Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரியல் அறிவை எமது ஊடகங்கள் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

Featured Replies

போரியல் அறிவை எமது ஊடகங்கள் ஏன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

-பரணி கிருஸ்ணரஜனி-

05.08.2007 வீரகேசரி வாரப்பதிப்பில் 'அங்கீகரிக்கப்பட்ட கொசோவா விடுதலை அங்கீகரிக்கப்படாத தமிழர் போராட்டம்" என்ற தலைப்பில் நண்பர் இதயச்சந்திரன் எழுதிய கட்டுரை ஒன்று காணக்கிடைத்தது. தமிழ்நாதம் இணையத்தளத்தில் நான் எழுதியிருந்த கட்டுரையொன்றின் சில மேற்கோள்களை சுட்டிக்காட்டி எனது அக்கட்டுரைக்கான ஒரு எதிர் வினையாகவே நண்பர் இதயச்சந்திரன் தனது கட்டுரையை எழுதியிருந்தார்.

அவர் கூறும் எந்தக் கருத்துடனும் முற்று முழுதாக நான் முரண்படவில்லை. ஆனால் அவர் அந்தக் கட்டுரையை அமைத்திருக்கும் விதம் நான் அவர் கூற விரும்பும் கருத்துக்கு முரணானவனாகவும் அத்துடன் எனது 'தமிழ்நாதம்" கட்டுரை அந்த முரணையே பேச விழைவதாகவும் ஒரு வாசிப்புக்கு இடமளிப்பதால் எனது இந்த எதிர்வினையைப் பதிவு செய்கிறேன்.

அத்துடன் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பில் அவசரமானதும் அவசியமானதும் என நான் நம்பும் சில கருத்துருவாக்கங்களை அக்கட்டுரையில் முன்வைத்திருந்தேன். மேலும் மறைந்த மாமனிதரும் படைத்துறை ஆய்வாளருமான தராகி சிவராமை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய ஊடகங்களில் படைத்துறை ஆய்வுகள் என்ற தலைப்பில் நான் எழுதிக்கொண்டிருக்கும் ஒரு நூலின் தேவையை இதயச்சந்திரனின் கட்டுரை கேள்விக்குள்ளாக்குவதுடன் அதன் உள்ளடக்கத்தையும் சிதைக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் இந்தப் பதிலை எழுத வேண்டியவனாக இருக்கிறேன்.

எனது 'தமிழ்நாதம்" கட்டுரை தமிழ்த் தேசிய ஊடகங்களின் போர் அறிவியலை மையப்படுத்தியிருந்தது. அந்தக்கட்டுரையின் நோக்கத்தையும் அதன் தேவை எழுந்த சூழலையும் தெளிவாக முன்வைப்பது பிரச்சினையின் மையத்தை ஓரளவிற்குப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். (எனது கட்டுரையை வாசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த விடயங்களை பெரும்பாலும் தவிர்த்தே எழுதுகிறேன்)

என்னைச் சந்தித்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த போரியல் கற்கைநெறி ஆய்வு மாணவர் ஒருவர் என்னிடம் கேட்ட சில கேள்விகளிலிருந்தே எனது கட்டுரையின் மையம் உருவாகியிருந்தது. தமிழ்ச் சூழலிருந்து தனக்கு ஒரு படைத்துறை ஆய்வாளரை அறிமுகம் செய்யுமாறும் அதற்கு முன்பாக அவர் எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பைத் தருமாறும் என்னிடம் கேட்ட அவர், தொடர்ந்து முழுவதுமாகக் கிழக்கு பறிபோன நிலையில் 'அந்தப் படைத் துறை ஆய்வாளர்" என்ன கருத்தை முன்வைத்திருக்கிறார் என்றும் கேட்டார்.

இந்த முழுக்கேள்விகளையும் முழுவதுமாக இடைவெட்டக்கூடிய ஒரு நபர் எமது தமிழ் ஊடகப்பரப்பில் யாராவது இருக்கிறார்களா? அவருக்கு என்ன பதிலை நான் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்? எனது கட்டுரை இந்த அவல நிலையிலிருந்தே பிறப்பெடுல ருந்தது. 'படைத்துறை ஆய்வாளர்" என்று தனித்துக் குறிப்பிட்டுக்கூறக்கூடிய, ஆங்கிலத்தில் எழுதும், கிழக்கு பின்னகர்வை சரியாக எடை போட்ட ஒருவருக்கு நான் எங்கே போவது? இந்தக் கேள்விகளும் அதையொட்டி எழுந்த சில சந்தேகங்களும்தான் என்னை அக்கட்டுரையை எழுதத்தூண்டியது.

சிவராம் மேற்குறிப்பிட்ட தகைமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவராக இருந்தது மட்டுமல்ல தற்போதைய கிழக்கு பின்னகர்வை சாதாரண ஒருவர் புரிந்து கொள்ளும்படி அவரது பழைய எழுத்துக்கள் அமைந்துள்ளன என்பதையும் புரிந்து அவரை மையப்படுத்தி மேற்படி அவலச் சூழலை ஆராய்ந்திருந்தேன். இதன்வழி நாம் போர் அறிவியலில் தேர்ச்சி அடைய வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியிருந்தேன். எனது கட்டுரை எதிர்வினை புரியக்கூடிய எந்தக்கூறுகளையும் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்பிக் கொண்டிருக்க 'இதயச்சந்திரனின் கட்டுரை" இலேசாக அதைத் தகர்த்திருக்கிறது. அவரது எதிர்வினை எனது கட்டுரைக்கான விளக்கத்தை மறுதலிப்பை ஒரு ஒற்றைப்பரிமாணத்தில் அணுகுவதாகவே நான் நம்புகிறேன். அவர் எனது கட்டுரையை மையப்படுத்தி நான் முன்வைக்காத வேறு சில போலியான ஊடகத்தாற்பரியங்களுக்கும் பதில் எழுதியிருப்பதால் வாசகர்களுக்கு அந்தப் போலிமைகளையும் நான் முன்வைத்ததாக நம்புவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.

