதுவுமில்லை” என்பது. வேறு வார்த்தையில் சொல்வதானால் இதுவே ஒருபக்க சார்பான வர்க்கப்போர்.

நாட்டுக்கும் உலகத்திற்கும் கெடுதல் விளைவிப்பது. இன்றைய உலக ஒழுங்கில், மானுடத்தின் எசமான்களின் அமைப்புக்கள் அதீத செல்வத்தையும் அதனால் வரும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன. செல்வம் சிலரிடம் மட்டும் குவிமையப் படுத்தப்படும் போது சனநாயகம் கருத்தற்று போவகிறது. உலகளாவிய ரீதியில் மட்டுமல்ல உள்நாட்டிலும் இவ்வாறே. இந்த அதிகாரத்தை கொண்டே அவர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்து கொள்கிறார்கள். பல வழிகளில் தங்கள் பொருளாதார பலத்தையும் பாதுகாத்து கொள்கிறார்கள்.

சர்வதேச விடயங்களில் ஒரு அரசின் கொள்கையில் தாக்கம் செலுத்துபவைகளை அலசுவதற்கு கணக்கிலெடுக்க வேண்டியவை பற்றி இன்னும் பலவற்றை சொல்லலாம். இருந்தாலும் ஏறத்தாள உண்மைக்கு அண்மையான ஒரு மதிப்பீட்டிற்கு அரசுகளையே அதிகார மையங்களாக கருதி அலசுவோம். அப்படி பார்த்தால் யார் உலகை ஆளுகிறார்கள் என்ற கேள்வியை ஆரயும் போது சில விடயங்கள் உடனடியாக எம்முன்னே வந்து நிற்கும். ஐ-அமெரிக்காவுக்கும் இன்றைய உலக ஒழுங்கிற்கும் சவாலாக ஏழும்பும் சீனா, கிழக்கு-ஐரோப்பாவில் உருவாகி வரும் புதிய பனிப்போர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர், ஐ-அமெரிக்க மேலாதிக்கமும் அதன் வீழ்ச்சியும் இவற்றில் முக்கிமானவை. syria மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) - தமிழில் ந.மாலதி

பிரபல லண்டன் பத்திரிகை ஒன்றின் நிருபரான கிடியன் ரச்மான் (Gideon Rachman)  மேற்குலகின் இன்றைய சவால்களையும் உலக ஒழுங்கையும் இவ்வாறு விபரிக்கிறார்.

“பனிப்போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து ஐ-அமெரிக்காவின் இராணுவ பலமே உலக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து வந்துள்ளது. மூன்று இடங்களில் இது மிகவும் முக்கியமாக இருக்கிறது. ஐ-அமெரிக்க கடற்படை கிழக்கு-ஆசியாவின் பசுபிக்கடலை தனது சொந்த ஏரிபோல பாவிக்கிறது. ஐரோப்பாவில் நேற்றோ (NATO) – அதாவது அதன் இராணுவ செலவின் முக்கால் வீதத்தை கொடுக்கும் ஐ-அமெரிக்கா – “அதன் உறுப்பு நாடுகளின் எல்லைகளை பாதுகாக்கிறது”. மத்திய-கிழக்கில் அமெரிக்காவின் இராட்சத கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள் அதன் நட்பு சக்திகளுக்கு ஆறுதலாகவும் எதிரிகளுக்கு பயமுறுத்தலாகவும் உள்ளன.”

கிடியன் ரச்மான் தொடர்ந்து, “இந்த மூன்று பகுதிகளிலும் இந்த பாதுகாப்பு முறைகளுக்கு இன்று சவால்கள் உள்ளன” என்றார். ஏனெனில் உக்கிரேயினிலும் சிரியாவிலும் ரசியா தலையிட்டிருக்கிறது.

சீனாவுக்கு அருகில் உள்ள “அமெரிக்காவின் ஏரியாக” இருந்த கடற்பிராந்தியத்தை சீனா கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஆகவே அடிப்படை கேள்வி என்னவென்றால், ஏனைய வல்லரசுளும் தங்கள் தங்கள் பிராந்தியங்களில் தங்கள் பலத்தை நிலைநிறுத்துவதை ஐ-அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதுதான். fleet மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) - தமிழில் ந.மாலதி

பொதுப்புத்தியில் பார்த்தாலும், பொருளாதார பலத்தை பரவலாக்கவும் இதை ஐ-அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே கிடியன் ரச்மான் தனது ஆக்கத்தில் சொல்கிறார்.

உலக ஒழுங்கையும் இப்பிரச்சனையையும் பலகோணங்களில் இருந்து அணுகலாம் என்பது உண்மைதான். ஆனால் இம்மூன்று பிரதேசங்களும் முக்கியமானவை என்பதால் இந்த கோணத்திலிருந்தே இவற்றை அலசுவோம்.

தொடரும்…..

https://www.ilakku.org/மானுடத்தின்-எசமான்கள்-ப/?amp

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

 

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மேலே குறிப்பிட்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று சவாலாக இருப்பவர்கள் யார் என்பதை பற்றி இதில் பேசுகிறார். இக்கட்டுரையின் முதல்பகுதியை ‘மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்’ என்ற தலைப்பில் கடந்தவாரம் தந்திருந்தோம்.அதன் இரண்டாவது பகுதி இதுவாகும்.

இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்

“அமெரிக்காவின் ஏரி” போல என்று விபரிக்கப்ட்ட பசுபிக் கடலை எடுத்துக் கொள்வோம். அண்மைய ஒரு அறிக்கையில், ‘ஐ-அமெரிக்காவின் B-52 குண்டு விமானம் கிழக்கு சீன கடற்பரப்பில் அதனது ஒரு வழமையான பணியின் போது தவறுதலாக சீனா கட்டியுள்ள செயற்கை தீவின் அண்மையாக பறந்தது. இது வாஷிங்டனும் சீனாவும் கடுமையாக மோதும் ஒரு விடயம் என்று பாதுகாப்பு உயரதிகாரிகள் சொன்னார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

70 ஆண்டுகளுக்கு முந்திய வல்லரசுகளின் பயங்கரமான அணுவாயுத பந்தயத்தின் வரலாற்றை தெரிந்தவர்களுக்கு, இம்மாதிரியாக சம்பவங்கள் பலமுறை அணுவாயுதப் போரை தூண்டும் அபாயமான நிலைக்கு முன்னர் வந்தது நினைவிருக்கும்.
70 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் அணுவாயுத போருக்கு அண்மையாக வந்தது போல மேலே கூறிய 2018 சமப்வத்தை தொடரந்து சீனா தனது அணுவாயுத விமானங்களை அமெரிக்காவுக்கு அண்மையாக கொண்டுவரவில்லை.

தமது வணிகத்திற்கான கடல் பாதையெங்கும், ஜப்பானிலிருந்து மலாக்க நீரிணை ஊடாகவும் அப்பாலும், பகைமை சக்திகள் நிறைந்திக்கின்றன என்பது சீனாவின் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். இவையெ்லாம் பெருமளவில் ஐ-அமெரிக்க இராணுவத்தால் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் அவர்களுக்கு தெரியும்.

இதனால், சீனா அதிக வளங்களை போட்டு மேற்குபுறமாக தனது வணிகபாதைகளை வளர்த்து அவற்றை கவனத்துடன் இணைத்து வருகிறது. சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organization (SCO)) வரைபுக்கு அமைவாகவே இவைற்றை சீனா செய்து வருகிறது. Cooperation Organisation2 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

இவ்வமைப்பில் மத்திய-ஆசிய நாடுகள் மற்றும் ரசியா உள்ளன. விரைவில் இந்தியா, பகிஸ்தானும் இதில் இணையும். இரான் இதன் ஒரு பார்வையாளராக இருக்கும். பார்வையாளராகவும் ஐ-அமெரிக்காவுக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை. அதோடு இப்பிராந்தியத்தில் உள்ள ஐ-அமெரிக்க இராணுவ தளங்களை மூடுமாறு அந்த அமைப்பு வேண்டுகோளும் விடுத்துள்ளது (“US Military Bases Around the World” என்று இணையத்தில் தேடினால் பிரமிப்பாக இருக்கும்).

இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக பழைய காலத்து “பட்டுப்பாதை” போன்ற ஒரு புதிய பாதையை சீனா கட்டி வருகிறது. அதுமட்டுமல்ல, இப்பாதை வழியாக ஐரோப்பாவையும் எண்ணெய் வளம் கொண்ட மத்திய-கிழக்கு நாடுகளையும் அடையலாம். ஒன்றிணைக்கப்பட்ட ஆசியவுக்கான சக்தி (energy) மற்றும் உற்பத்தி ஒழுங்கை உருவாக்குவதற்காக சீனா பெருமளவான வளங்களை கொட்டுகிறது. அதிவேக ரயில் பாதைகளை உருவாக்கிறது, எண்ணெய் குழாய்களையும் போடுகிறது.

இத்திட்டங்களின் ஒரு பகுதியாக உலகிலேயே உயரமான மலைகளூடாக சீனா அமைத்திருக்கும் பெருவீதி பகிஸ்தானிலுள்ள சீனாவின் கவுடார் துறைமுகத்துக்கு போகிறது. சீனாவின் கடல் வணிகத்தில் ஐ-அமெரிக்கா தலையிட முடியாத பாதையாக இது உள்ளது. இத்திட்டங்கள் பகிஸ்தானில் வளர்ச்சியை தூண்டும் என்றும் சீனாவும் பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. பெருமளவான இராணுவ நிதியுதவிகளை பகிஸ்தானுக்கு வழங்கிய ஐ-அமெரிக்கா இம்மாதிரி வளர்ச்சி திட்டங்ளை அங்கு முன்னெடுக்கவில்லை. சீனாவுக்கு அதன் மேற்கு ஷின்சியாங் மாநிலத்தில் பயங்கரவாத பிரச்சனை உள்ளதால், பகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு பயங்கரவாதங்களை பகிஸ்தான் அடக்குவதற்கு இத்திட்டங்கள் உதவலாம் என்றும் சீனா எதிப்பார்க்கிறது.மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

வணிக நோக்கத்தோடு இந்திய கடலில் சீனா அமைத்து வரும் “முத்து மாலை” தளங்களின் ஒரு பகுதியாக இந்த கவுடர் துறைமுகம் இருக்கும். இது இராணுவ தேவைகளுக்கு பாவிக்கப்படலாம். தற்காலத்தில் சீனா தனது செல்வாக்கை பாரசீக வளைகுடா வரையும் பரப்புவதற்கு இது ஏதுவாக இருக்கும்.
ஐ-அமெரிக்காவின் இராணுவ பலத்தால் பாதிக்க முடியாத திட்டங்களாக இத்திட்டங்கள் யாவும் உள்ளன. ஒரேயொரு வழியில் மட்டுமே, அதாவது அணுவாயுதப் போரின் மூலம் மட்டுமே, ஐ-அமெரிக்கா இத்திட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது ஐ-அமெரிக்காவையும் அழித்துவிடும்.

