Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீனவர்களின் பிரச்சினை தீர சந்திப்புகள் பயன் தருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர்களின் பிரச்சினை தீர சந்திப்புகள் பயன் தருமா?

-வே.தவச்செல்வன்

பல்கலைக்கழக மாணவனின் படுகொலையுடனும் தொழிநுட்பக் கல்லூரி மாணவனின் படுகொலையுடனும் ஈபிடிபி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக ஒட்டுக்குழு ஒன்றினால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த இணையத் தளத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக இருந்தாலும், வேறு சில அமைப்புக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்படுகொலையின் பின்னணியில் டக்ளஸ் தேவானந்தா தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளன.

எது எப்படியோ டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணத்திற்கு வருகை தந்ததன் பின்னர் குடாநாட்டில் படுகொலைகள் மீண்டும் அதிகரித்து இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

இது இவ்வாறிருக்க, சிறீலங்காவின் சமூக சேவைகள் அமைச்சை தன்வசம் வைத்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறீதர்திரை அரங்கில் சந்திப்புக்களை நடத்தி வருகிறார். உண்மையில் இச்சந்திப்புகள் பயனற்றவை என்பதை அறிந்தும் பலர் சந்திப்புக்களில் கலந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படு

கின்றனர்.

சிலர் சந்திப்புக்கள் பயனற்றவை என அறிந்தும் தங்களின் சுயலாபம் அல்லது அச்சம் கருதி சந்திப்புக்களில் கலந்து கொண்டு வருகின்றனர். யாழில் உள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு இக்கடிதம் பெறச்செல்வோரிடம் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.

இவ்வாறே மீனவர்களின் பிரச்சினை பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில் சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் குடாநாட்டில் உள்ள பெருமளவான கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் இச்சந்திப்பை புறக்கணித்தன.

இச்சந்திப்புக்களால் பயன் இல்லை எனக்கருத்து வெளியிட்டன. யாழ். குடாநாட்டில் தற்போது 14 ஆயிரம் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவ

தாகவும் 112 கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்கள் உள்ளதாகவும் கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடாநாட்டில் முன்னைய காலங்களில் பிடிக்கப்பட்ட மீன்களின் அளவில் 85 வீத விழுக்காடு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு பிரதான காரணம் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் நெருக்கடிகளுமே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை மீன்பிடிப்பதற்கான நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும் நாளுக்கு நாள் அந்தந்தப் பகுதி படை அதிகாரிகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. எனினும் இப்பத்தியை எழுதும் வரை உள்ள நடைமுறையின் படி குடாக்கடல் பகுதிகளில் குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை, கரையூர் பகுதிகளில் காலை 7.00 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணிவரை மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

வடமராட்சிப் பகுதியில் காலை 5.00 மணியில் இருந்து 10 மணிவரை மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. வலிகாமம், சுழிபுரம் பகுதிகளில் இரண்டு நேரம் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. இதன்படி காலை 5.00 மணியில் இருந்து 9.00 மணிவரையும், பின்னர் 11 மணியில் இருந்து பிற்பகல் 2.00 மணிவரையும் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

தீவகம் பகுதியில் காலை 8.00 மணியில் இருந்து 12 மணிவரை மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. நெடுந்தீவுப் பகுதியில் மட்டும் காலை 5.00 மணியில் இருந்து 9.00 மணி வரை மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து இடங்களிலும் பாஸ் நடைமுறை அமுலில் உள்ளதுடன், மீன் பிடிக்கும் தூரம் 1கிலோ மீற்றராகவே உள்ளது. வடமாராட்சிப் பகுதியில் மட்டும் 3 கி. மீ தூரத்திற்கு மீன் பிடிக்க விடப்படுகிறது.