இந்த அணுகுமுறைகள் எனது முழுக்கருத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் அவல நிலைக்குக் கொண்டு செல்லும் அபாயத்தில் கொண்டே நிறுத்தியிருக்கிறது. இது படைத்துறை ஆய்வுகள் குறித்து நான் எழுதிக்கொண்டிருக்கும் நூலின் மையத்தையே ஆட்டங்காண வைத்துள்ளது. ஆகையால்தான் சில விளக்கங்களைப் பதிவு செய்கிறேன். எனது கட்டுரையை மையப்படுத்திய அவரது முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு வருவதற்கு முன்னர் எனது கட்டுரையின் சில முக்கிய கருத்துக்களை முன்வைப்பது நல்லதென நினைக்கிறேன்.

01. அறிவிக்கப்படாத நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகளின் படைத்துறை நகர்வுகள் குறித்து யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. மிகவும் பூடகமான முறையிலேயே புலிகளின் தலைமை தமது காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. இது ஒரு தந்திரமான இராணுவச் சூட்சுமமாக இருந்தபோதிலும் அதைக் குறிப்பிடத் தகுந்தளவேனும் தர்க்க ரீதியாகப் பேசவல்ல தளம் ஒன்றும் இருக்கவேண்டும்.

02. போர்ச் செய்திகளை வெளியிடுவதிலிருந்து அதன் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்வது வரை ஒரு நுட்பமான பார்வை அவசியம். அதன் வழி போராடும் இனத்தின் வீச்சு குன்றாமலும் தேசியத்தின் வழி தவறாமலும் கருத்தியல்களைக் கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளது.

03. போர் அறிவியலை வளர்த்துக்கொள்ள வேண்டிய பெருங்கடமை எமது ஊடகங்களிற் கிருக்கிறது. படை அறிவியலில் தேர்ச்சியடைவது வழிகாட்டுவதற்கு அல்ல. புலிகளின் படையாளுமை குறித்து நான் முன்பே பலதடவை குறிப்பிட்டது போல், நீண்ட வரலாற்றையுடைய, பாரம்பரியம் மிக்க, பல நெருக்கடிகளிலும் சளைக்காது நின்று போராடும் ஒரு விடுதலை அமைப்பிற்கென்று சில திட்டங்களும் தந்திரோபாயங்களும் நிச்சயமாக இருக்கும். அது எந்த ஆய்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்குள்ளும் சிக்க முடியாதவை. ஆகவே போர் அறிவியலை எமது ஊடகங்கள் வளர்த்துக்கொள்வதென்பது மக்களின் உள வியல் தொடர்பானது.

04. உலகின் வீரஞ்செறிந்த தனித்துவமான போராட்டம் என்றும் பல இராணுவ சாதனைகளை நிகழ்த்திய போராட்டம் என்றும் எல்லோராலும் பார்க்கப்படும் பாராட்டப்படும் ஒரு விடுதலைப் போராட்டத்தின் ஊடகத்தளத்தில் அதன் இராணுவ நகர்வுகளை, பரிமாணங்களை எடை போடக்கூடிய துல்லியமான படைத்துறை ஆய்வுகள் இல்லை என்பது எவ்வளவு அபத்தம்?

05. புலிகள் ஆயுத வழியில் போராடி வருகிறார்கள். புலிகளின் இராணுவ பரிமாணங்கள் துல்லியமாக உலகத்தின் பார்வைக்கு அவ்வப்போது வைக்கப்பட வேண்டும். இதை சாதாரண விடயமென்று நினைக்காதீர்கள். மிக முக்கியமான ஒரு விடயம். புலிகளின் பலம் தொடர்பான துல்லியமான ஆய்வுகள் உலகத்திற்கு கிடைக்கும்போது அதன் அடிப்படையில் விடுதலை தொடர்பான கருத்துக்களில் உலகம் எப்போதும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கும். தற்போது உள்ளதுபோல் நேரத்திற்கு தக்கபடி கருத்துக்களை மாற்றிக்கொள்ளும் சாத்தியம் குறைவு.

எனது கட்டுரை மையமாகக்கொண்டிருந்தது மேற்குறிப்பிட்ட கருத்துருவாக்கங்களைத்தான். எனது கட்டுரை நுண் அரசியற்தளத்தில் இயங்குவது. மேலோட்டமாகப் பார்த்தால் சில ஏற்ற இறக்கங்களை வைத்து மறுதலிப்புக்கள், உடன்பாடின்மைகள் தோன்றுவதை என்னால் உணர முடிகிறது. ஆனால் ஆழமாக மீள்வாசிப்பிற்குட்படுத்தும

கிழக்கின் நிலமை எப்படி இருக்கிறது அல்லது அமையும் எண்று தாரகி (சிவராம்) அவர்கள் 2004 ம் ஆண்டு ஒரு கட்டுரை வரைந்து இருந்தார்...

http://www.tamilnation.org/forum/sivaram/040721.htm

கிழக்கு இப்போ இராணுவத்தின் கைகளில் இருக்கலாம்..... ஆனால் வடக்கு போர் முனைக்காக இராணுவம் மீளப்பெறவும் படலாம்... ஆனால் தமிழர் நிலம் என்பதினால் பாழ் படுத்த பட்டு இருக்கும்..! அதை தடுக்கும் சக்தி என்பது ஒருங்கிணைந்த தமிழர் கைகளில் தான் இருக்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.