ஆசியா கட்டுமான நிதி வங்கி (Asian Infrastructure Investment Bank (AIIB)) என்றவொரு வங்கியையும் சீனா 2015இல் உருவாக்கியது. அதன் முக்கிய பங்குதாரியாக சீனாவே உள்ளது. பெய்ஜிங்கில் நடந்த அதன் திறப்பு விழாவில் 56 நாடுகள் பங்குபற்றின. அதில் ஐ-அமெரிக்க கூட்டாளிகளான அவுஸ்திரேலியாவும், பிரித்தானியாவும் ஐ-அமெரிக்காவின் விருப்பத்திற்கு எதிராக பங்குபற்றின. ஐ-அமெரிக்காவும் ஜப்பானும் பங்குபற்றவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புக்களுக்கு போட்டியாக இவ்வங்கி வளரலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் ஐ-அமெரிக்காவின் செல்வாக்கில் இயங்குகின்றன. annual meeting of the Asia Infrastructure Investment Bank in 2016 UNIDO Flickr CC BY ND 2.0 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பும் (Shanghai Cooperation Organization (SCO)) ஒரு காலத்தில் நேற்றோவுக்கு (NATO) மாற்றாக வளரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும்…..

https://www.ilakku.org/மானுடத்தின்-எசமான்கள்-ப-2/?amp

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) – தமிழில்- ந. மாலதி

 

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி ‘மானிடத்தின் எசமான்கள்’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். இக் கட்டுரையில்   இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இதை ஐந்து பிரிவுகளாக (1) மேற்குலக அதிகாரத்திற்குள்ள அழுத்தங்கள்இ( 2) இன்றைய கிழக்கு-ஆசியா சவால்கள்இ 3) இன்றைய கிழக்கு-ஐரோப்பிய சவால்கள்இ (4) இன்றைய இஸ்லாமிய-உலக சவால்கள்இ (5) இரண்டாவது சக்தி) வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இதன் மூன்றாவது பகுதியை இங்கு தருகிறோம்.

இன்றைய கிழக்குஐரோப்பிய சவால்கள்

இன்று சவாலாக விளங்கும் இரண்டாவது பிராந்தியம் கிழக்கு-ஐரோப்பா. நேற்றோ(NATO) -ரசியா எல்லையில் பிரச்சனை ஒன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சின்ன பிரச்சனை அல்ல. “உக்கிரேயின் முன்னரங்கு: எல்லையில் பிரச்சனை” என்ற தனது திறமையான ஆய்வு நூலில் ரிச்சட் சக்வா (Richard Sakwa) என்ற ஆய்வாளர், “நேற்றோ ஆளுமை செலுத்தும் நிலப்பரப்பு விரிவடைவதை தடுப்பதற்கே ரசியா-ஜோர்ஜியா போர் மூண்டது. இது முதலில் 2008 இலும் பின்னர் 2014 இலும் வெடித்தன. மூன்றாவது போரை உலகம் தாங்குமா என்பது நிச்சயமில்லை.” என்று எழுதுகிறார். இவரது ஆய்வு நம்பக்கூடியதாகவே உள்ளது.

நேற்றோ விரிவாக்கம் தீமையற்றது என்றே மேற்குலகம் பார்க்கிறது. ரசியாவும், உலகின் ஏனைய நாடுகளும் இதை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்பதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கிலும் கூட சில முக்கியமானவர்கள் இவ்வாறுதான் பார்க்கிறார்கள். நேற்றோ விரிவாக்கம் “துயரம் நிறைந்த தவறு” என்று ஐ-அமெரிக்க ராஜதந்திரியான ஜோர்ஜ் கின்னன் ஆரம்பத்திலேயே எச்சரித்தார். அவரோடு சேர்ந்து மேலும் சில ஐ-அமெரிக்க உயரதிகாரிகள் சனாதிபதிக்கு எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் இதை “வரலாற்று தவறான கொள்ளை” என்று விபரித்தார்கள். enlargement of NATO 1949 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) - தமிழில்- ந. மாலதி

1991இல் பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் சோவித் குடியரசின் உடைவுடன் இப்பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்போது இப்பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அரசியல்-பொருளாதார நிலைமையையும் பற்றி இரண்டு விதமாக எதிர்பார்ப்புகள் நிலவின. மேலே குறிப்பிட ரிச்சட் சக்வா தனது ஆய்வில் இது பற்றியும் சொல்கிறா். ஒரு பார்வையில் ஐரோப்பிய ஒன்றியத்தை மையமாக கொண்ட “விரிவடைந்த ஐரோப்பாவும்”, ஐரோப்பிய-அட்லான்டிக் பாதுகாப்பையும் அரசியல்-பொருளாதாரத்தையும் முன்னெடுக்கும் நேற்றோவும் இருந்தன.

இரண்டாவது பார்வையில் கிழக்கில் போத்துகல்லின் லிஸ்பனையும் மேற்கில் ரசியாவின் விலடிவோஸ்றோக்கையும் உள்ளடக்கிய, “பெரிய ஐரோப்பிய கண்டமும்”, அதில் பிரசல்ஸ், மொஸ்கோ, அங்காரா போன்ற பல மையங்கள் இருந்தாலும், காலம் காலமாக இக்கண்டத்தில் தொடரும் பிரிவினைகளை களைந்து அது ஒரு பொது நோக்கத்துடன் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தன.

