Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதி தேடும் தமிழினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-01

நீதி தேடும் தமிழினம்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில், இலங்கைத்தீவின் தற்போதைய முறையின் கீழான நீதித்துறைக் கட்டமைப்பு மூலம் தங்களுக்கு நியாயம் கிட்டும் என்ற நம்பிக்கை சிறுபான்மையினரான தமிழர்களுக்கு முற்றாகவே தகர்ந்து வருகின்றது.

இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய விடயங்களில் நீதித்துறையின் அண்மைக்காலத் தீர்ப்புகள் அப்படியான மனநிலையையே தமிழரின் மனதில் ஏற்படுத்தி நிற்கின்றன.

*ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் மீள் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கான பொதுக்கட்டமைப்பு விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

*இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் முன்மொழியப்பட்டு அதன் அடிப்படையில் ஐக்கியப்பட்டிருந்த தமிழ்த் தாயகத்தை - 17 வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தும் இவ்வளவு காலமும் அதே நிறைவேற்று அதிகாரத்தால் நீடிக்கப்பட்டு வந்த இணைப்பை நிராகரித்து - 17 வருட செயற்பாட்டைத் தவறெனப் பிரகடனப்படுத்தி, வடக்கு, கிழக்கைப் பிளவுபடுத்த நீதிமன்றம் விடுத்த உத்தரவு.

*யாழ். குடாநாட்டில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பூர்வீக மக்கள் அதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நியாயமான நிவாரணத்தைப் பாதிக்கப்பட்டோருக்குத் தராமல் நீதிமன்றத்தின் முன் இழுபடுகின்ற போக்கு.

*மூதூர் கிழக்கை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதை ஆட்சேபித்து அப்பகுதித் தமிழர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை முடிவுக்குக் கொண்டு வந்து, இனிமேல் அத்தகைய அடிப்படையில் விண்ணப்பங்கள் செய்வதற்கு இடமேயளிக்காமல் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளை.

* யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கக் கோரும் பௌத்த - சிங்களப் பேரினவாத சக்திகளின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்த முடிவுக்கு எதிரான முறையீட்டை விசாரணைக்கு ஏற்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட கருத்துகள், அவதானிப்புகள்.

- இவை போன்றவை இலங்கையின் தற்போதைய ஆட்சி முறைமைக்கு உட்பட்ட நீதித்துறைக் கட்டமைப்பின் மூலம் தங்களுக்கு நீதி செய்யப்படும் - நியாயம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையைத் தமிழர்கள் மனதில் இருந்து அடியோடு தகர்த்து விட்டன.

இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிப்பது இலங்கையின் நீதிமுறையின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும். அந்தப் பின்னணியில் - அதன் காரணமாக - அத்தீர்ப்புகள் கடுமையானவையா, பிழையானவையா, நீதியானவையா, சரியாவையா என்பன போன்றவற்றை சட்டத்தின் ஊடாக ஆராய்ந்து கருத்துக் கூறுவதை - அதற்கான வாதத்திற்கு வலுவான காரணங்கள் இருந்தும் - இப்பத்தியில் தவிர்த்துக் கொள்கின்றோம்.

ஆனால் இத்தீர்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மை இனமான தமிழினத்திற்கு நம்பிக்கை தருவனவாக - தெம்பூட்டுவனவாக - யார் கைவிட்டாலும் நீதித்துறை தமக்கு நியாயம் செய்யும் என்ற உறுதியைத் தருவனவாக - அமையவேயில்லை என்ற நிதரிசனத்தை - தரிசனத்தை - நாம் வெளிப்படுத்துவது நமது கடமையே எனக் கருதுகின்றோம்.

இலங்கைத்தீவின் ஆட்சி முறைமையையும், நீதித்துறைக் கட்டமைப்பையும், நிறைவேற்று அதிகாரச் செயற்பாட்டையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்தி, வரையறை செய்யும் உயர் அதிகாரம் இலங்கைத்தீவின் அரசமைப்பிடமே உள்ளது.

இலங்கையின் நீதித்துறையாகட்டும், அல்லது நிறைவேற்று அதிகாரமாகட்டும், அல்லது சட்டமாக்கல் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றமாகட்டும் - எதுவென்றாலும் - அரசமைப்புக் கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் இணங்கவே ஒழுக முடியும்; செயற்பட முடியும். அதுவே யதார்த்தப் புறநிலையாகும்.

1948 இல் இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திடமிருந்து சுதேசிகளிடம் கைமாறுகின்றது என்ற பெயரில், தீவின் பெரும்பான்மையினரான பௌத்த, சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போதிருந்த அரசமைப்பு 1970 ஆம் ஆண்டில் ஒரு தடவையும், 1978இல் மற்றொரு தடவையும், புதிய ஏற்பாடுகள் மூலம் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாக மாற்றியமைக்கப்பட்டன.

நாட்டின் ஆட்சி முறைமையையே தலைகீழாக மாற்றும் இந்தப் புதிய அரசமைப்பு உருவாக்கலில் தமிழினம் சம்பந்தப்படவேயில்லை. சிறுபான்மையினரான தமிழரை அடிமைப்படுத்தி, தமது மண் மீதான அவர்களின் வாழ்வியல் உரிமைகளையும், சுதந்திரங்களையும், ஆட்சி அதிகாரத் தத்துவங்களையும் கொத்தாகப் பறித்து, பௌத்த - சிங்களப் பேரினவாதத்தின் கீழ் சிறுபான்மையினரை நிரந்தரமாக அடிமைப்படுத்த வழி செய்யும் இந்த இரண்டு அரசமைப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழரின் பங்களிப்போ, இசைவோ, இணக்கமோ, சம்மதமோ இன்றி அவர்கள் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டன.

சிறுபான்மையினருக்கு நீதி செய்யும் வகையில் சற்று அரக்கவோ, நகர்த்தவோ, விட்டுக்கொடுக்கவோ, நெகிழ்த்தவோ கூட இடமளிக்காத வகையில்இரும்பினாலான சட்டச்சிறையாக அமைந்திருக்கும் இந்த அரசமைப்புகளின் கீழ் - அவற்றிற்கு உட்பட்ட நீதிமன்றங்களிடமிருந்து - இத்தகைய கையாள்கையையும் தீர்ப்புக்களையுமே தமிழினம் எதிர்பார்க்க முடியும்.

இந்த இறுக்கமான சட்டக் கட்டமைப்புக்கு வெளியே வந்து, தமிழர் பக்கத்தில் உள்ள வரலாற்று நியாயங்களையோ, உண்மை நியதிகளையோ இலங்கை நீதிமன்றங்கள் கவனத்தில் எடுத்து நீதி வழங்கும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கவே முடியாது. அதனையே தொடர்ந்து வெளிவரும் இலங்கை நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழர்களுக்கு உறுதிப்படுத்தி வருகின்றன.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.