Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்...

2 ஆவது ரி20 போட்டி ஆரம்பம்...

 

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்றுள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

மூன்றாவது ரி20 போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடர் அவுஸ்திரேலியா வசம்

(கெத்தாராம அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் அவுஸ்திரேலியா இப்போதைக்கு தனதாக்கிக்கொண்டது.

125 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சிறு தடுமாற்றத்துக்கு மத்தியில் 17.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

Sri-Lanka-vs-Australia1.jpg

கேன் வில்லியம்சன், ஜய் வில்லியம்சன், க்ளென் மெக்ஸ்வெல் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் மெத்யூ வேடின் நிதானமான துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவை வெற்றி அடையச் செய்தது.

அதிவேமாக ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்த அவுஸ்திரேலியா 16 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது வனிந்து ஹசரங்க டி சில்வாவின் பந்துவீச்சில் தனுஷ்க குணதிலக்கவிடம் பிடிகொடுத்த ஆரோன் பின்ச் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 20 ஓட்டங்கள் சேர்ந்தபோது ஹசரங்கவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் மிச்செல் மார்ஷ் (11) நடையைக் கட்டினார்.

Sri-Lanka-vs-Australia2.jpg

அவரைத் தொடர்ந்து நுவன் துஷாரவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஸ்டீவ் ஸ்மித் (9) களம் விட்டகன்றார்.

திறமையாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த டேவிட் வோர்னர் அவசரமாக 2ஆவது ஓட்டம் ஒன்றை எடுக்க விளைந்து 21 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

9ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 80 ஓட்டங்களாக இருந்தபோது துஷ்மன்த சமீரவின் பந்தை கவனக்குறைவாக அடித்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் (9) சரித் அசலன்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

Sri-Lanka-vs-Australia3.jpg

இந் நிலையில் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற ஒரு நிலை காணப்பட்டதுடன் இலங்கை அணியினரும் இரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். அரங்கில் இரசிகர்களின் ஆரவாரங்களும் கரகோஷங்களும் ஓங்கி ஒலித்தன.

மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது 12ஆவது ஓவரில் க்ளென் மெக்ஸ்வெல் (19), ஏஷ்டன் அகார் (0) ஆசிய இருவரும் வனிந்து ஹசரங்கவின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், மெத்யூ வேட் (26 ஆ.இ.), ஜய் றிச்சர்ட்சன் (9 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியையும் தொடர் வெற்றியையும் உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு மாற்றத்துடன் களம் இறங்க இலங்கை அதே பதினொருவருடன் விளையாடியது. 

Sri-Lanka-vs-Australia4.jpg

முதலாவது போட்டியின் முதல் ஓவரிலேயே கைவிரலில் காயத்துக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டார்க்குக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜய் றிச்சர்ட்சன் அணியின் இணைக்கப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற முதலாவது போட்டியில் போன்று முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை  20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது போட்டியில் கடைசி 46 பந்துகளில் சரிந்த இலங்கை இந்தப் போட்டியில் அதற்கு எதிர்மாறாக ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

சுழல்பந்துவீச்சாளர் க்ளென் மெக்ஸ்வெலை ஆரம்பப் பந்துவீச்சாளராக பயன்படுத்திய அணித் தலைவர் ஆரோன் பின்ச் அதற்கான பலனை 5ஆவது பந்தில் பெற்றார்.

Sri-Lanka-vs-Australia5.jpg

மெக்ஸ்வெலின் பந்தை இடப்புறமாக சுழற்றி அடிக்க முயற்சித்த தனுஷ்க குணதலக்க (04) மிச்செல் மார்ஷிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். (5 - 1 விக்.)

இதனைத் தொடர்ந்து தடுமாற்றத்துக்கு மத்தியில் ஆமைவேகத்தில் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த இலங்கை 3ஆவது ஓவரில் பெத்தும் நிஸ்ஸன்கவின் (3) விக்கெட்டை இழந்தது. ஜய்ல் றிச்சர்ட்சனின் பந்துவீச்சில் அவரும் மிச்செல் மார்ஷிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். (7 - 2 விக்.)

இந் நிலையில் சரித் அசலன்கவும் குசல் மெண்டிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், 12ஆவது ஓவரில் மெக்ஸ்வெலின் பந்துவீச்சில் பின்சிடம் பிடிகொடுத்த அசலன்க 39 ஓட்டங்களுடன் வேளியேறினார்.

2 ஓவர்கள் கழித்து ஜய் றிச்சர்ட்சனின் பந்தை சுழற்றி அடிக்க முயற்சித்த குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களுடன் துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பானுக்க ராஜபக்ஷ (13), அணித் தலைவர் தசுன் ஷானக்க (14) ஆகிய இருவரும் கேன் றிச்சர்ட்சனின் பந்துவீச்சிலும் வனிந்து ஹசரங்க டி சில்வா (12) ஜய் றிச்சர்ட்சனின்  பந்துவீச்சிலும் தவறான அடி தெரிவுகளால் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் சாமிக்க கருணாரட்ன (0), துஷ்மன்த சமீர (0) ஆகிய இருவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து சென்றனர்.

மஹீஷ் தீக்ஷன ஒரு ஓட்டத்துடனும் நுவன் துஷார 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் கேன் றிச்சர்ட்சன் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும்  ஜய் றிச்சர்ட்சன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் இருவரது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதிகளாக அவை அமைந்தன.

அவர்களைவிட க்ளென் மெக்ஸ்வெல் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
 

https://www.virakesari.lk/article/129144

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.