பெரிய ஐரோப்பிய கண்டம் என்ற சிந்தனையை முன்மொழிந்தவர்களில் பிரதானமானவர், சோவியத் குடியரசின் அன்றைய தலைவர் மிக்கேயில் கோபசோவ் (Mikhail Gorbachev). இச்சிந்தனையின் வேர்கள் இதற்கு முன்னரும் ஐரோப்பாவில் இருந்ததுள்ளது. பிரெஞ்சு தலைவர் டி-கோல் போன்றவர்களும் இச்சிந்தனையை கொண்டிருந்தார்கள்.

ஆனால் 1990களில் கொண்டுவரப்பட்ட திறந்த சந்தை மாற்றங்களின் தாக்கத்தினால் ரசியா விழுந்த போது, இச்சிந்தனையும் மழுங்கிப் போனது. இப்போது விளடிமிர் புட்டினின் தலைமையில் மீள எழும்பும் ரசியா உலக அரங்கில் தனக்கும் ஒரு இடத்தை தேடும் போது இச்சிந்தனை மீண்டும் உயிர் பெறுகிறது. புட்டினும் அவரது சக-அரசியல்வாதியமான டிமிற்ரி மேடவேடேலும் (Dmitry Medvedev) ”பெரிய ஐரோப்பிய கண்டத்தின்” ஒன்றிணைவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.

“இவர்களின் முன்னெடுப்புக்களை உதாசீனம் செய்யும் மேற்குலகம், இம் முன்னெடுப்புக்களின் பின்புலத்தில் ரசியாவின் விரிவாக்கமே மறைமுக நோக்கமாக இருக்கிறது என்று கருதுகிறது.

 C2Aq 7WHB2AVjwNkH1PThw மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) - தமிழில்- ந. மாலதி

மேலும் வட-அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையே பிரிவை கொண்டுவருவதும் இதன் நோக்கம் என்று மேற்குலகம் கருதுகிறது” என்று ஆய்வாளர் ரிச்சட் சக்வா தொடர்ந்து எழுதுகிறார். இக்கரிசனைகள் பனிப்போர் காலத்தியது. ஐரோப்பா மூன்றாவது சக்தியாக வளர்ந்துவிடும் என்ற பயமே இக்கரிசனைகளுக்கான காரணம்.

மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் இணைந்த ஜெர்மனி நேற்றோவில் இணைவதற்கு கோபச்சோவ் சம்மதித்தது வரலாற்றில் ஒரு பெரும் விட்டுக்கொடுப்பு. அப்போது அதற்கு பதிலாக நேற்றோ கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட நகராது என்று கோபச்சோவுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் ரசியா பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தபோது மேற்குலகம் அதை “வரலாற்றின் முடிவு” என்றும், மேற்கின் முதலாளித்துவ சனநாயகத்தின் இறுதி வெற்றியென்றும் கொண்டாடியது. கோபச்சோவுக்கு கொடுத்த வாக்குறிதியை மீறி, நேற்றோ விரிவாக்கம் உடனேயே ஆரம்பித்தது.

இணைந்த ஜெர்மனியின் எல்லையையும் தாண்டி நேற்றோ நகர்ந்தது. விரைவில் ரசியாவின் எல்லையையும் தொட்டுவிட்டது. நேற்றோவின் கொள்கையும் மாற்றமடைந்தது. அதன் மாற்றமடைந்த கொள்கையில், உலகத்தின் சக்திக்கான (energy) கட்டுமானங்களை அதாவது கடல் பாதைகளையும் அதனடியில் உள்ள பைப்புக்களையும் பாதுகாப்பதும் சேர்க்கப்பட்டது. இது நேற்றோ செயற்படும் பரப்பை உலகளாவிய பரப்பாக மாற்றியது. அதுமட்டுமல்ல, இன்று பெரிதாக பேசப்படும் “பாதுகாக்கும் பொறுப்பு” (“responsibility to protect”) என்ற கொள்கையையும் மேற்குலகம் மாற்றியமைத்தது. இதற்கான ஐநாவின் கொள்கையிலிருந்து இது மிகவும் மாறுபட்டது. இதனால் இப்போது நேற்றோ ஐ-அமெரிக்காவின் தலைமையில் உலகில் எங்கும் தலையிடும் படையாக இருக்கலாம் என்றாகியது.

குறிப்பாக நேற்றோ உக்கிரேனுக்குள் விரிவடைவது ரசியாவை பாதிக்கும் ஒரு திட்டமாக உள்ளது. ஏப்பிரல் 2008 இல் இடம்பெற்ற ஒரு நேற்றோ கூட்டத்தின் போது இத்திட்டங்கள் முடிவுசெய்யப்பட்டன. அப்போது உக்கிரேயினுக்கும் ஜோர்ஜியாவுக்கும் நேற்றோ அங்கத்துவம் கொடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டது. 2004 இல் போராட்டங்களின் விளைவால் மேற்குலகின் ஒரு நண்பர் உக்கிரேயினின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது, ஐ-அமெரிக்க பிரதிநிதி அங்கு விரைந்து சென்று “உக்கிரேயின் நேற்றோவில் இணைவதை தாம் ஆதரிப்பதாக” சொல்லியது விக்கிலீக்ஸ் ஊடாக வெளிவந்த இன்னுமொரு செய்தி. qimg 8c11bff3431fbcad4ad94a3284f7fac5 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–03) - தமிழில்- ந. மாலதி

ரசியாவின் கவலை விளங்கிக்கொள்ள கூடியதே. சர்வதேச விவகாரங்களின் முன்னணி இதழான Foreign Affairs இல் ஒரு ஆய்வாளர், “உக்கிரேயின் பிரச்சனையின் அடிவேர் நேற்றோ விரிவாக்கமும் உக்கிரேயினை ரசியாவின் செல்வாக்கிலிருந்து விலத்தி மேற்குலகத்தோடு இணைக்கு ஐ-அமெரிக்காவின் திட்டமுமே… ரசியாவின் மைய நலன்களுக்கு இவை எதிரானவை என்றே இதை ரசியாவின் தலைவர் புட்டின் கருதுகிறார்.“ என்று எழுதுகிறார்.

