Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் ஆக்கிரமிப்பு சின்னமாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன: த.தே.கூ. துரைரட்ணசிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஆக்கிரமிப்பு சின்னமாக புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன: த.தே.கூ. துரைரட்ணசிங்கம்

கிழக்கை ஆக்கிரமித்த சிறிலங்கா அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பின் சின்னமாக புத்தர் சிலைகளை நிறுவி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

மூதூர் கிழக்கில் இருந்து வெளியேறிய மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதும் வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தழிழ் மக்களுக்கு சிறிலங்காவில் ஒரு நீதியான தீர்வு கிடைக்காது என்பது தெளிவாகின்றது. இது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துலகிற்கும் புரிந்திருக்கும்.

"கிழக்கு அபிவிருத்தி திட்டம்" என்று சிறிலங்கா அரசு கூறிக்கொள்கின்றது. அதில் தமிழ் மக்களிடமோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனோ கலந்தாலோசிக்காமல் சிறிலங்கா இராணுவத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

மூதூரில் இருந்து கிளிவெட்டி செல்லும் பாதையில் மூன்றாம் கட்டை மலையில் புத்தர் சிலையை வைக்கும் செயற்பாட்டிலும். ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை முகத்துவாரத்திலும் உள்ள மலையில் புத்தர்சிலை அமைக்கும் செயற்பாட்டிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையின் கோட்டை நுழைவாசலில் ஒரு விகாரையும், கோட்டையின் வெளிப்புறத்தில் ஒரு விகாரையும் அமைத்தார்கள்.

இவற்றுக்கும் மேலாக தற்போது வீச்சுக்கு அண்மையில் உள்ள நகரசபை பொது நூலகத்திற்கு அருகாமை கடற்கரையில் ஒரு பௌத்த விகாரையை கட்டுவதற்கான நிதியினை திருகோணமலையின் அபிவிருத்தி என்ற பேரில் சிறிலங்கா அரசு வழங்கியுள்ளது

திருகோணமலை பட்டினத்தை பொறுத்தமட்டில் 250 மீற்றருக்கு ஒரு புத்தர் சிலை என்று காணப்படுகின்றது. இவ்வாறு சிறிலங்கா அரசு நில ஆக்கிரமிப்பின் சின்னமாக பௌத்த மதத்தை பயன்படுத்துகின்றது என்றார் அவர்.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலைகள் புதைக்கப்பட்டு புனித பூமி என்ற பெயரில்முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன

கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் பிரிந்து செயற்படுமானால் தமிழ், முஸ்லிம் சமூகம் அடிமையாக்கப்பட்டு சிறுபான்மையாக்கப்படுவதுடன் மிக விரைவில் கிழக்கு மாகாணம் சிங்கள இராச்சியமாக மாறும் என்பதில் ஐயமில்லை என அம்பாறை மாவட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையின் இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற நிலையிலிருந்து பங்காளர் என்ற நிலைக்கு மாறுகின்ற தன்மை தொடர்பாக முஸ்லிம்களுக்கு பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு கிடைக்கின்ற போது முன் வைக்கப்படவுள்ள முஸ்லிம்களின் பிரச்சினை சம்பந்தமான மாவட்ட மட்ட ஆலோசனை செயலமர்வு அட்டாளைச்சேனை லொய்ஸ் ஹோட்டலில் சனிக்கிழமை முஸ்லிம் சமாதான செயலகத்தினால் செயலகத்தின் செயலாளர் நாயகம் எம். ஐ. எம். முஹிதீன் தலைமையில் நடைபெற்ற போது கருத்துத் தெரிவிக்கையிலேயே புத்திஜீவிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இங்கு இவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிழக்கு பிரிந்து செயற்படுவதனால் சிங்களப் பேராதிக்கம் மேலோங்கிக் காணப்படும். இப்பிராந்தியத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை விகிதாசாரத்தில் குறைக்கும் நோக்குடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் சிங்கள மக்களால் நடைபெற்று வருகின்றன.

பொத்துவில் பிரதேசம் மிக விரைவில் சிங்கள இராச்சியமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளன. அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட அஸ்ரப் நகர் கிராமம், குடிலில் கிராமங்களில் திட்டமிடப்பட்டு சிலைகளை புதைத்து வைத்து விட்டு புனித பூமி என்ற போர்வையில் முஸ்லிம் மக்களின் குடியிருப்புக் காணிகள் விவசாயக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இது விடயம் முஸ்லிம் தலைவர்கள் மௌனமாக இருப்பது விசனத்துக்குரியது.

அம்பாறை மாவட்டம் என்றால் சர்வதேச மட்டத்துக்குத் தெரியும், இது முஸ்லிம்களின் மாவட்டம் என இம்மாவட்டத்தினையும் சிங்கள மாவட்டமாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. இவை இடைநிறுத்தப்பட வேண்டும். மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப்பினால் தென்கிழக்கு அலகு கோரி தீர்வு முன்வைக்கப்பட்ட போது திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்த்தனர். எனவேதõன் இணைந்த வடகிழக்குக்குள் முஸ்லிம்களுக்கு தீர்வு வேண்டும் எனவும் கருத்து முன் வைக்கப்பட்டன. முஸ்லிம் மாகாணம், தமிழ் மாகாணம் என பிரிந்து செயற்பட்டால் முஸ்லிம் மாகாணத்துக்கும் தமிழ் மாகாணத்துக்கும் பிரச்சினை வராதா? வந்தே தீரும்.

இதேவேளை இங்கு முஸ்லிம் மக்களின் முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டன. வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு, பாதுகாப்பும் ஆபத்தான தன்மையும், காணி சொத்து உரிமை, மீள்குடியேற்றம், மீள திரும்புவதற்கான உரிமை, சமாதான நடவடிக்கைகளில் முஸ்லிம்களின் தனிப் பிரதிநிதித்துவம், மனித உரிமை, ஜனநாயகம் நல்லாட்சி போன்ற விடயங்கள் பற்றி விரிவாக்கமும் மும்முரமாகவும் ஆலோசிக்கப்பட்டன. வரலாற்று முக்கியமான மாவட்ட மட்ட ஆலோசனைச் செயலமர்வில் முஸ்லிம் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் எம். எச். எம். சல்மான், உறுப்பினர் சட்டத்தரணி அபுல்கலாம் உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.