Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் பெறும் அனைவருக்கும் வலுச்சக்தி அமைச்சின் விசேட அறிவித்தல்

வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கம் மற்றும் டோக்கன் முறை போன்றவை ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் செல்லுபடியாகாது என்றும் அன்றையதினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேவையற்ற நெரிசல் ஏற்படக்கூடிய வகையில் ஒன்று கூட வேண்டாம் என்றும் வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அன்றைய தினம் முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742123123 என்ற வட்சப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும்  அவர்கள் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டால், அவர்களின் கியூஆர் குறியீடு செல்லுபடி அற்றதாக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சேஸ் எண்ணின் மூலம் கியூஆர் முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்கள் வாகன ஆண்டு வருமான அனுமதிப்பத்திர இலக்கத்தைக் கொண்டு பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஓட்டோக்களும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்கு ஒதுக்கப்படும் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விவரங்களை வழங்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தேவைப்படும் உபகரணங்களின் உரிமையாளர்கள் தங்களது பிரதேச செயலகத்தில் எரிபொருளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதே வேளையில், பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, அவற்றின் வழித்தட அனுமதி மற்றும் பயணித்த கிலோமீற்றர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை போக்குவரத்து சேவைகள், ஊழியர் போக்குவரத்து, கைத்தொழில்கள், சுற்றுலா தொடர்பான வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட சேவைகளுக்கு தேவையான அனைத்து எரிபொருளையும் போக்குவரத்து சபை டிப்போ வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அம்பியூலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அவற்றுக்கு வரையறையற்ற எரிபொருள் வழங்கவும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/எரிபொருள்-பெறும்-அனைவருக்கும்-வலுச்சக்தி-அமைச்சின்-விசேட-அறிவித்தல்/150-301383

 

  • கருத்துக்கள உறவுகள்

நாளையில் இருந்து எல்லோரும் பெற்றோல் செற்ல தான் இருக்க போறாங்க. பெற்றோல் விலையும் குறைய போதாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கியூ.ஆர் முறைமைக்கு 50 இலட்சம் வாகனங்கள் பதிவு

Published by T. Saranya on 2022-08-01 

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக  அரசாங்கத்தினால்  அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ.ஆர் முறைமைக்கு 50 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கிறது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தின் ஊடாக மாத்திரம் பதிவு செய்யுமாறும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கியூ.ஆர். குறியீட்டின் மூலம் எரிபொருளை விநியோகிக்கும் நடைமுறை இன்று (01) முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/132644

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 'க்யூ ஆர்' முறையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம்: சட்டவிரோத பதுக்கலை தடுக்குமா?

33 நிமிடங்களுக்கு முன்னர்
 

எரிபொருள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, மக்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிக்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, QR நடைமுறையின் கீழ் இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாகவும் இந்த நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக, தமக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

 

இதன்படி, இதுவரையில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

வாகனங்களை பயன்படுத்துவோர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைப்பதால், இலங்கையில் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

குறிப்பாக கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் 2000 ரூபா முதல் 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதன்படி, சட்டவிரோத பதுக்கலை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த க்யூவ் ஆர் நடைமுறையின் கீழ் வாரத்திற்கு குறிப்பிட்டளவு எரிபொருள் மாத்திரமே, ஒருவரினால் பெற்றுக்கொள்ள முடியும்.

பஸ்களுக்கு 40 லீட்டர் டீசலும், மூன்று சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் டீசலும், வேன் மற்றும் கார் ஆகியவற்றிற்கு 20 லீட்டர் டீசலும், அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர் டீசலும், லாரிகளுக்கு 50 லீட்டர் டீசலும் வாரமொன்றிற்கு பெற்றுக்கொள்ள முடியும்.

 

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அத்துடன், மோட்டார் சைக்கிள்களுக்கு 4 லீட்டர் பெட்ரோலும், மூன்று சக்கரவண்டிகளுக்கு 5 லீட்டர் பெட்ரோலும், வேன் மற்றும் கார் ஆகியவற்றிக்கு 20 லீட்டர் பெட்ரோலும் அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களுக்கு 50 லீட்டர் பெட்ரோலும், லாரிகளுக்கு 50 லீட்டர் பெட்ரோலும் வாரமொன்றிற்கு ஒருவரினால் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, மின்பிறப்பாக்கிகள் உள்ளிட்ட எரிபொருள் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு வாராந்தம் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் ரகம், வாரமொன்றிற்கு தேவையான எரிபொருளின் அளவு, எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றை தெரிவு செய்து, அபிரதேச செயலகங்களில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன், முச்சக்கரவண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயம் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்துவோர் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-62374153

  • கருத்துக்கள உறவுகள்

வரிசையில் நின்று வாங்கி அதை அதிக விலையில் மீண்டும் விற்பதாகவும் கூறுகின்றார்களே. 

வரிசையில் எரிபொருளுக்காக காத்து நிற்பதை பல இளைஞர்கள் மிகவும் விரும்புவதாகவும் தெரிகின்றது. தெருவில் பன்பல் அடித்து, தண்ணி அடித்து, ஆடிப்பாடி வரிசை முறையில் எரிபொருள் பெறும் நடைமுறையை அவர்கள் எதிர்கொள்கின்றார்களாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.