ஐ-அமெரிக்காவுக்கு ரசியாவின் நிலைப்பாடு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ரசியாவின் நிலைப்பாட்டின் பின்னாலுள்ள காரணங்கள் புரியாமல் இருக்க முடியாது. ஏனெனில். தொலைவில் இருக்கும் ஒரு நாடு தனக்கு அண்மையில் இராணுவத்தை நிறுத்துதை ஐ-அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

சீனாவின் நடவடிக்கைகளைப் போல, ரசியாவின் நடவடிக்கைகளையும் தர்க்கரீதியாக புரிந்து கொள்ளலாம். சீனாவைப் போலவே இங்கும் ரசியா எதிர்கொள்வது பாரதூரமானது. அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் சூழல் இது.

தொடரும் ….

https://www.ilakku.org/மானுடத்தின்-எசமான்கள்-ப-3/?amp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

 
 

இன்றைய இஸ்லாமிய உலக சவால்கள்

இன்று சவாலாக விளங்கும் மூன்றாவது இடத்தை, இஸ்லாமிய உலகத்தை, இப்போது கவனிப்போம். 2001 செப்டம்பர் இரட்டை கோபுர தாக்குதலின் பின்னர் ஜோர்ஜ் புஸ் பிரகடனப்படுத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் (ப.ஏ.போ) அரங்கமாகவும் இந்த இஸ்லாமிய உலகமே உள்ளது. உண்மையில் இப்பிரகடனம் 2001 இல் இரண்டாவது முறையாக புஸ் பிரகடனப்படுத்தினார் என்பதுதான் உண்மை.

இதை முதலாவது தரமாக ரொனால்ட் ரேகன் பதவியேற்ற போது பிரகடனப்படுத்தினார். “நாகரீதத்தை அழிக்க பரவும் நோய்” என்றும் “தற்காலத்திலும் காட்டுமிராண்டித்தனத்திற்கு திரும்புதல்” என்றும் அப்போது தமது எதிரியாக கண்டவர்களை ரேகனும் அவரது ஆட்சியளர்களும் விபரித்தார்கள். முதலாவது ப.எ.போ இப்போ வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது. அப்போது அது மத்திய அமெரிக்காவிலும், தெற்கு ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் கொடூரமான போராக மாறியது. அதன் மோசமான எதிரொலிகளையே இன்று நாம் பார்க்கிறோம்.

ஐ-அமெரிக்காவின் முதலாவது ப.ஏ.போரின் கொடுமைகளுக்காக உலக நீதிமன்றம் ஐ-அமெரிக்காவை கண்டித்தது. அந்த கண்டனத்தை ஐ-அமெரிக்க உதாசீனம் செய்தது. இவையெல்லாம் வரலாற்றில் சொல்லக்கூடியவைகள் அல்லாததால் அவை மறக்கப்பட்டு விட்டன.

புஸ்-ஒபாமா சனாதிபதிகளின் ப.எ.போரின் வெற்றிகள் இப்போது நாம் நேராகவே பார்த்து கணிக்கலாம். இப் ப.எ.போ பிரகடனப் படுத்தப்பட்டபோது, அது பழங்குடி ஆப்கானிஸ்தானின் ஒரு சிறு மூலையாகவே இருந்தது. தலிபானை வெறுத்த ஆப்கான் மக்களே, அவர்களின் பழங்குடி கலாச்சாத்தின் அடிப்படையில் தலிபானை பாதுகாத்தார்கள். 25 மில்லியன் டொலர்களுக்கும் இவர்களை காட்டிக்கொடுக்க மறுத்த பழங்குடிகள் ஐ-அமெரிக்கர்களை ஒரேயடியாக குளப்பினார்கள்.

ஒரு திட்டமிட்ட காவல்துறை நடவடிக்கை ஊடாகவோ அல்லது தலிபானுடன் தீவிர ராசதந்நதிர பேச்சுவார்த்தை ஊடாகவோ இரட்டைகோபுர தாக்குதலின் குற்றவாளிகளை ஐ-அரெிக்காவின் நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கலாம். ஆனால் இம்மாதிரியான சாத்தியங்கள் கணக்கில் எடுக்கப்படவே இல்லை. மாறாக உடனடி எதிர்வினையாக பெரும் வன்முறையே கையிலெடுக்கப்பட்டது. 1H10CT 0 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

அப்போதைய இதன் நோக்கம் தலிபானை அழிப்பது அல்ல. இது பின்னர் சேர்க்கப்பட்டது. பின்-லாடனை ஐ-அமெரிக்காவிடம் ஒப்படைப்பதாக தலிபான் அப்போது முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு ஐ-அமெரிக்காவின் வெறுப்பை காட்டுவதற்காகவே ஒரு பெரும் வன்முறையை ஐ-அமெரிக்கா முன்னெடுத்தது. இவ்வாறு தலிபான் முன்மொழிந்ததை ஐ-அமெரிக்கா சிறிதும் ஆராய முன்வராததால் தலிபானின் முன்மொழிவு எத்துணை உண்மையானது என்பது எங்களுக்கு தெரியாது.

