Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை

Featured Replies

தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை

- ச.மாடசாமி

குடும்பமும் திருமணமும்

""இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து.

"வனத்தில மேஞ்சாலும் இனத்தில வந்து அடையணும்" என்ற தமிழ்ச் சிந்தனை அவர் கூற்றை நிரூபிக்கத்தான் செய்கிறது.

அவரவரினன் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது.தூரங்களால்-நாகரிகங்களால்-சொந்தக்குடும்பத்திலிருந்து பிரிந்து கிடப்பவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தின் பிடிமண் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் கிடக்கிறது. வீட்டுக்குள் பண்பாட்டுப் பிரச்சினை தோன்றும் போதெல்லாம், அந்தப்பிடிமண்ணில் இருந்து பழைய முனியப்பசாமிகளும், கருப்பசாமிகளும் முளைக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக வயமாக்கலும், பண்பாட்டு வயமாக்கலும் (enculturaration) குடும்பத்திலிருந்து தான் தொடங்குகின்றன (2). தொடக்கம் மிக வலுவாக இருக்கிறது.

தொடர்ந்து நிலைத்திருப்பது, உலகளாவி இருப்பது என்ற அம்சங்களில் குடும்பத்துக்கு இணையான இன்னொரு அமைப்பைக் காணமுடியாது. ஆனாலும் உலகெங்கிலும் இந்த அமைப்பு ஒரே வடிவத்தில் இல்லை. குடும்பத்தின் வடிவம் மிக இறுக்கமாக இருப்பதாக கருதப்படும் இந்தியாவிலேயே ஏராளமான நெகிழ்ந்த வடிவங்களைச் சமூகவியலாளர் கண்டறிந்திருக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக 1999இல் ஒரிசாவில் பெய்த கடும் மழையும், அதன் விளைவான பெருவெள்ளமும் குடும்பங்களைச் சிதறடித்தன. உயிர்ப்போராட்டத்தில் புதிய பிணைப்புகள் உண்டாயின. சம்பிரதாயமான பழைய துணைகளைக் கைவிட்டு, நம்பகமான புதிய துணைகளைக் கண்டறிந்தவர்கள் பலர்.

வெள்ளம் வடிந்த பின், நூற்றுக்கணக்கில் புதிய கணவன்-மனைவி உறவுகளும், புதிய குடும்பங்களும் ஏற்பட்டன. "" ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு'' என்று குடும்பத்துக்கு விளக்கம் தருகிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.

"குடும்பம் வழங்கும் கூரை' குறித்து யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் குடும்பம் கூரையோடு மட்டும் இல்லை. மறித்து எழுப்பப்பட்ட சுவர்களோடும், எல்லைகளைக் குறுக்கும் வேலிகளோடும் தான் அது இருக்கிறது.

குடும்ப அமைப்பின் அடிப்படையாக திருமணம் திகழ்கிறது.வரன்முறைப்படுத்த

"தலைநரைச்ச கிழவனுக்கு தாலிநான் கட்டமாட்டேன்' என்று பெண் அடம்பிடித்து விடக்கூடாது என்பதற்காகத் தாலி கட்டும் வரை கண்களைப் பொத்தி வைக்கிறார்கள் ?? :o:o:D

மணப்பெண் மீது யாருக்கெல்லாம் உரிமை இருக்கிறது என்பதை இச்சடங்கு தெரிவிக்கிறது(23). திருமணத்தின்போது நடக்கும் இச்சடங்கில் வீட்டின் மூத்த மாப்பிள்ளைகள், மணப்பெண்ணை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக மணப்பெண் மணவறையில் உட்காரும் ஆசனத்தில் உட்கார்ந்து பிறகு விட்டுக்கொடுப்பார்கள். அதற்குப் பணம் கொடுக்கவேண்டும்.

எனக்கு இப்படி உட்கார்ந்து பழக்கமில்லை... :D:D

"" முலை தளர்ந்து, கூந்தல் நரைத்து இவள் முதியவளாகும் போதும் இவளைக் கைவிட்டு விடாதே '' (32) என்று கைகூப்பி வழியனுப்பும் தோழியின் கூற்று இப்பயத்தைப் பிரதிபலிக்கிறது.

தோள் தளர்ந்து, முடி நரைத்து, மொட்டை விழுந்து இவன் முதியவனாகும் போதும் இவனைக் கைவிட்டு விடாதே என்று ஒருவரும் கூறுவதில்லையா? :P

அழகான பெண்ணை எதிர்பார்க்கும் இளைஞனின் விருப்பம் வரதட்சிணைப் பிரச்சினையின் கனத்தைக் குறைத்திருக்கிறதா ? இல்லை.

?? இல்லையா?? :D

மணப்பெண் மீது யாருக்கெல்லாம் உரிமை இருக்கிறது என்பதை இச்சடங்கு தெரிவிக்கிறது(23). திருமணத்தின்போது நடக்கும் இச்சடங்கில் வீட்டின் மூத்த மாப்பிள்ளைகள், மணப்பெண்ணை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக மணப்பெண் மணவறையில் உட்காரும் ஆசனத்தில் உட்கார்ந்து பிறகு விட்டுக்கொடுப்பார்கள். அதற்குப் பணம் கொடுக்கவேண்டும்.

மன்னிக்கவும்... எதிர்காலத்தில் இவ்வாறு உட்காரமாட்டேன் என்று சொல்ல வந்தேன்... :lol:

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.