Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கடத்தலுடன் இராணுவத்தினருக்கு தொடர்பு: அனைத்துலக மன்னிப்புச் சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கடத்தலுடன் இராணுவத்தினருக்கு தொடர்பு: அனைத்துலக மன்னிப்புச் சபை

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போது கடத்தப்பட்டிருந்தார். அவர் கடத்தப்பட்ட பகுதி இராணுவத்தின் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியாகும். எனவே கடத்தல்காரர்கள் இராணுவத்தினருடன் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள மாதாந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் பலவந்தமாக கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பான 5,749 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதனை தமது குழு ஆராய்ந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போனவர்களுக்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் படையினராலும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களினாலும் வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் கடத்தப்பட்டுள்ளனர்.

வழமையாக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் தொடர்புகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் தொடர்பான எந்த தகவல்களும் கிடைப்பதில்லை. இவற்றில் பல படையினரால் மேற்கொள்ளப்பட்டுகின்றன. ஏனையவை துணை இராணுவக் குழுவான கருணா குழு மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போது கடத்தப்பட்டிருந்தார். அவர் கடத்தப்பட்ட பகுதி இராணுவத்தின் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியாகும். எனவே கடத்தல்காரர்கள் இராணுவத்தினருடன் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம். அதன் பின் அவர் தொடர்பான எந்த தகவலும் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போனவர்கள் தொடர்பான செயற்குழு 1980 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் 2004 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பலவந்தமாக காணாமல் போனவர்கள் தொடர்பான செயற்குழு, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவும் பணியை மேற்கொண்டு வருகின்றது. காணாமல் போனவர்களின் விபரங்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தையும் கண்டறிவதில் அது மக்களுக்கு உதவி வருவதுடன் ஐந்து சுயாதீன நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.