“ஐ-அமெரிக்கா தனது வலிமையையும் அதனால் வரும் வெற்றியையும் காட்டி உலகத்தை பயமுறுத்துவதே நோக்கமாக இருந்திருக்கலாம். அதனால் ஆப்கான் மக்கள் எத்துணை துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பதெல்லாம் ஐ-அமெரிக்காவின் கரிசனை அல்ல” என்று பலராலும் மதிக்கப்படும் அப்துல் ஹாக் என்ற தலிபானுக்கு எதிரான ஆப்கான் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.

“தலிபானை வீழ்த்துவதற்கு அதனுள்ளிருந்தே முயற்சித்துக்கொண்டிருந்த பல சக்திகள் ஐ-அமெரிக்காவின் ஆப்கான் போரை கடுமையாக கண்டித்தன. தலிபானை அழிக்கும் தமது முயற்சிகள் வெற்றி பெறும் சாத்தியங்கள் இருந்ததாகவும் ஐ-அமெரிக்க குண்டு தாக்குதல்  தமது முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு என்று அவர்கள் கருதினார்கள்.” என்றும் அப்துல் ஹாக் சொல்லியிருக்கிறார்.

ஆப்கான் போர் வெள்ளை மாளிகையில் முடிவு செய்யப்பட்ட போது அக் கூட்டத்தில் இருந்தவர் ரிச்சார்ட் கிளார்க். இவர் வெள்ளை மாளிகையின் பயங்கரவாதத்திற்கெதிரான பாதுகாப்பு குழுவின் தலைவராக அப்போதிருந்தார். இப்போர் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று அக்கூட்டத்தில் சொல்லப்பட்ட போது “சர்வதேச சட்டம் பற்றி எனக்கு கவலையில்லை. நாங்கள் ஒரு பெரும் அடி கொடுக்கப்போகிறோம்” என்று சனாதிபதி சொன்னதாக ரிச்சர்ட் கிளார்க் எழுதியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் பணிசெய்து கொண்டிருந்த பல உதவி அமைப்புக்களும் இப்போருக்கு எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு பல மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பபடும் நிலைமை உள்ளதாகவும் போரினால் நிலைமை நினைக்க முடியாத அளவுக்கு மோசமாகும் என்றும் எச்சரித்தார்கள்.

பல ஆண்டுகளின் பின்னரும் ஏழை ஆப்கான் மக்களின் நிலைமையை இங்கு நாம் விபரிக்க தேவையில்லை.

ஐ-அமெரிக்காவின் பெரும் போருக்கான அடுத்த இலக்கு இராக். நம்பகத்தன்மையுள்ள எவ்விதமான காரணமும் இன்றி தொடுக்கப்பட்ட இப்போர், 21ம் நூற்றாண்டின் மாபெரும் குற்றம். ஐ-அமெரிக்க-பிரித்தானிய கூட்டால் முன்னெடுக்கப்பட்ட இராக்கின் மேலான முற்றுகையில் பல நூறாயிரம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

இராக்கின் மேல் ஏற்கனவே போடப்பட்ட ஐ-அமெரிக்க-பிரித்தானிய தடைகளால் இராக் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. இதை அப்போதே “இனவழிப்பு” என்று பலர் விபரித்தார்கள். இராக்கின் மேல் போடப்பட்டிருந்த தடைகளை கண்காணித்த இரண்டு சர்வதேச இராசதந்திரிகள் ஏற்கவே இத்தடைகள் “இனவழிப்பானது” என்று சொல்லி தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்கள். 1 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

இராக்கின் மேலான முற்றுகை பல மில்லியன் அகதிகளை உருவாக்கியது, அந்நாட்டை அழித்ததது, இதனால் உருவான பிளவுகள் இன்றும் அந்நாட்டையும் அப்பிராந்தியத்தையே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது. இன்றும் எம்மிடையே தாம் அறிவுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், இப்போரை “இராக்கின் விடுதலை” என்று விபரிப்பது அதிசயமானது.

பென்றகனும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் நடாத்திய கருத்துக்கணிப்பில் பின்வருவன தெரியவந்துள்ளது. 3 வீதமான இராக்கி நாட்டினரே, தங்கள் அயலில் ஐ-அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கை நியாயமானது என்று கருதுகிறார்கள். 1 வீதத்திற்கும் குறைவனவர்களே ஐ-அமெரிக்க-பிரித்தானிய படைகள் தமது பாதுகாப்பிற்கு நன்மையானது என்று கருதுகிறார்கள். 80 வீதமானவர்கள் இப்படைகள் தங்கள் நாட்டில் தரித்திருப்தை எதிர்க்கிறார்கள். பெரும்பான்மையினர் இப்டைகளின் மேல் நடக்கும் தாக்குதல்களை ஆதரிக்கிறார்கள்.

இதுமாதிரியான ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கும் நிலை கூட ஆப்கானிஸ்தானில் இல்லை. அந்நாடு அந்தளவுக்கு சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது. அங்கும் இதே மாதிரியான கருத்துகள் நிலவும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். முக்கியமாக இராக்கில், ஐ-அமெரிக்கா தனது போருக்கான நோக்கில் தோல்வியே கண்டிருக்கிறது. இராக்கை அழித்தது மட்டுமல்லாமல், இரானிடம் இராக்கை கையளித்துவிட்டது ஐ-அமெரிக்கா.

இதுமாதிரியான பெரும் போர்கள் வேறு இடங்களிலும் தொடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக லிபியாவில். இங்கு மூன்று ஏகாதிபத்திய சக்திகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐ-அமெரிக்கா இணைந்து செயற்பட்டன. இவை முதலில், 1973 இல், ஐநா பாதுகாப்பு சபை தீர்மானம் ஒன்று நிறைவேற துணை போயின. ஆனால் அது நிறைவேற்றிய உடனேயே அதை மீறின. இக்கூட்டணியின் விமானப்படை தாக்குதல்களை ஆரம்பித்தது. இதனால் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுகள் எடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.

