Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி பேடிக்கு எதிராக முரளிதரன் வழக்கு

Featured Replies

இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார்.

முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிருப்பதாகவும் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால், கடும் சீற்றமடைந்த முரளி, பேடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்ததுடன், உடனடியாக செயலிலும் இறங்கியுள்ளார்.

தன்மீது அவதூறு தெரிவித்ததாகக் கூறி பேடிக்கு எதிராக வழக்குத் தொடர முடிவு செய்துள்ள முரளி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமெனக் கோரி பேடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

முரளியின் சட்டத்தரணிகள் இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை பேடியின் டில்லி வீட்டுக்கு இரு பக்க கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முரளியை நீதிமன்றில் சந்திக்கத் தயாராயிருப்பதாக பேடியும் கூறியுள்ளார்.

விளையாட்டுத் தொடர்பாக இன்று நேற்றல்ல காலா காலமாக விமர்சனங்கள் எழுகின்றன. அது போன்றதே எனது விமர்சனமும் அவரது பந்துவீச்சு முறை குறித்த எனது எண்ணத்தை தெரிவித்தேன். இதற்கு எனக்கு உரிமையில்லையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முரளி தனது வழக்கறிஞர்களைச் சந்தித்தால் நானும் எனது வழக்கறிஞர்களைச் சந்திப்பேன். எனினும், இதுவரை முரளியிடமிருந்து எனக்கு எவ்வித நோட்டீஷும் வரவில்லை. இதனால், இது குறித்து மேலதிகமாக எதனையும் கூற விரும்பவில்லையென்றார்.

அதேநேரம், ஷேன் வோர்னின் அதிகூடிய விக்கெட் சாதனையை முரளிதரன் முறியடித்தால் அதனைப் பாராட்டப் போவதில்லையெனவும் பேடி கூறியுள்ளார்.

-thinakkural.com-

இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.

முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார்.

முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிருப்பதாகவும் கூறி கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஷேன் வோர்னின் அதிகூடிய விக்கெட் சாதனையை முரளிதரன் முறியடித்தால் அதனைப் பாராட்டப் போவதில்லையெனவும் பேடி கூறியுள்ளார்.

-thinakkural.com-

பேடி யைப்போன்றே பொதுவாக இந்திய கிரிக்கெற் ரசிகர்களும் பொறாமை பிடித்தவர்கள். உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஒரு ஆசிய அணி என்று பார்க்காமல் ஆஸ்திரேலியாவின் வெற்றியை ஆரவாரமாக கொண்டாடியதை பார்த்தேன். 76ல் கல்கத்தாவில் உலககிண்ண செமிபைனலில் தங்கள் அணி தோற்கிறதென்றவுடன் ஸ்ரேடியத்திற்கு தீ வைத்தவர்கள்..

:lol:

முரளி பந்து வீச்சு விவகாரம் பேடி-ரணதுங்கா வார்த்தை மோதல்

முரளியின் பந்து வீச்சைக் குறை கூறிய பேடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், இலங்கையணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க.

இலங்கை சுழற்பற்து வீச்சாளர் முரளி 'சிறப்பாகக் குண்டு வீசுபவர்' என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பஷன்சிங் செய்த விமர்சனம், இப்பொது கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. அவர் மீது வழக்குத் தொடர முரளி முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், முரளிக்கு ஆதரவாக முன்னாள் தலைவர் அர்ஜூன களத்தில் குதித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது :

"பேடி விளம்பரத்திற்காக இவ்வாறு சொல்லியிருக்கிறார். அவர் என்ன விரும்வினாரோ அதை ஊடாகங்களும் நிறைவேற்றியிருக்கின்றது. அவரது பேட்டியை இலங்கை மக்கள் பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், எந்தவொரு ஆசியக் கிரிக்கெட் வீரரையும் அவர் பாரட்டியது கிடையாது. அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் அவரை மதிக்கிறேன். அவர் எப்படடிப்பட்டவர் என்பது எனக்குத் தெரியும்".

"முன்பு ஹர்பஜன்சிங்குக்கு எதிராக சில கருத்துகளைக் கூறினார். கும்ளே அல்லது கவாஸ்கர் பற்றி இவர் நல்லவிதமாக பேசியிருக்கிறாரா?" ஆனால், அவுஸ்திரேலியா வீரர்களை மட்டும் எப்போதும் புகழ்ந்து பேசுகிறார். இவருக்கும் , அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியாவில்லை". இவ்வாறு ரணதுங்க காட்டமாகக் கூறியுள்ளார்.

அவரது கருத்துக்கு பேடியும் உடனடியாக சூடான பதிலளித்திருக்கிறார். "ரணதுங்க மிகப் பெரிய முட்டாள். ஏனேனில், அவர் அணித்தலைவராக இருந்த போதும் இது போன்ற ஒரு விடயத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார். என்னைப் பொறுத்தவரை இந்த 'ஜென்டில்மேன்" விளையாட்டை நல்லபடியாக விளையாடி இருக்கிறேன். எனவே இவர் போன்ற அழுகிப்போன இலங்கை வீரர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசிமில்லை" என்று பேடி கூறியிருக்கிறார்.

நன்றி : சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.