Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய வலைப் பந்தாட்டத்தில், இந்தியாவை... இலகுவாக வீழ்த்தியது, இலங்கை. தர்ஜினி சிவலிங்கம்...  75 முயற்சிகளில் 72 புள்ளிகளை, பெற்றுக் கொடுத்திருந்தார். 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

ஆசிய வலைப் பந்தாட்டத்தில், இந்தியாவை... இலகுவாக வீழ்த்தியது, இலங்கை. தர்ஜினி சிவலிங்கம்...  75 முயற்சிகளில் 72 புள்ளிகளை, பெற்றுக் கொடுத்திருந்தார். 

சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது.

மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன், இந்தியா வெறும் 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஆரம்பித்த அடுத்தடுத்த கால்பகுதிகளில் இலங்கை அணி அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்தியது.

இதன்மூலம் இரண்டாவது கால்பகுதியில் 24-1, மூன்றாவது கால்பகுதியில் 21-7 மற்றும் நான்காவது கால்பகுதியில் 23-4 என இலங்கை அணி புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

எனவே, இறுதியாக இலங்கை அணி 102-14 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை அணியின் புள்ளிகளை பொறுத்த வரை முன்னணி வீராங்கனை, தர்ஜினி சிவலிங்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பில் 75 முயற்சிகளில் 72 புள்ளிகளை அதிக பட்சமாக பெற்றுக் கொடுத்திருந்தார்.

முதல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அணி தங்களுடைய அடுத்தப்போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.

https://athavannews.com/2022/1297440

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்கப்பா; பாராட்டுக்கள் தர்ஜினி சிலலிங்கம்! 🙏 🙏

  • கருத்துக்கள உறவுகள்

தர்ஜினி அசத்தல் ! சிங்கப்பூரை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

07 SEP, 2022 | 07:49 PM
image

 

(நெவில் அன்தனி)

சிங்கப்பூர் ஓ சி பி சி அரினாவில் நடைபெற்றுவரும் 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் மிகத் திறமையாக விளையாடிவரும் இலங்கையின் வெற்றி அலை தொடர்கிறது.

சிங்கப்பூருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதான சுற்றின் நான்காவது போட்டியில் 67 - 49 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது.

sl_vs_sing.jpg

மலேசியாவுக்கு எதிராக திங்களன்று நடைபெற்ற போட்டியில் சிற்சில தவறுகள் காரணமாக சிரமத்தை எதிர்கொண்ட இலங்கை, சிங்கப்பூருடனான இன்றைய போட்டியில் அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு மிகத் திறமையாகவும் சிறந்த நுட்பங்களுடனும் விளையாடி அபார வெற்றியீட்டியது.

குறிப்பாக போட்டியின் 2ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் இலங்கை வீராங்கனைகள் அனைவரும் அற்புதமாக அதேவேளை மிகவேகமாக பந்து பரிமாற்றங்களை செய்து 21 கோல்களைப் போட்டு ஆட்டத்தில் ஆதிக்கத்தை தம் வசப்படுத்தினர்.

போட்டியின் முதலாவது கால் மணி ஆட்ட நேர பகுதியில் 15 - 11 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற இலங்கை, 2ஆவது கால் மணி ஆட்ட நேர பகுதியை 21 - 15 என தனதாக்கியது.

இதற்கு அமைய இடைவேளையின்போது 36 - 26 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு ஆட்ட நேர பகுதிகளிலும் சிங்கப்பூர் வீராங்கனைகளை விட இலங்கை வீராங்கனைகள் திறமையாக விளையாடி கோல்களைத் தாராளமாக புகுத்தினர்.

ஆசிய வலைபந்தாட்டத்தில் மிகவும் உயரமானவரும் சாதனை நாயகியுமான தர்ஜினி சிவலிங்கம் சரளமாக கோல்களைப் போட்டு பலத்த பாராட்டைப் பெற்றார்.

sl_vs_sing_1.jpg

இதன் பலனாக 3ஆவது கால் மணி ஆட்டநேர பகுதியை 16 - 12 என தனதாக்கிய இலங்கை, கடைசி கால் மணி ஆட்ட நேர பகுதியிலும் திறமையை வெளிப்படுத்தி 15 - 11 என தனதாக்கி ஒட்டுமொத்த நிலையில் 67 - 49 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிது.

