Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் ஈழத் தமிழர் துயரம்: தமிழகம் இப்படியேதான் இருக்குமா?: "கருஞ்சட்டை தமிழர்"

Featured Replies

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றி விழாவைத் தொடர்ந்து வடக்கிலும் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக சிறிலங்கா கூறும் நிலையிலும் தாய்த் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் புதிய ஏடான "கருஞ்சட்டை தமிழர்" கேள்வி எழுப்பியுள்ளது.

திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் "கருஞ்சட்டை தமிழர்" (ஓகஸ்ட் 2007) ஏட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:

ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக இலங்கை இராணுவத்தினர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதற்காக கிழக்கின் உதயம் என்ற பெயரில் வெற்றி விழா ஒன்றையும் கொழும்பில் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

கிழக்குப் பகுதியின் முக்கிய இடங்களான மூதூர், சம்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது சிங்கள அரசு. அப்படியானால் அந்தப் பகுதிகளிலிருந்து போரின் காரணமாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகிறபோது அவர்களை அனுமதிக்க அரசாங்கம் மறுத்திருக்கிறது. இதன் காரணம் என்ன?

சம்பூரில் வாழும் மக்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவுமே இப்பகுதி இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது என அதீதப் பாசத்தோடு அறிவித்தவர்கள், அம்மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி மூதூர், சம்பூர் பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளனவாம்.

அதியுயர் பாதுகாப்பு வலையம் என்றால் அப்பகுதிகளில் இராணுவம் முகாம் அமைத்துக் கொள்ளும். அது வீடாக இருக்கலாம், பள்ளிக்கூடமாக இருக்கலாம், கோவிலாக இருக்கலாம். எல்லா இடங்களையும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொள்ளும். மக்கள் நடமாடவே முடியாது.

இதை எதிர்த்து, இப்பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் நடந்திருக்கிறது. அது எந்தவிதமான பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை.

சிங்கள அரசின் நோக்கம் என்னவென்றால், ஏதோவொரு காரணத்தைச் சொல்லி கிழக்குப் பகுதிகளிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிவிட்டு அங்கு சிங்களர்களைக் குடியமர்த்தி அப்பகுதிகளையும் சிங்கள மயமாக்குவதுதான். இப்படி ஒரு திட்டத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கும், இராணுவத்துக்கும் ஏவலாளிகளாக கருணா மற்றும் பிள்ளையாரின் குழுக்கள் செயல்படுகின்றனவாம்.

சிங்களர்களால் மட்டுமின்றி யானைகளாலும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொப்பிகல காட்டுப் பகுதியில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால், காடுகளில் இருந்த யானைகள், கூட்டம் கூட்டமாக வெளியேறியுள்ளன. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஊருக்குள் புகுந்த யானைகள் வயல்களை நாசமாக்கி வருவதுடன் பெருமளவு வீடுகளையும் இடித்துத் தள்ளியுள்ளன.

மட்டக்களப்பு மேற்குப் பகுதியில் இரண்டாயிரம் வீடுகள் யானைகளால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வெருகல் மண்டலச் செயலர் உமாமகேசுவரன் கூறுகையில், இந்த மாவட்டத்தில் ஐந்து சதவீத வீடுகள் குண்டுவீச்சில் சேதம் அடைந்துள்ளன. ஆனால், யானைகளால் 40 விழுக்காடு வீடுகள் சேதமாகிவிட்டன என்றார். ஏற்கெனவே போனால் பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேச மக்கள் இப்போது அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள யானைகளாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றிவிழா எனத் தொடர்ந்து சிங்கள அரசு தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. இப்படித் தொடர்கிறது ஈழத் தமிழர்களின் துயரம். இதற்குத் தாய்த் தமிழகத்திலிருந்து பெரிய அளவில் எதிர்ப்புக் குரல் எழவில்லை. மாறாக, இந்திய அரசாங்கமோ சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடித்திருக்கிறது.

கிழக்கில் துரோகிகளை உருவாக்கி அவர்கள் மூலமே தமிழர்களை வெளியேற்றி வெற்றிவிழாக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. வடக்கு, கிழக்கில் கடந்த சூன் மாதம் மட்டும் 44 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அதிக அளவாக 21 பேரும், வவுனியாவில் 9 பேரும் மட்டக்களப்பில் 8 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கடந்த மாத அறிக்கையின் படி ஒரு வார காலத்தில் 34 கடத்தல் சம்பவங்கள் கிழக்கில் மட்டும் நடந்துள்ளன.

வெளியில் தெரியாமல் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இது தற்போதைய ஈழத்து நிலைமையின் ஒரு துளி. இவற்றையெல்லாம் உடனுக்குடன் அறிந்தும் தமிழகத்தில் எந்த எதிர்வினையும் இல்லை. நாளைக்கு வடக்கிலும் தன்னுடைய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கி மக்களை மரணப் படுகுழிக்குள் தள்ளும் நோக்கத்தில் ராஜபக்சே பேசி வருகிறார். அப்படி ஒரு நிலைமை வந்தாலும் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று எழுதப்பட்டுள்ளது.

''தொடரும் ஈழத் தமிழர் துயரம்: தமிழகம் இப்படியேதான் இருக்குமா?: "கருஞ்சட்டை தமிழர்"""

தமிழகத்தை விடுங்கோ தழீழத்தில ஆனந்தசங்கரி டக்ளஸ் கருணா மற்றும் ஏனைய ஒட்டுக்குழுக்களெல்லாம் என்ன செய்யினம் அப்பிடியேதான் இருக்கினம்

நெரப்பு தேனி அதிரடி தாயகம் மற்றும் ஏனைய அருவரிடி இணையத்தளங்கள் எல்லாம் என்ன செய்யினம் வெந்தபுண்ணில வேலைப்பாச்சிகொண்டெல்லே இருக்கினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.