Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சஜித்துடன் பேச்சு நடத்தும் பத்துக்கட்சிகளைச் சேர்ந்த அணியினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்துடன் பேச்சு நடத்தும் பத்துக்கட்சிகளைச் சேர்ந்த அணியினர்

(ஆர்.ராம்)

தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கத்தினை வீழ்த்துவதே பிரதான இலக்காக உள்ள நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவருவது வீணானது என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பத்துக்கட்சிகளைக் கொண்ட அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விடயம் சம்பந்தமாக பத்துக்கட்சிகள் அணியில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரியின் தலைவர் வாசுதேவநாணயக்கார எம்.பி கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினை வீழ்த்துவதே எமது பிரதான இலக்காக உள்ளது. அவ்வாறான நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவவதால் பயனில்லை.

ஆளம் தரப்பில் உள்ளவர்களின் இன்னமும் ஐந்தாறு பேரை எமது மக்கள் இணைத்துக்கொண்டால் அரசாங்கம் பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்து விடும்.

ஆகவே அதற்கான முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கின்ற தருணத்தில் புதிய பிரதமர் தலைமையில் ‘தேசிய நிறைவேற்று சபை’ நிறுவப்பட்டு அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும்.

அந்த தற்காலிக கட்டமைப்பு ஊடாக பொருளாதார மீட்சிச் செயற்பாடுகளில் ரூடவ்டுபடமுடியும். அதனைத் தவிர்த்து நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதால் எவ்விதமான பயனுமல்லை. இந்த விடயத்தினை நான் உள்ளிட்ட எமது தரப்பினர் சஜித் பிரேமதாசவுடன் உரையாடி தெரிவித்துள்ளோம்.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவார்களாயின், அதற்கு நாம் ஆதரவளிக்க முடியாது. ஆகவே அதுதொடர்பில் எமக்குள் கலந்துரையாடல்களைச் செய்து இறுதி முடிவினை எடுப்போம் என்றார்.

 

https://www.virakesari.lk/article/125578

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

ஆளும் தரப்பில் உள்ளவர்களின் இன்னமும் ஐந்தாறு பேரை எமது மக்கள் இணைத்துக் கொண்டால் அரசாங்கம் பாராளுமன்ற பெரும்பான்மையை இழந்து விடும்.

அங்கஜன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், வியாளேந்திரன், தொண்டைமான்... 
இந்த,  ஐந்து பேரையும்... அமத்துங்க.  😂
அரசாங்கம் கவுண்டு  விடும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சஜித் தரப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- தொடரும் போராட்டங்கள்: கொழும்பில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இதற்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தில், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்தோடு, நாட்டின் தற்போது இடம்பெறும் எதிர்ப்பு போராட்டங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1276045

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.