Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் பதவிகளை பெற்று... மக்களுக்கு சுமையாக மாற, விரும்பவில்லை – சஜித் தரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சந்தர்ப்பவாதிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்?

அமைச்சர் பதவிகளை பெற்று... மக்களுக்கு சுமையாக மாற, விரும்பவில்லை – சஜித் தரப்பு!

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பலப்படுத்தி அதனூடாக செயற்படுவேன் என ஜனாதிபதி  கொள்கை பிரகடன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற குழு அமைப்பில் இருந்தவாறு அரசாங்கத்திற்கு உதவ தீர்மானித்துள்ளோம் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் ஆளுநர் பதவிகளைப் பகிர்வதில் ஏற்கனவே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கு பலரும் முன்மொழியப்படுகின்றனர்.

அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற நாங்கள் விரும்பவில்லை.

எனவே, பதவிகளுக்கு பேராசை கொள்ளாமல் பதவிகளை பெறாமல் இந்நாட்டின் வேலைத்திட்டத்திற்கு உதவ தயாராக உள்ளோம் என ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

சிலர் எமது கட்சியை பிளவுபடுத்த முயற்சித்து வருவதையிட்டு வருந்துகிறோம்.

ஒரு கட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதும் எம்மில் பெரும்பாலானோர் அவருடன் செல்வதாக கூறப்பட்டது. எனினும் இருவரே சென்றனர்.

இடைக்கால ஜனாதிபதி தேர்தலின் போதும் எமது கட்சியில் ஒருவரேனும் கொள்கைக்கு புறம்பாக வாக்களிக்கவில்லை.

நான் உள்ளிட்ட 20 பேர் ரணிலுடன் இணையவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அது முற்றிலும் பொய்யானது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது கட்சி ஆதரவை வழங்குமே தவிர கட்சியிலிருந்து எவரும் செல்லமாட்டார்கள் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1295319

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.