Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்ஷன் பேம் நிறுவனத்தின் கவனயீனமே அவர்களின் பணியாளர்கள் கொல்லப்படுகதற்கு காரணம் : சிறிலங்கா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்ஷன் பேம் நிறுவனத்தின் கவனயீனமே அவர்களின் பணியாளர்கள் கொல்லப்படுகதற்கு காரணம் : சிறிலங்கா அரசு

அக்ஷன் பேம் நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேரும் படுகொலை செய்யப்பட்டமைக்கு அந்த நிறுவனத்தின் கவனயீனம் மற்றும் பொறுப்பற்ற தன்மையே காரணமென சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென சிறிலங்கா அரசாங்க சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க, மனித உரிமைகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு பக்தாத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற மோசமான சம்பவம் மனித நேயப் பணியாளர்களின் படுகொலை என நோர்வேயின் அனுசரணைப் பணியில் செயற்படும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு குற்றஞ்சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் சிறிலங்கா அரசாங்கம், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த மோசமான சம்பவம் தொடர்பான உண்மையான தகவல் உறுதியாகத் தெரியவரவில்லை. அக்ஷன் பேம் அமைப்பின் பொறுப்பற்ற தன்மையே அவர்களுடைய பணியாளர்களை ஆபத்துக்குள் மாட்டியுள்ளது என விஜயசிங்க, ஓகஸ்ட் 13ஆம் திகதியிட்டு மனித உரிமைகள் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுவந்த சமயம் ஏன் மனித நேயப் பணியாளர்கள் தமது அலுவலகக் கட்டடங்களில் தங்கியிருக்குமாறு பணிக்கப்பட்டார்கள் என்பது பற்றிய விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற வித்தாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விடயம் ஐரோப்பிய நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால் அரசசார்பற்றி நிறுவனங்கள் வழங்கும் பாதிப்புத் தொகையை விட கூடுதலான தொகை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்” என்றார் ரஜீவ விஜயசிங்க.

மனித உரிமை மீறல்களில் அரசாங்கப் படைகள் தொடர்பு பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மறுத்திருந்ததுடன், இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கைக்கு அழைப்பதற்கும் அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

எனினும் அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் சர்வதேச ரீதியில் அமையவில்லையென சர்வதேச அவதானிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதுஇவ்விதமிருக்க தமது பணியாளர்களின் படுகொலைக்குக் காரணமானவர்கள் யார் என்பதை அறிவதற்கு அக்ஷன் பேம் நிறுவனம் பொறுமையுடன் காத்திருக்கின்றது.

விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமாயின், சர்வதேச ரீதியிலோ அல்லது உள்நாட்டுலோ ஒத்துழைப்பு வழங்கத் நாம் தயாராக உள்ளோம் என அக்ஷன் பேம் நிறுவனத்தின் இலங்கைப் பிரிவின் தலைவர் ட்ரான் தனாஹ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைகளை யார் செய்தார்கள், இதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை யார் வைத்திருந்தார்கள் என்பதை அறியும் எமது குறிக்கோளை மறந்துவிடமாட்டோம் என்றார் அவர்.

மனித நேயப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இலங்கை மிகவும் அபாயகரமான பிரதேசமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களில் தலைவர் ஜோன் ஹோல்ம்ஸ் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

- சங்கதி

என்ன பொறுபான பதில் வாழ்க சிங்களம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.