Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசியமா? பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வது தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற வேளையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்துள்ள நிலையில் முக்கிய இரண்டு விடயங்களை அடையாளப்படுத்த வேண்டும். 

குறிப்பாக தடுப்புக்காவல் காலத்தை குறைந்துள்ளமை மற்றும் நீதிபதி சிறைக்கும், தடுப்பு முகாம்களுக்கும் சென்று தடுப்புக்காவலில் உள்ளவர்களை பார்வையிடுவது போன்றவை சித்திரவதையை தடுக்கும் செயற்பாடாக இருக்கும். 

ஆகவே இவை இரண்டுமே குறிப்பிடத்தக்க மேம்பாடாகும். 

இந்த திருத்தங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்பித்த போதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இது குறித்து அதிருப்தியையே வெளிப்படுத்தியிருந்தார். 

பொறுப்புக்கூறல் விடயத்தில் கலப்பு நீதிமன்ற முறையை இலங்கை நிராகரித்து உள்ளக பொறிமுறையை வலியுறுத்தியமை, நாட்டின் இன முரண்பாடுகள் விடயத்தில் சட்டம் மற்றும் நீதிப்பொறிமுறையானது ஊழல் மிகுந்ததாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 பக்கசார்பு, பாராபட்சம் காணப்படுவதாகவும், இது முழுமையான உள்ளக விசாரணைகளையோ நீதி பொறிமுறையையோ பலவீனப்படுத்தும் என்றார்.

இன்று பலர் தேசிய பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பேசுகின்றனர். 

தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தில் தேசியம் என்பது என்ன? வெறுமனே சிங்கள மக்களை மட்டுமே பாதுகாப்பதுதான் தேசியமா? ஒரு தரப்பை மட்டுமே பாதுகாப்பது தேசியமா அல்லது சகல இன மக்களையும் பாதுகாப்பது தேசியமா? பெரும்பான்மையின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்மானம் எடுப்பது தேசியம் ஆகாது.

 பெரும்பான்மையின் தேவைகளை பூர்த்தி செய்வது தேசியம் என அர்த்தப்படுத்த வேண்டாம், நீங்களே இந்த நாட்டின் உரிமைகளை பறிக்கும் விதமாக செயற்படுகின்றீர்கள் என்பது எவராலும் மறுக்க முடியாது. 

இந்த தேசம் ஒரு தரப்பை மட்டுமே ஏற்றுக்கொண்டு ஏனைய தரப்பை நிராகரித்துக்கொண்டுள்ளது.

ஆயுதம் ஏந்தவோ, பயங்கரவாதத்தை உருவாக்க வேண்டும் என்றோ கூறவில்லை. ஆனால் எம்மை தொடச்சியாக புறக்கணித்து எம்மை புறந்தள்ளிக்கொண்டுள்ளீர்கள். 

எமது காணிகள் பறிக்கப்படுகின்ற நிலையில், , எமது மத அடையாளங்கள் அழிக்கப்படுகின்ற நிலையில் நாம் என்ன செய்ய முடியும். 

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வடக்கிற்கு விஜயம் செய்த வேளையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

புலம்பெயர் தமிழர்கள் உலகில் பல செல்வந்த நாடுகளில் உள்ளனர், அவர்களிடத்தில் இந்த நாட்டை மீட்கும் செல்வம் உள்ளது. 

இலங்கையில் இனவாதம் பரப்பப்பட்டுக்கொண்டுள்ளது, சிங்கள மக்களுக்கு தொடர்சியாக பொய்களை கூறிக்கொண்டுள்ளீர்கள். 

சிங்கள மக்களிடம் நான் கேட்பது அதுவே, நீங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு பொய்களுக்கு ஏமாந்துகொண்டுள்ளீர்கள் அதுவே இந்த நாடு வீழ்ச்சியடைய காரணம், அதில் இருந்து விடுபட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார். 
 

https://www.virakesari.lk/article/124583

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.