Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி செயலக கட்டடத்தில்... ‘Go Home Gota’..! – 10ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஜனாதிபதி செயலக கட்டடத்தில்... ‘Go Home Gota’..! – 10ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 10ஆவது நாளாகவும் தொடர்கிறது.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.

அத்தோடு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக போராட்டத்தின் மற்றொரு வடிவமாக நேற்றைய தினம் இரவு காலிமுகத்திடல் வளாகத்தில், போராட்டக் குழுக்களும் பொதுமக்களும் ஜனாதிபதி செயலகத்தின் முன்பக்க சுவர்களில் ஒளித்திரை (ப்ரொஜக்டர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆக்கபூர்வமான யோசனைகளை காட்சிப்படுத்தின.

‘Go Home Gota’ என்ற ஸ்லோகமும் ஜனாதிபதி செயலக கட்டடத்தில் காட்சிப் படுத்தப்பட்டது.

அதேநேரம், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நேற்று வலியுறுத்தப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1277013

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலகத்தை 'தெறிக்கவிட்ட' இளையோர்!

 
ஜனாதிபதி செயலகத்தை ‘தெறிக்கவிட்ட’ இளையோர்!

காலிமுகத்திடலில் நேற்று 9ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, ஜனாதிபதி செயலகத்தில், போராட்ட வாசகங்களை வர்ண ஒளிகளால் தெறிக்கச் செய்தனர்.
மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

காலிமுகத்திடலில் ‘கோத்தாகோகம’ கிராமத்தில் தங்கியிருந்து இளைஞர்கள் போராடி வருகின்றனர். ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு வேலியின் வெளிப்புறமாக, போராட்டக்களத்திலிருந்து ‘புரொஜெக்டர்’ மூலம், ஜனாதிபதி செயலக கட்டடத்தில், ராஜபக்ச அரசுக்கு எதிரான தமது போராட்டக்கள வாசகங்களை வர்ண ஒளிகளூடாகத் தெறிக்க விட்டனர்.

ஜனாதிபதி செயலக பாதுகாப்புப் பிரிவினர் இதனைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென இவ்வாறு ஜனாதிபதி செயலக கட்டத்தில் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களின் ஒளியுருக்கள் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்புப் பிரிவினர், மறைப்பு ஒன்றை எடுத்து வந்து, ஜனாதிபதி செயலக பாதுகாப்பு வேலியின் உட்புறமாக நின்று, ‘புரொஜெக்டருக்கு’ நேர் எதிரில் நின்று மறைத்தனர். அதன் மூலம் ஜனாதிபதி செயலக கட்டடத்தில் வாசகங்கள் தெறிப்பதை ஓரளவுக்கு தடுத்தனர்.
 

 

https://newuthayan.com/248/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, outdoors and monument

 

May be an image of 5 people, outdoors and monument

 

May be an image of 6 people, outdoors and monument

 

May be an image of 6 people, outdoors and monument

 

May be an image of 4 people, outdoors and monument

 

May be an image of 6 people, monument and outdoors

ஜனாதிபதி செயலகத்தை.... #GoHomeGota என, 
மின்னொளியினால் மாற்றியமைத்த இளைஞர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.