Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசை விமர்சிப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. - பெ.சந்திரசேகரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசை விமர்சிப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. - பெ.சந்திரசேகரன்.

Written by Pandaravanniyan - Aug 05, 2007 at 02:30 PM

அரசாங்கத்தை வெறுமனே விமர்சித்துக் கொண்டோ அல்லது ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டோ இருப்பதால் மட்டும் எதுவுமே நடந்து விடப்போவதில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் ஆகியோருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச்சந்திப்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் இன்றைய விலைவாசி ஏற்றம், ஆள் கடத்தல், கப்பம் அறவிடுதல், யுத்தத்தினால் ஏற்படும் சீரழிவுகள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினையில் அரசாங்கம் காட்டும் பராமுகம் போன்றவைகள் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அதிருப்தியை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

பதவியையும், அரசாங்கப் பாதுகாப்புக்களையும் படாடோபங்களையும் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த கட்சியல்ல மலையக மக்கள் முன்னணி. பலநூறு சவால்களை நேரடியாக சந்தித்து அதில் கிடைத்த வெற்றிகளை சாதனை படிகளாகவும் மக்களின் அபிமானத்தையும் பெற்றுவளர்ந்துள்ளோம்.

இன்றைய காலகட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மாத்திரமின்றி சிறுபான்மை மக்கள் தேசிய அடையாள அட்டைகள் இல்லாமல் இருப்பதும் அவர்களை அன்றாட தொல்லைக்குள்ளாக்கும் பிரச்சினை என்பது உண்மைதான். ஆனால் தோட்டத் தொழிலாளர்களையோ அல்லது முழு மலையக மக்களையோ பொறுத்தவரை இதுமட்டும்தான் பிரச்சினை என நாம் கருதவில்லை.

எமது மக்களுக்கு பிரஜாஉரிமை கிடைக்காதபோது அது மட்டுமே மலையக மக்கள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினை என பிரசாரப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று ஓரளவு அதற்கு தீர்வு காணப்பட்டிருந்தாலும் பிரஜா உரிமை கிடைத்துவிட்டது என்பதற்காக எமது அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

மலையக மக்களின் பிரச்சினை என்பது அடிப்படை மனித உரிமை தொடர்பானதே ஆகும். எம் மக்களின் கல்வி, வீட்டுரிமை, காணி, அரசியல் உரிமைகள், சகல மட்டத்திலும் எமக்குக்கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் போன்றவைகளுக்கு சரியான தீர்வு காணப்படுவது மட்டுமே எமது சமுகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்கு ஆரம்பமாக அமையும்.

அரசாங்கத்தில் உள்ள தொடர்பின் மூலமே எமது சமுதாயத்திற்கு ஆக்க பூர்வமான பலனை ஓரளவாவது ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்களிலேயே தொலைநோக்கு பார்வையுடன் அக்கறை காட்டுகின்றோம். இதற்கு ஏற்ற மாற்று செயற்பாடுகள் பற்றியும் பரிசீலனை செய்து வருகின்றோம். அதே நேரம் அரசாங்கத்தை வெறுமனே விமர்சித்துக்கொண்டோ தாக்கிக் கொண்டோ ஆர்ப்பாட்டங்கள் செய்துகொண்டோ இருப்பதால் மட்டும் எதுவுமே நடந்து விடப்போவதில்லை.

அத்தகைய நடவடிக்கைகள்கூட மக்கள் மத்தியில் தங்களை நியாயப்படுத்துவதற்காக சிலர் மேற்கொள்ளும் அரசியல் கபடநாடகமே என்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது. அதிதீவிரமான துணிகர அரசியல் நிலைப்பாட்டை நாம் மேற்கொண்டால் அது அரசியல் சூழலை அடியோடு மாற்றுகின்ற முடிவை இலக்காகக் கொண்டதாகவே இருக்கவேண்டும்.

அதற்கான அவசியமும் முன்னேற்பாடும் இருந்தாலேயன்றி வெறுமனே வீரம் பேசுவது என்பது மக்களின் முன்னால் போடுகின்ற திட்டமிட்ட அரசியல் வேடமாகவே இருக்கும். எனவே எந்த முடிவையும் தீர்க்க தரிசனத்தோடு எடுக்கக்கூடிய திராணியும், பலமும் எமக்கு உள்ளது. இந்த அரசியல் தெளிவுடனேயே எமது அமைச்சுப் பதவிகளையும் பயன்படுத்துவதற்கு நினைக்கின்றோம்.

ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவும் நேர்மையாகவும் உறுதியாகவும் அரசியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளை மிகவும் சரியாகத் திட்டமிட்டு வருகிறோம். தமிழ் சமுகத்திற்கும், மலையக மக்களுக்கும் மிகப்பெரும் ஆபத்து ஏற்படுகின்றதென்றால் எமது முழு சக்தியையும் பயன்படுத்தி எந்த முடிவையும் எடுப்பதற்கு நாம் பின்னிற்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.