இந்த நிலையில் மீனவக் குடும்பங்கள் தன்னிறைவாக வாழ்ந்தகாலமும் - சிறீலங்காவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் கடல் உணவுகளை ஏற்றிய காலமும் மாறி இன்று அடுத்த வேளை உணவிற்கு கையேந்தும் பரிதாப நிலைக்கு சிறீலங்கா அரசால் தமிழ் மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழலிலேயே சுய அரசியலிற்காக டக்ளஸ் தேவானந்தா யாழில் மீனவர் பிரச்சினை பற்றி ஆராயும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தபோது யாழில் உள்ள 92 கடற்றொழிலாளர்கள் சங்கங்கள் இம்மாநாட்டை புறக்கணிக்க, யாழ்மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் தலைமையில் சென்ற 20 பேர் மட்டுமே இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பு பயனற்றது என அறிந்திருந்தும், இச்சந்திப்பில் இவர்கள் ஏன் கலந்து கொண்டார்கள் என்ற கேள்வியை ஏனைய சங்கங்கள் எழுப்பி வருகின்றன. இச்சந்திப்பில் நிர்ப்பந்தத்தில் கலந்து கொண்டார்களா? அல்லது விரும்பிக் கலந்து கொண்டார்களா என்று ஆராய்வதைவிட இச்சந்திப்பில் பயன் ஏதும் ஏற்பட்டதா என்று ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டோரால் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்

கப்பட்டன. அதிகாலை 3.00 மணியில் இருந்து பிற்பகல் 6.00 மணிவரை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் மீன் பிடிக்கும் தூரத்தை 5 கி.மீ ஆக கூட்ட வேண்டும்.

மீனவர்கள் குதிரை வலு இயந்திரங்களையும் பாயையும் பயன்படுத்தி தொழில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் நிவாரணம் பெறுமதி 20 ஆண்டுகளிற்கு முன்பு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பெறுமதியை 5000 ரூபாவாக உயர்த்த வேண்டும்.

கடற்றொழில் உபகரணங்களை நியாயமான விலையில் கப்பல் மூலம் எடுத்துவர அரசு உதவ வேண்டும், ஆகிய ஐந்து கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளை செவிமடுத்த டக்ளஸ் தேவானந்தா, “எங்களது கட்சியின் கொள்கையின்படி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்க முடியாத வடக்கு, கிழக்கு இணைப்பு ஏற்பட நாம் பாடுபட்டு வருகிறோம்.

இதனாலேயே அரசிற்கு நாம் ஆதரவு அளிக்கின்றோம். ஜனாதிபதியுடன் இணைந்து உங்களது பிரச்சினைக்கு முடிவு சொல்கிறோம்” என்ற வழமையான பல்லவியுடன் கூட்டத்தை முடித்திருக்கிறார்.

உண்மையில் டக்ளஸ் கூற்றுப்படி இவர் முன்வைத்துள்ள அரசியல் தீர்வுத்திட்டத்தை அரசு ஏற்கத் தயாராக இல்லை. இதை வடக்கு, கிழக்கு பிரிப்புடனாவது இவர் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாம் உணர்ந்தவர்

தான் டக்ளஸ்.

தனது அரசியல் கனவு பலிக்காது என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இவ்வாறே மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளும் அவருக்குத் தெரியும். தான் கூட்டிய மாநாட்டின் மூலம் இப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய சக்தி தன்னிடம் இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

இவ்விடயத்தில் ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் மட்டுமே முடிவு எடுக்கக் கூடியவர்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அப்படியானால் ஏன் வடபிராந்திய கடற்படைத்தளபதி றியர் அட்மிரல் எஸ்.ஆர்.சமரதுங்க மற்றும் யாழ்ப்பாணம் 51வது பிரிகேட் கட்டளை அதிகாரி ஆகியோரையும் அழைத்து டக்ளஸ் மீனவர்களின் பிரச்சினை பற்றி ஆராயும் இந்த மாநாட்டினைக் கூட்டினார் என்று பார்த்தால், யாழில் இடம்பெறும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என்பனவற்றை மூடிமறைப்பதற்காகவும் தாங்கள் மக்களிற்கு சேவை செய்கிறோம் என்று காட்டுவதற்குமான ஒரு முயற்சியேயாகும்.

அப்படியானால் சந்திப்புக்களில் கலந்து கொள்வோர் ஏமாற்றப்படுவது நியாயமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் டக்ளஸ் போன்ற அரசியல்வாதிகளிற்கு இதெல்லாம் சகஜமப்பா.!

- ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.