Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னிபத்: வேலூரில் போராட்டம் - "இளைஞர்களின் ராணுவ கனவைக் கலைக்கும் திட்டம் இது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்னிபத்: வேலூரில் போராட்டம் - "இளைஞர்களின் ராணுவ கனவைக் கலைக்கும் திட்டம் இது"

  • பிரசன்னா
  • பிபிசி தமிழுக்காக
16 ஜூன் 2022
 

அக்னிபத்

இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள "அக்னி பத்" திட்டத்தை ரத்து செய்ய கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசிய கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களை சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில், சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய, 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்தும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இவர்களது, கல்வி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பொது நுழைவு தேர்வு இரண்டு முறை அறிவிக்கப்பட்டு பல்வேறு நிர்வாக காரணங்களால் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது.

இதில் குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கம் காரணமாக தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.

இதனால் ராணுவத்திற்கு செல்ல ஆர்வமுள்ள இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆகவே நிலுவையில் உள்ள எழுத்து தேர்வை உடனடியாக நடத்த கோரியும் நாடு முழுவதும் ஆங்காங்கே பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரிலும் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"ராணுவத்தில் சேருவது கனவு"

"ராணுவத்தில் சேருவதை நாங்கள் வேலையாகப் பார்க்கவில்லை. அது எங்கள் கனவு. அது அதை பறிக்க பார்க்கிறார்கள். 'அக்னிபத்' மூலம் 4 ஆண்டுக்கு மட்டும் ஆள் எடுத்துவிட்டு பின்னர் வெளியேற்றப்பட்டால் நாங்கள் வயதை தொலைத்து விட்டு என்ன செய்வது?" என கவலை தெரிவிக்கிறார் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த தாஸ்.

 

அக்னிபத்

"ராணுவத்தில் பணிபுரியும்போது மாதம் கிடைக்கும் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்க்கும் மாடுகளிடமிருந்து பால் கறந்து சம்பாதிக்க இயலும். பணம் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, ராணுவ உடை அணிந்து இருக்க வேண்டும் ராணுவ உடையை எங்களுடைய உயிராக நாங்கள் நினைக்கிறோம்" என்கிறார் தாஸ்.

'அக்னிபத்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதில் சேரும் 25% இளைஞர்கள் பின்னர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதாவது 100ல் 25 பேருக்கு முழு நேர சேவைக்கான வாய்ப்பு கிடைக்கும் என பாதுகாப்புத் துறை அறிவித்திருக்கிறது. நான்கு வருட சேவைக்குப் பிறகு தக்கவைக்கப்படும் 25 சதவிகித வீரர்கள், 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுவார்கள்.

இந்தத் திட்டம் நாடு முழுவதும் ராணுவத்தில் சேரக் காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் ராணுவ பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டோர் தற்போது எழுத்துத் தேர்வுக்காக காத்திருப்பதாக தாஸ் கூறுகிறார்.

"அக்னி பத்" திட்டம் ராணுவ அலுவலக பணிக்கு செல்வோருக்கு பொருந்தாது என்பதால், இதிலும் பாகுபாடு பார்க்கபடுவதாக அவர் கூறுகிறார். 2019-ல் நடந்த உடல் தகுதி தேர்வு முடித்து தற்போது வரை தேர்வு நடைபெறும் என காத்துக் கொண்டிருக்கிறோம். இதில் பலருக்கும் வயது கடந்துவிட்டது என்கிறார் அவர்.

"ராணுவத்தில் பணிபுரிந்த எங்கள் உற்றார் உறவினர்கள் தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களின் வழியில் தேசத்தின் மீது அதீத பற்று கொண்ட ராணுவத்தில் சேர்ந்து இந்த தேசத்திற்கு பணிபுரிய வேண்டும் என வாழ்நாள் கனவாக இதை நாங்கள் உயிருக்கும் மேலாக நினைத்து வருகிறோம். அதை அடைவதற்கு பல வருடங்கள் உழைத்து இருக்கிறோம். உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு சிறுவயதிலிருந்தே எங்களை நாங்கள் செதுக்கிக் கொண்டு இருக்கிறோம் எளிதாக உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற இயலாது. தற்பொழுது அனைத்தும் கைகூடி வரும் நிலையில் எல்லாம் கை மீறிச் செல்கிறது" என்றார்.

 

அக்னிபத்

 

படக்குறிப்பு,

போராட்டம் நடத்திய இளைஞர்களுடன் பேச்சு நடத்தும் அதிகாரிகள்

"கிராமப்புற இளைஞர்களுக்கு பாதிப்பு"

இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் எடுப்பதற்கான எழுத்துத் தேர்வும் நடைபெறாததால் ராணுவ வேலைவாய்ப்பு கனவில் இருந்த வட மாவட்ட இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர் என்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல்.

"எங்கள் கிராமத்திலிருந்து ராணுவத்தில் சேர்ந்து தாய் நாட்டிற்காக சேவை புரிந்து ஓய்வு பெற்று மீண்டும் எங்கள் கிராமத்திற்கு வந்த முன்னாள் படை வீரர்கள், நாங்கள் சிறுவர்களாக இருக்கும் சமயத்தில் எங்களை நல்வழிப்படுத்தி எங்களுக்கு தகுந்த பயிற்சி அளித்திருக்கிறார்கள்" என்கிறார் சக்திவேல்.

"அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை கொட்டி கொடுக்கும் துறையாக ராணுவம் உள்ளது. இதில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிரேட்ஸ்மேன் பணி தொடங்கி, ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பத்தாம் வகுப்பில் ஐம்பது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சோல்ஜர் பணியும், பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் பயின்றவர்களுக்கு டெக்னிக்கல், அறிவியல் பாடத்தில் பயின்றவர்களுக்கு நர்சிங் அசிஸ்டன்ட் , இதர பாடத்தில் பயின்றவர்களுக்கு கிளர்க் போன்ற பணிகளும் கிடைக்கும்." என்கிறார் சக்திவேல்.

"ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை கலைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ தேர்வை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம்." என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/india-61831083

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன அக்னிபாத் திட்டம்? நாடு முழுக்க பரவிய போராட்டம்.. இந்த 10 பாயிண்ட்ஸ் படிங்க ஈஸியா புரியும்! By Shyamsundar I Published: Friday, June 17, 2022, 16:10 [IST]

டெல்லி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. பெருங்களத்தூரில் முற்றம் பார்த்த 2 பிஎச்கே வீடுகள் @ 63 லட்சத்தில் இருந்து ஒரு பக்கம் காங்கிரஸ் சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு பக்க இளைஞர்கள் பலர் இந்த திட்டத்தை விமர்சனம் செய்து தன்னிச்சையாக போராடி வருகிறார்கள். அது என்ன அக்னிபாத் திட்டம் பார்க்கலாம்.

அக்னிபாத் போராட்டம்..மறுபக்கம் ஆள்சேர்ப்பு.. இளைஞர்களுக்கு தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அழைப்பு என்ன திட்டம்? 1. இந்திய ராணுவத்தில் இதுவரை நேரடி தேர்வு முறை மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் பணிக்கு சேர்ந்து 60 வயது வரை பணியில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ரிட்டையர் ஆகும் வரை பல்வேறு ரேங்குகளில் பணியில் இருக்க முடியும். 2. ஆனால் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக (முப்படையில் ஏதாவது ஒன்றில்) சேர முடியும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 3. பெண்கள், ஆண்கள் இரு பாலினரும் சேர முடியும் 17.5 - 21 வயது கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி. 10 அல்லது 12 வது வரை குறைந்தபட்சம் படித்து இருக்க வேண்டும் அக்னிபாத் 4. இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடம் செல்ல செல்ல சம்பளம் உயர்த்தப்படும். கடைசி வருடம், அதாவது 4வது வருடம் 40 ஆயிரம் ரூபாய் மாதம் சம்பளம் தரப்படும். 5. மொத்தமாக 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். விருப்பம் இல்லை என்றால் 4 வருடத்திற்கு பின் வெளியேறலாம் விருப்பம் உள்ளவர்கள் நிரந்தரமாக சேர விண்ணப்பிக்கலாம். ஆனால் அங்குதான் ஒரு செக் உள்ளது. தகுதி என்ன? 6. இதில் தகுதியானவர்கள் மட்டுமே 4 வருடத்திற்கு மேல் நிரந்தரமாக 15 வருடம் பணியாற்ற தேர்வு செய்யப்படுவர். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் நிரந்தர பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 7. 4 வருடத்தில் முதல் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படும். அதற்கு சம்பளம் உண்டு . தனிப்பட்ட இன்சூரன்ஸ், மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்கப்படும். இந்த 4 வருட ராணுவ பணி காலத்தில், ஏதாவது ராணுவ சண்டையில் காயங்கள் ஏற்பட்டால் அதற்கு 44 லட்சம் ரூபாய் வரை, காயத்தை பொறுத்த நிவாரணமாக வழங்கப்படும். 4 வருடம் முடித்து செல்லும் போது அவர்களுக்கு 11.7 லட்சம் ரூபாய் மொத்தமாக தரப்படும். ஏன் போராட்டம் 8. சரி நன்றாகத்தானே இருக்கிறது. இதற்கு ஏன் போராட்டம் என்று கேட்கலாம்.. இதை காங்கிரஸ் எதிர்க்க காரணம். ராணுவத்தில் ஒப்பந்த வீரர்கள் வந்தால் ராணுவத்தின் திறன் பாதிக்கப்படும். ராணுவ வீரர்களின் திறன் பாதிக்கப்படும். இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும். அதேபோல் 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள். இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளது. பாதுகாப்பு ரீதியாகவும், வேலைவாய்ப்பு ரீதியாகவும் பல சிக்கல்களை இது ஏற்படுத்தும் என்று கூறி உள்ளனர். 9. இளைஞர்கள் இதை எதிர்க்க காரணம் நிறைய உள்ளது. 4 வருடம் கழித்து இந்த இளைஞர்கள் என்ன வேலை பார்ப்பார்கள்? அவர்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வி. அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை. அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் புண்ணியம் இல்லை. இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். மாற்றம் செய்யப்பட்டது 10. இதில் வயது வரம்பு 21 வரை இருந்ததை எதிர்த்தும் இளைஞர்கள் நேற்று போராட்டம் செய்தனர். இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடஇந்தியாவில் தொடர்ந்து வரும் போராட்டங்களுக்கு இடையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/what-is-agnipath-why-did-this-central-government-scheme-create-tension-among-youths-10-points-462623.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.