Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் ருவாண்டா நிலை தான் ஏற்படும் - அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் ருவாண்டா நிலை தான் ஏற்படும் - அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

[05 - August - 2007]

-அ. ரஜீவன்-

வடபகுதியில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இலங்கையில் கம்போடியா, ருவாண்டா, கொசோவோ போன்ற நாடுகளில் காணப்பட்டது போன்ற மோசமான நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ள அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரெத் இவான்ஸ் சர்வதேச சமூகம் தலையிடக் கூடிய சூழல் உருவாகலாம் என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கொழும்பில், தேசத்தின் இறைமையின் எல்லைகளும் 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வும் எனும் பொருளில் `கலாநிதி நீலன் திருச்செல்வம் நினைவுப் பேருரை' யையாற்றியவேளை இதனை குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நாடுகள் ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவது குறித்து பரந்துபட்ட கவலை காணப்படுகின்றது. குறிப்பாக, முதலாம் உலக நாடுகள், மூன்றாம் உலக நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வது காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இறைமையை மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக கருதுவது புரிந்து கொள்ளத்தக்கது.

இந்த நாடுகள் தமது புதிய இனத்துவ அடையாளம் குறித்து பெருமிதம் கொள்கின்றன. தமது பலவீனங்கள் குறித்து உணர்ந்துள்ள இந்த நாடுகள், தலையீடு செய்வதை எதிர்ப்பதை, சக்தி வாய்ந்த நாடுகள் தமது பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுப்பதற்காக கொடுக்கும் அழுத்தங்களுக்கான தற்பாதுகாப்பாக கருதுகின்றன.

எனினும், இந்த அணுகுமுறையில் பிரச்சினையுள்ளது. 1990 களில் மனச்சாட்சியை உலுக்கிய மனிதப் படுகொலைகளின் பின்னரே (பால்க்கன், மத்திய ஆபிரிக்கா - மிகக் கொடூரமான ருவாண்டா இனப்படுகொலை (1994 , இதன் பின்னர் நினைத்துப் பார்க்க முடியாத ஸ்ரெபிரெனிகர் படுகொலை) மனிதாபிமான ரீதியில் தலையிடுதல் எனும் அணுகுமுறை தீவிரமடைந்தது.

பல தடவைகள் சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட வேண்டிய தேவை காணப்பட்ட போதிலும் அது பிழையாகவும், முழுமையற்ற விதத்திலும் எதிர்மறையான நிலைமையை ஏற்படுத்தக் கூடிய விதத்திலும் செயற்பட்டுள்ளது.

1999 இல் கொசோவோவில் இனப்படுகொலையும், இனச் சுத்திகரிப்பும் மீண்டும் ஆரம்பமான வேளை சர்வதேசம் உரிய முறையில் இராணுவ ரீதியாக தலையிட்டது.

எனினும், பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றியும், ரஷ்யாவின் வீட்டோ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சர்வதேச சமூகம் தலையிட்டது முழுமையான சர்வதேச பாதுகாப்பு செயற்பாட்டின் நேர்மை குறித்த கேள்விகளையெழுப்பியது.

1990 முழுவதும் தலையீடு மற்றும் இறைமை குறித்த பாரிய விவாதம் இடம்பெற்று வந்தது. தற்போதைய பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கௌச்னா முன்வைத்த மனிதாபிமான தலையீட்டிற்கான உரிமை ஒரு பக்கத்தில் காணப்பட்டுள்ளது.

உலகின் தென்பகுதியிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு காணப்பட்டது. குறிப்பாக, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தேசிய இறைமை தொடர்பானது, 1990 இல் இந்த விவாதத்திற்கு முடிவு காணாமலேயே முடிவடைந்தது.

ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் தேசிய இறைமையை தனிப்பட்ட இறைமையை அடிப்படையாக வைத்து மதிப்பிட வேண்டும். இவ்வாறே சர்வதேச மனித உரிமை ஏற்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததன் மூலம் இந்த விவாதத்திற்கு தீர்வு காண முயன்றார். எனினும், இதனை எவரும் செவிமடுக்கவில்லை.

2000 ஆம் ஆண்டு பொதுச் சபைக்கான தனது அறிக்கையில் மனிதாபிமான தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இறைமை மீதான தாக்குதலென்றால், ருவாண்டா, போன்ற சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என அவர் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் மீண்டும் மோதல் ஆரம்பித்த பின்னர் அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் தமது இராணுவ நடவடிக்கையையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்துவதில் அவதானமாகவுள்ளன.

கடந்த 20 மாதகாலப் பகுதியில் 4500 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, இரு தரப்பும் தொடர்ச்சியாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி வந்துள்ளன. சமீபத்தைய வன்முறைகள் பாரிய அட்டூழியங்கள் இனப்படுகொலைகள், இனச் சுத்திகரிப்பு அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றளவிற்கு செல்லவில்லை. முழுமையான பேரழிவு அல்லது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்ட பேரழிவு என்பதற்கான எல்லையை தொடாமல் இது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலைப் புலிகளின் ஷெல் வீச்சையும், அரசாங்கத்தின் விமானக் குண்டுவீச்சு, பல்குழல் தாக்குதல்களிலிருந்து தப்பி, தொடர்ச்சியாக இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதைச்சொல்லியுள்ளார்

யாருக்காவது தேள்கொத்தின மாதிரி இருக்குமே

அறிக்கைகளைக்காணோம்

எல்லோரும் கோடைவிடுமுறைக்கு போயிட்டினமோ??

இத்தனை அமைச்சர்கள் இருந்தும் அறிக்கைவிட ஆளில்லை

என்ன அமைச்சரவை.

வேற ஏதும் கட்சிகளில் ஆளிருந்தால்சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னன்மார் காத்திருக்கிராங்கள் எப்ப வருவினம்.....உள்ளுக்க வச்சு சாத்திரதுக்கெண்டு உவங்கள் கெடுத்திருவாங்கள் போலருக்கே :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.