Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெடுங்கேணியில் விமானத் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கேணியில் விமானத் தாக்குதல்

நிஷாந்தி

ஸ்ரீறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் இன்று காலை நெங்கேணி பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதில் விடுதலைப்புலிகளின் மோட்டார் தாக்குதல் நடத்தும் மையமொன்றை விமானப்படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6.40 மணியளவில் இவ் வான் தாக்குதல் இடம் பெற்றுள்ளதாகவும் இதில் புலிகளிற்கு சேதம் ஏற்ப்பட்டிருக்கலாம் எனவும் தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வீரகேசரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்கேணியில் பயணிகள் பேரூந்து மீது வான்குண்டுத் தாக்குதல்: இளம் பெண் பலி- 10 பேர் படுகாயம்

[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 15:48 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பில் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்தி, பயணிகள் பேருந்து மீது நடத்திய வான் குண்டுத்தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பட்டிக்குடியிருப்பில் பயணிகளை ஏற்றி நின்ற பேருந்து மீது இன்று திங்கட்கிழமை காலை 6.40 மணிக்கு மிக்-27 ரக வானூர்தி குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனால் மக்கள் பேரூந்திலிருந்து சிதறி ஓடினர். பேரூந்துக்குள் சிக்கிய இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் பத்துக்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த கரும்புள்ளியான் கிராமத்தைச் சேர்ந்த அரியரத்தினம் சுபாஜினி (வயது 20) படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

சிறிலங்கா வான்படை திட்டமிட்டு மக்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் அப்பகுதியில் வான்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் மிக்-27 ரக வானூர்திகளின் தாக்குதல்களில் கற்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

அதேபோல் கற்குளம் சந்தியில் உள்ள பல நோக்கு கூட்டுறவுச்சங்க கிளை மற்றும் அரிசி ஆலை ஆகியனவும் கடுமையான சேதங்களுக் உள்ளாகின. அரிசி ஆலையில் அரைக்கும் இயந்திரங்கள் சேதமாகியும் அரிசி மூட்டைகள் எரிந்தும் போயுள்ளன.

puthinam

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கதறல் நிமிடங்கள்..........: நெடுங்கேணி வான் தாக்குதலில் பலியான இளம்பெண்ணின் தாயார் உருக்கம்

நெடுங்கேணியில் பயணிகள் பேரூந்து மீது சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்தி நடத்திய கொடூரத் தாக்குதல் நிமிடங்களை படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் சுபாஜினியின் (வயது 20) தாயார் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்தத் தாக்குதல் நிமிடங்கள் குறித்து சுபாஜினியின் தாயாரான சுலோஜனா கூறியதாவது:

நெடுங்கேணியில் நேற்று திங்கட்கிழமை காலை 6.40 மணிக்கு பேரூந்து புறப்படத் தயாராக இருந்த போது திடீரெனப் பெரும் வெடிச்சத்தம் கேட்டது.

அப்போது எங்கும் ஒரே அழுகுரல்கள் பேரூந்தில் இருந்தவர்கள் இறங்கிச் சிதறியோடினர்.

அப்போது மீண்டும் பெரும் வெடியோசை, எங்கும் ஒரே புகைமண்டலமாக இருந்தது. இதனிடையே அம்மா... காப்பாற்றுங்கள்... அம்மா... காப்பாற்றுங்கள் என எனது மகளின் அழுகுரல் கேட்டது.....

ஆனால் என்னால் எழும்பவே முடியவில்லை. நிலை குலைந்து போனேன். எனது மகளைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூக்குரலிட்டு அழுதேன். சிறிது நேரத்தில் எல்லோரும் ஓடிவந்தனர்.

எனது மகளை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். இதன் பின்னர் நான் அங்கிருந்து ஆசையாக வளர்த்த எனது பிள்ளையைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கு அவளை உயிருடன் பார்க்க முடியவில்லை.

எனது பிள்ளையை இப்படியான ஓர் நிலையில் பார்ப்பேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்று கதறலுடன் அவர் கூறினார்.

- புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.