லிபியா நாடு அழிக்கப்பட்டது. லிபியா நாடானது ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பல இராணுவ குழுக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. முக்கியமாக, “இஸ்லாமிய அரசு” (ISIS) படையின் தளமாக லிபியா மாறியது. அங்கிருந்து ISIS அதன் பயங்கரவாதத்தை பரப்பவும் வழிசெய்தது. மானுடத்தின் எசமான்கள் (பாகம்–04) – தமிழில்- ந. மாலதி

ஆபிரிக்க ஒன்றியம் முன்மொழிந்த ஒரு நல்ல திட்டத்தை லிபிாவின் முகமர் கடாபியும் ஏற்றுக்கொண்டார். ஆனால் ஏகாதிபத்திய மும்மூர்த்திகள் இதை உதாசீனம் செய்தார்கள். ஆயுதங்கள் ஏராளமாக போய் சேரவும், மேற்கு ஆபிரிக்காவிலும் லிபியாவை சுற்றியுள்ள நாடுகளிலும் பயங்கரவாதம் பரவவும் இப்போர் உதவின. ஆபிரிக்காவிலிருந்து அகதிகள் ஐரோப்பாவை நோக்கி வெள்ளமாக திரளவும் இப்போர் காரணமாயிற்று.

இதுவும் “மனிதாபிமான தலையீடுகளின்” இன்னுமொரு வெற்றி. இது போன்ற பல கொடூரமான தலையீடுகளின் நான்கு நூற்றாண்டு நீளமான வரலாற்றில் இதுவொன்றும் புதிதும் அல்ல.

தொடரும்…..

https://www.ilakku.org/மானுடத்தின்-எசமான்கள்-ப-3/?amp

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

 

இது இறுதி பாகம். இதில் மக்கள் போராட்டத்தின் சக்தியை பேராசிரியர் விளக்குகிறார். போராட்டங்களால் எதுவித பலனும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு இது பாடமாக அமையும்.

இரண்டாம் சக்தி

கடந்த ஒரு சந்ததியாக தொடர்ந்த நவதாராளவாத திட்டங்கள், செல்வத்தையும் அதிகாரத்தையும் மிகச்சிலரின் கைகளில் கொடுத்து சனநாயகம் முறையாக செயற்படுவதை தடுத்திருக்கிறது. அதேநேரம் இந்நவதாராளவாத திட்டங்களுக்கு பலமான எதிர்ப்புகளும் தோன்றியிருக்கின்றன. முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் தோன்றியிருக்கிறது. உலக அதிகார மையங்களிலும் எதிர்ப்புகள் தோன்றி இருக்கின்றன.

இரண்டாம் உலக போருக்கு பின்னரான நம்பிக்கை தரும் ஒரு மாற்றமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம் இருந்தது. ஆனால் இதுவும் பொருளாதார பின்னடைவின் போது போடப்பட்ட கடுமையான சிக்கன திட்டங்களால் நிலைகுலைந்து போனது. இச்சிக்கன திட்டங்களை சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார நிபுணர்களும் கண்டித்திருக்கிறார்கள். அரசியல்-பொருளாதார முடிவுகள் பிரசல்ஸ்சில் இருக்கும் மையத்திற்கு விடப்பட்டதால், சனநாயகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய அரசியல்வாதிகளிடம் இல்லாமல் போய்விட்டது. சந்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புக்களும் கம்பனிகளுமே முடிவு செய்பவர்களாக உள்ளார்கள். இது நவதாராளவாத கொள்கைகளுக்கு அமைவாகவே நடக்கிறது. இதானால் அதிருப்தியடைந்த மக்கள் மையநீரோட்ட கட்சிகளிலிருந்து விலகி, இடதுசாரி கட்சிகளுக்கும் வலதுசாரி கட்சிகளுக்கும் மாறுகிறார்கள்.

இதே காரணங்களுக்காக இதுபோலவே ஐ-அமெரிக்காவிலும் நடைபெறுகிறது. ஐ-அமெரிக்காவில் இது நடைபெறுவது ஐ-அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐ-அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரத்தால் உலகத்தில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

“வன்முறை அரசியல்” என்ற தனது நூலில் வில்லியம் போக், “ஐ-அமெரிக்க விடுதலை போராட்டத்திலிருந்து” தற்கால ஆப்கான் மற்றும் இராக்கி போராட்டம் வரை பரிசீலிக்கிறார்.

ஐ-அமெரிக்க விடுதலை போராட்டத்தின் தலைவராகவும் பின்னர் அதன் முதல் சனாதிபதியாகவும் இருந்த வாஷிங்டன் போராட்டத்தின் போது உடனிருந்து போராடிய போராளிகளை வெறுத்தார். போராளிகளை புறம்தள்ளி வைப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

இதனால் அதுவரை போராளிகளால் – இன்று இவர்களை நாம் பயங்கரவாதிகள் என்கிறோம் – பல வெற்றிகளை கண்ட போராட்டம், பல கட்டங்களில் தோல்வியை தழுவும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. உண்மையிலேயே இது தோல்வியில் முடிந்திருக்கும். பிரான்ஸ் தலையிட்டுதான் புரட்சியை காப்பாற்றியது.

