Jump to content

உதய்பூர் படுகொலை: தலைவெட்டி வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதய்பூர் படுகொலை: தலைவெட்டி வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - நடந்தது என்ன?

32 நிமிடங்களுக்கு முன்னர்
 

கன்ஹையா லால் தேலி

பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC

 

படக்குறிப்பு,

கன்ஹையா லால் தேலி

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தையல்கடை நடத்தி வரும் ஒருவரை கடைக்குள் புகுந்த இருவர் கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தாங்கள் வெளியிட்ட காணொளியில், பாஜகவின் முன்னாள் உறுப்பினர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்த கொலை ஒரு பதிலடி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் அந்த காணொளியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தையல் கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலியை கொலை செய்ததாக கருதப்படும் முகமது ரியாஸ் மற்றும் கௌஸ் முகமது ஆகிய இருவரையும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள பீமில் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத சம்பவமா என்ற கோணத்திலும் விசாரணை

இந்த சம்பவத்தை தொடர்ந்து உதய்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு அமைதியையும், ஒழுங்கையும் நிலைநாட்ட போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், இதுகுறித்து மேலதிக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த ஒரு குழுவை இந்திய உள்துறை அமைச்சகம் சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த சம்பவம், தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தான் காவல்துறையின் கூற்றுப்படி, தனது மகன் கன்ஹையா லால் தேலி ஃபேஸ்புக்கில் ஒரு ஆட்சேபனைக்குரிய இடுகையை தவறாகப் பதிவு செய்ததாக அவரது தந்தை கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அவர்கள் முகத்தை மறைக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் ராஜ்சமந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதிர் சௌத்ரி கூறியதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

உதய்பூர் போலீசார் சொல்வது என்ன?

 

தலை வெட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - ராஜஸ்தானில் நேற்று நடந்தது என்ன?

பட மூலாதாரம்,ANI

இதுகுறித்து உதய்பூர் எஸ்பி மனோஜ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இது ஒரு கொடூரமான கொலை. சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில குற்றவாளிகளை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கொலை நடந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அனைத்து ஆவணங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போது நடப்பு நிலைமையை நாங்கள் சமாளித்து வருகிறோம். எல்லாவற்றையும் பரிசீலித்து ஆட்சியருடன் ஆலோசித்து வருகிறோம்," என்றார்.

இந்த நிலையில், சம்பவ இடத்தில் 600 கூடுதல் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஹவா சிங் குமாரியா தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் 144வது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், நூபுர் ஷர்மாவுக்கு எதிராக பதிவை எழுதியவரைக் கொல்லுமாறு முஸ்லிம் ஒருவர் தூண்டிவிடும் வீடியோ ஒன்று நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி

 

கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி ஆடைகள் அளவுகளை எடுத்தபோது.

பட மூலாதாரம்,PTI

 

படக்குறிப்பு,

கொலை செய்யப்பட்ட கன்ஹையா லால் தேலி ஆடைக்காக அளவுகளை எடுத்தபோது.

கன்ஹையா லால் தேலி, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார்.

செவ்வாய்க்கிழமை மதியம் துணி தைக்க வந்திருப்பதாக்கூறி இவரின் கடைக்கு வந்தவர்கள் அவரை கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து வாளால் வெட்டினர்.

இதில் கன்ஹையா லால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஒருவர் வாளால் வெட்ட மற்றொருவர் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்.

இந்து அமைப்புகளின் கோபம்

இந்த சம்பவத்தையடுத்து இந்து அமைப்புகள் மத்தியில் கோபம் ஏற்பட்டுள்ளது. நகரின் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. காலவரையற்ற கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலோத், அமைதி காக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் "உதய்பூரில் நடந்த இளைஞரின் கொடூரமான படுகொலைக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். குற்றவாளிகள் அனைவர் மீதும் (இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள்) கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல்துறை குற்றத்தின் வேர் வரை செல்லும். அமைதி காக்குமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்."என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். வீடியோவைப் பகிர்வதால், சமூகத்தில் வெறுப்பைப் பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும்"என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த படுகொலைக்கு நாடுமுழுவதும் கண்டம் வலுத்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "உதய்பூரில் நடந்த கொடூர கொலை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.

"இந்த கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து வெறுப்பை வெல்ல வேண்டும். அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

"உதய்பூரில் நடந்த கொடூர கொலை கண்டிக்கத்தக்கது. சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே எங்கள் கட்சியின் அடிப்படை நிலைப்பாடு" என ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-61977624

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.