Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்ச- இ.தொ.கா. முறுகல் ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச- இ.தொ.கா. முறுகல் ஏன்?

[ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:04 ஈழம்] [கொழும்பு நிருபர்]

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே முறுகல் நிலை உருவானதற்கு இரண்டு காரணங்களை கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலையகத் தோட்டப்பகுதிகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழான ஐம்பது கணிணி மையங்களுக்காக செய்மதித் தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்ததாக இ.தொ.கா. தரப்பு கூறுகிறது. இதற்கான அனுமதியை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் தாம் ஏற்கனவே பெற்றிருந்ததாகவும் இ.தொ.கா. தரப்பு தெரிவித்தது.

எனினும் சுங்கப்பிரிவின் ஊடாக இந்த செய்மதித்தொலைத்தொடர்பு கருவிகளை வெளியேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து மகிந்தவின் ஆலோசகர் லலித் வீரதுங்கவிடம் கலந்துரையாடுவதற்காக பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர். ஆனால் லலித் வீரதுங்கவிற்கு நேரமில்லாத காரணத்தால் இ.தொ.காவினரை மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச சந்திப்பதற்கு ஏற்பாடானது.

இந்த சந்திப்பின் போது இ.தொ.கா.வினரை பசில் ராஜபக்ச மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருக்கிறார். பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கத்தின் மீது பசில் ராஜபக்ச கடும் வார்த்தை பிரயோகங்களை பாவித்துள்ளார் என்று இ.தொ.கா. வட்டாரங்கள் தெரிவித்தன.

நாவலப்பிட்டியில் இ.தொ.கா. வினரால் மேற்கொள்ளப்பட்ட மின்சாரத் திட்டம்தான் பசில் ராஜபக்ச, இ.தொ.கா. வினரை கடிந்து கொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மின்சாரத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் பிரதி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தடைகளை ஏற்படுத்தினார் என்றும், மகிந்த சிந்தனையின் கீழேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் என்றும் இ.தொ.கா. தரப்பு கூறுகிறது. ஆனால் அதற்கு உடன்பட மறுத்த இ.தொ.கா. வினர் எரிபொருள்துறை அமைச்சருடன் கலந்துரையாடி மேற்படி திட்டத்தை திட்டமிட்டபடியே தொடங்கியுள்ளனர்.

இந்த தொடக்க விழாவில் இ.தொ.கா. வின் திட்டமே இது என்று பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் உரையாற்றியுள்ளார்.

இந்த உரை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு அரசாங்கத்திடம் கூறப்பட்டிருப்பதாக இ.தொ.கா. தரப்பு கூறுகிறது. இதன் விளைவாகவே பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் மீது பசில் ராஜபக்ச கடும் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தினார் என்றும் அதனையடுத்தே அமைச்சுப்பதவிகளில் இருந்து விலக இ.தொ.கா. வினர் முடிவு செய்தனர் என்றும் இ.தொ.கா. உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிக்கொண்ட போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்பிலேயே தொடர்ந்தும் இருக்கும் என்றும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு ஒருபோதும் இ.தொ.கா. ஆதரவு வழங்காது என்றும் இ.தொ.கா. பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து இ.தொ.கா. விலகிவிட்டது என்று வெளிவந்த தகவல்களில் எதுவித உண்மையுமில்லை என்று தெரிவித்த அவர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பதில் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

அதாவது நாடாளுமன்றம் கூடும்போது நாங்கள் எந்த வரிசையில் அமரப்போகிறோம் என்பது இந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் திட்டம் ஏதும் உண்டா என்று கேட்டதற்கு அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்று அந்த தகவலையும் அவர் அடியோடு மறுத்துவிட்டார்.

இ.தொ.கா. வின் இந்த நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே இ.தொ.கா. வினர் அமைச்சுப் பதவிகளில் மட்டும்தான் விலகியுள்ளனர். ஆனால் அரசாங்கத்தில் இருந்து அவர்கள் விலகவில்லை. அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கமும் எனது நண்பர்கள். எனவே விரைவில் அவர்களின் பிரச்சினக்கு சுமூக தீர்வு காணப்படும். சில வார்த்தை பிரயோகங்களின் தவறான புரிந்துணர்வால் அமைச்சுப் பதவிகளை அவர்கள் விலகிச் செல்லும் நிலை வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் வேறு எந்த தரப்பினருடனும் இணையவில்லை என்றார்.

நன்றி - புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.