இம்மாதிரியான போராட்டங்களில் ஒரு பொதுத்தன்மையை வில்லியம் போக் அவதானிக்கிறார். இப்போராட்டங்கள் வெற்றிபெற்ற பின்னர், அதற்கிருந்த பரந்துபட்ட மக்கள் ஆதரவு கரைந்து போகும். போராட்ட தலைவர்களாக இருந்தவர்கள், கொரில்லா முறையிலும் “பயங்கரவாதத்தாலும்” போரை வென்ற போராளிகளை, “கீழ்மட்டத்தவர்கள் அழுக்கர்கள்” என்று புறம்தள்ளுவார்கள். ஏனெனில் இவர்கள் வர்க்க நலன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என்ற பயம்.

காலம் காலமாக, மேல்மட்டத்தவர்களின் “கீழ்மட்டத்திலுள்ளவர்கள்” பற்றிய வெறுப்பு வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது. அண்மைக் காலங்களில் இந்த வெறுப்பானது, நிலைமையை ஏற்றுக்கொள்ளும் சனநாயக மிதவாதிகளாக இவர்களை இருக்குமாறு கேட்கும் ஒரு வடிவத்தை எடுத்திருக்கிறது.

சில சமயங்களில் அரசுகள் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும். இது பெரிய அரசியல் மையங்களில் ஆத்திரத்தை உண்டாக்கும். 2003 இல் இடம்பெற்ற ஒன்றை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

இராக் நாட்டை முற்றுகையிடும் நடவடிக்கையில் துருக்கியும் இணைய வேண்டும் என்று ஐ-அமெரிக்க புஸ் அரசு கேட்டது. 95 வீதமான துருக்கி மக்கள் இதை எதிர்த்தார்கள். துருக்கி அரசு இம்முறை மக்களின் கருத்துக்கு அடிபணிந்த போது ஐ-அமெரிக்க அரசு ஆத்திரமடைந்தது. துருக்கி அரசு பொறுப்பாக நடக்கவில்லை என்று திட்டியது. மக்களின் எதிர்ப்புகளை கணக்கிலெடுக்காத புஸ் ஆட்சி “சனநாயத்தை பரப்புகிறது” என்றெல்லாம் புகழ்ந்தார்கள்.

துருக்கி மக்கள் மட்டுமல்ல உலகளாவிய எதிர்ப்பும் பலமாகவே இருந்தது. சர்வதேச கருத்து கணிப்புகளின்படி பிரித்தானிய-ஐ-அமெரிக்க இராக்கின் மீதான முற்றுகைக்கு உலகத்தில் எங்குமே 10 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு இருக்கவில்லை. உலகிலேயே முதன்முறையாக ஒரு ஏகாதிபத்திய அரசின் நடவடிக்கைக்கு அது ஆரம்பிக்க முன்னரே கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் கிளம்பின. நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் ஒரு ஊடகவியலாளர்,  இன்றும் உலகில் இரண்டு சக்திகள் உண்டு. ஒன்று ஐ-அமெரிக்கா மற்றது உலக மக்கள் கருத்து என்று எழுதினார். 1 மானுடத்தின் எசமான்கள் (பாகம்–05)-தமிழில் ந.மாலதி

ஐ-அமெரிக்காவில் போர்களுக்கு எதிரான போராட்டங்கள் பல தசாப்தங்களுக்கு முன்னரே, வியட்நாம் போரின் போதே தோன்றிவிட்டது. 1967 இல் போருக்கு எதிரான போராட்டங்கள் ஒரு சக்தியாக திரண்ட காலத்தில் வரலாற்றாசிரியர் பெர்னார்ட் ஃபோல் “வியட்நாம் என்ற ஒரு வரலாற்று கலாச்சாரமே முற்றாக அழிக்கப்பட போகிறது. அதன் கிராமப்புறங்கள் மிகப்பெரும் இராணுவ யந்திரத்தின் கீழ் நசுக்கப்படுகிறது” என்று எச்சரித்தார்.

அப்போருக்கு எதிரான போராட்டத்தின் சக்தியை ஐ-அமெரிக்காவால் புறந்தள்ள முடியவில்லை. இதுபோல றொனால்ட் ரேகன் மத்திய-அமெரிக்காவில் போர் நடத்தும் திட்டத்துடன் ஆட்சிக்குக்கு வந்த போதும் போராட்டத்தின் சக்திளை இவரால் புறந்தள்ள முடியவில்லை. இருந்தும் போரின் உக்கிரம் மோசமானதாகவே இருந்தது. மத்திய-அமெரிக்கா அதிலிருந்து இன்னும் மீளவில்லை. வியட்நாம் போருக்கு எதிரான “இரண்டாம் சக்தியின்” போராட்டம் காலம் பிந்தியே ஆரம்பித்ததால் விடயட்நாமில் போரின் தாக்கம் பலமடங்கு மோசமாக இருந்தது.

இராக் போருக்கு எதிரான பலமான மக்கள் போராட்டங்களால் இதை தடுக்க முடியவில்லையே என்று பலர் இன்று வாதிடுவார்கள். இந்த வாதம் தவறு என்றே எனக்கு படுகிறது. இப்போரின் கொடூரங்கள் மோசமாவையே. ஆனால் இதையும் விட இது மோசமாக இருந்திருக்கும். 40 ஆண்டுகளுக்கு முன்னர் போருக்கு எதிரான போராட்டங்கள் இல்லாத காலத்தில் ஐ-அமெரிக்க சனாதிபதிகள் எடுத்த போர் நடவடிக்கைகளை இராக் போரின் போது இருந்த போராட்டங்களின் காரணத்தால் பிற்கால ஐ-அமெரிக்க சனாதிபதிகளால் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

                                            முற்றும்

https://www.ilakku.org/மானுடத்தின்-எசமான்கள்-ப-5/?amp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.