இந்தியா, பிலிப்பைன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றபோதிலும் பிரதான சுற்றில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியிலேயே இலங்கை வீராங்கனைகள் அனைவரும் அதிசிறப்பாக விளையாடி உயர் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.

இலங்கை சார்பாக தர்ஜினி சிவலிங்கம் 75 முயற்சிகளில் 66 கோல்களையும் துலங்கி வன்னித்திலக்க 2 முயற்சிகளில் ஒரு கோலையும் போட்டனர்.

தர்ஜினி சிவலிங்கம் இதுவரை 4 போட்டிகளில் மொத்தமாக 271 கோல்களைப் போட்டு கோல்கள் போட்டவர்களுக்கான பட்டியலில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கிறார்.

https://www.virakesari.lk/article/135256

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BBC Tamil News Radio Live Streaming Online

பி.பி.சி. தமிழ்... இந்தியா வென்று இருந்தால், தலையில் வைத்து.. கூத்தாடி இருக்கும்.
இலங்கை... அதுகும் ஒரு தமிழிச்சியால் வென்றதை,  பி.பி.சி. தமிழால் ஏற்க முடியவில்லை.
அதுதான்... காணாத மாதிரி இருக்குது. 
ஆளைப் பார்த்து.. இங்கிலாந்து மக்களின்  வரிப்பணத்தில், இந்தியன் ஊடகம் நடத்துகிறான்.  😡

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய வலைபந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதி 

By T YUWARAJ

10 SEP, 2022 | 09:04 PM
image

(நெவில் அன்தனி)

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.

ஹொங்கொங் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் 67 - 43 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை  (11) பிற்பகல் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வரவேற்பு நாடான சிங்கப்பூரை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் 5 தடவைகள் சம்பயினான நடப்பு சம்பியன் இலங்கை, இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருப்பது இது 10ஆவது தடவையாகும்.

tharjini_vs_hk.jpg

இன்று நடைபெற்ற ஹொங்கொங்குடனான போட்டியில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மிகவும் திறமையாக விளையாடிய இலங்கை ஒவ்வொரு கால் மணி ஆட்ட நேர பகுதியிலும் 15 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களைப் போட்டு அபார வெற்றியீட்டியது.

போட்டியின் முதலாவது கால் மணி ஆட்ட நேர பகுதியில் வேகத்துடன் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 17 - 7 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை அடைந்தது.

இரண்டாவது கால் மணி ஆட்ட நேர பகுதியில் தனது திறமையைத் தொடர்ந்த இலங்கை அப் பகுதியை 15 - 9 என தனதாக்கி இடைவேளையின்போது 16 கோல்கள் வித்தியாசத்தில் (32 - 16) என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் போன்றே மூனறாவது கால் மணி ஆட்ட நேர பகுதியையும் 15 - 9 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தனதாக்கிய    இலங்கை கோல்கள் நிலையை 47 - 25 என ஆக்கியது.

கடைசி கால் மணி ஆட்டநேர பகுதியில் இரண்டு அணியினரும் மாறி மாறி வேகமாக கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தனர். இரண்டு அணியினராலும் அப் பகுதியில் மொத்தமாக 38  கோல்கள் போட்டப்பட்டது. எனினும் அப் பகுதியை 20 - 18 என தனதாக்கிய இலங்கை ஒட்டுமொத்த நிலையில் 67 - 43 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் 

ஓரளவு போட்டித்தன்மையை ஏறப்படுத்திய இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் 54 - 41 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அப் போட்டியின் முதல் இரண்டு ஆட்ட நேர பகுதிகளை 13 - 11, 15 - 7 என தனதாக்கிய சிங்கப்பூர் இடைவேளையின்போது 28 - 18 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

sl_vs_hk...jpg

இடைவேளைக்குப் பின்னர் 3ஆவது ஆட்ட நேர பகுதியில்   இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியதுடன் அப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய மலேசியா 15 - 8 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி இரண்டு அணிகளுக்கும் இடையிலான கோல்கள் வித்தியாசத்தை 3 ஆகக் குறைத்தது.

எனினும் கடைசி ஆட்ட நேர பகுதியில் ஏகப்பட்ட தவறுகளை இழைத்த மலேசியா அப் பகுதியை 8 - 18 என இழந்து போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டி முடிவை அடுத்து மலேசியாவும் ஹொங்கொங்கும் 3ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடவுள்ளன. https://www.virakesari.lk/article/135439

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.