Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் உத்தி வடக்கிற்கு ஏன் பயன்படாது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் உத்தி வடக்கிற்கு ஏன் பயன்படாது?

[வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2007, 19:58 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு வலிந்த பெரும் சமருக்கு தன்னை தயார்படுத்தி வரும் போதும், அவர்களால் கிழக்கில் பின்பற்றப்பட்ட உத்திகள் வடக்கில் பயன்படுத்த இயலாது என்று வியூகங்களுக்கான பக்கம் என்ற இணையத்தளம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

இராணுவம் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளின் பகுதிகள் மீது மேற்கொள்ள உத்தேசித்துள்ள இறுதித் தாக்குதல் பருவ மழை, துருப்புக்களின் பற்றாக்குறை, வடக்கை தக்க வைப்பதில் உறுதியாக உள்ள விடுதலைப் புலிகள் ஆகிய காரணிகள் காரணமாக தாமதமடைந்துள்ளது. பெருமளவான படையினர் தற்போதும் கைப்பற்றப்பட்ட கிழக்குப் பகுதியிலேயே நிலைகொண்டுள்ளனர்.

அங்கு தற்போதும் சில நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் மறைவாக உள்ளதுடன், கெரில்லாத் தாக்குதலுக்கான அச்சுறுத்தல்களும் உள்ளன. பல ஆயுதங்களும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

எனினும் கிழக்கில் பயன்படுத்தப்பட்ட இராணுவ உத்திகள் வடக்கில் பயன்படாது என்பது இராணுவத்தினருக்குத் தெரியும். கிழக்கில் பீரங்கிகள் மற்றும் வான்படை தாக்குதல்களின் துணையுடன் சிறிய அளவிலான துருப்புக்களும் கெரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வட போர்முனை கிழக்கைப் போல அகலாமன திறந்த முனையாக இல்லை.

அங்கு உள்ள விடுதலைப் புலிகள் மிகவும் அனுபவமிக்கவர்கள், களத்துடன் ஒன்றிப்போனவர்கள். அங்கு கிழக்கில் பயன்படுத்திய உத்திகளுடன் சிறிய அளவில் ஊடுருவ முனைத்த இராணுவத்தின் அணிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டதுடன், விரட்டியடிக்கப்பட்டிருந்தன. எனினும் இராணுவத்தின் இந்த ஊடுருவும் அணியினரால் இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் தளங்கள் மீது பீரங்கி மற்றும் வான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதனிடையே வடக்கில் விடுதலைப் புலிகள் தமது சொந்த கெரில்லாப் போர் நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். கடலிலும் அவர்கள் வலிமை மிக்கவர்கள். கடற்புலிகள் முன்னரை விட தற்போது அதிக தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். கடந்த வாரமும் கடற்படையினருடன் நடைபெற்ற மோதல்களில் அதன் இரு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களுக்கு கடற்படையினால் ஏற்பட்ட நெருக்கடிகளினால் அவர்கள் தமது கையிருப்பில் உள்ள ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சமர்களின் போது அவர்கள் அதிக பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணைகளை பயன்படுத்தவில்லை.

இது இரணுவத்தின் நகர்வுகளுக்கு இலகுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்காலம். ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் அதிகளவான ஆயுதங்களை கொண்டுள்ளனர். எனினும் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகள் மிகவும் தீவிரமான உறுப்பினர்கள் என்பதும் இராணுவத்திற்கு தெரியும். அவர்கள் இறக்கும் வரையிலும் சமர் புரிவதற்கு துணிந்தவர்கள்.

படை நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை தொடுக்கலாம். எனவே ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சரி செய்யாது இறுதிப் போருக்கு விரைவாகச் செல்ல முடியாது என்று இராணுவ ஜெனரல்கள் நம்புகின்றனர். எனவே இறுதிச் சமருக்கு மேலும் ஒரு வருடம் செல்லாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் இறக்கும் வரையிலும் சமர் புரிவதற்கு துணிந்தவர்கள்.

இந்த ஒரு வசனத்திலேயே முழு கட்டுரையின் சாராம்சம் பொதிந்து இருக்கின்றது..

புலிகளுடைய பலமே இதுதான்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணா நாங்கள் விட்டிட்டோடிவந்து அசைலமடிக்கத்தான் லாயக்கு என்டு சொல்லுரியளோ?

நாங்களும் எங்களாலான பங்களிப்பு செய்யிறம். எங்களது பங்களிப்பு இல்லாமல் போராட்டம் இல்லையண்ணா. :lol:

என்னண்ணா நாங்கள் விட்டிட்டோடிவந்து அசைலமடிக்கத்தான் லாயக்கு என்டு சொல்லுரியளோ?

நாங்களும் எங்களாலான பங்களிப்பு செய்யிறம். எங்களது பங்களிப்பு இல்லாமல் போராட்டம் இல்லையண்ணா. :lol:

அசைலம் அடியுங்கோ, இல்லை அப்பாவின் பையுக்கை இருந்து காசை அடியுங்கோ. ரோட்டிலை நிண்று பியர் அடியுங்கோ. இல்லை சைட் அடியுங்கோ ;)

நீங்கள் மட்டும்தான் தமிழன் இல்லை.... உள்நாடோ வெளிநாடோ எல்லாரும் சேர்வதுதான் மிடுக்கு... அதுதான் தமிழனின் பலம்... அதை எவராலும் அசைக்க ஏலாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணா நாங்கள் விட்டிட்டோடிவந்து அசைலமடிக்கத்தான் லாயக்கு என்டு சொல்லுரியளோ?

நாங்களும் எங்களாலான பங்களிப்பு செய்யிறம். எங்களது பங்களிப்பு இல்லாமல் போராட்டம் இல்லையண்ணா. :lol:

நான் அந்த அர்த்தத்திலே சொல்லவரவில்லை.. இறக்கும்வரை போராடும் துணிச்சல் மிக்கவர்கள் புலிகள் என்ற வசனத்திற்கு பலம் சேர்ப்பதற்காக அல்லது அதை மேன்மைப்படுத்துவதற்காகதான் அதை சொன்னேன்..

இருந்தாலும் நீங்கள் சொல்லுற "எங்கடை பங்களிப்பில்லாமல் போராட்டமே இல்லை" என்று சொல்லுவது மிக மிக தவறு.. நாங்கள் பங்களிப்பை (நிதி) வழங்குவதற்கு முன்னரே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.. 75களில் தலைவர் கைத்துப்பாக்கியை வாங்கிட்டார்.. வெளிநாட்டுத் தமிழர்கள் 85களில்தான் வெளிநாடுகளில் தஞ்சம்புகத் தொடங்கினர்..

எமது பங்களிப்பு பல உயிர் தியாகங்களை குறைத்திருக்கிறது என்று சொல்லுங்கள் நியாயம் இருக்கிறது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசைலம் அடியுங்கோ, இல்லை அப்பாவின் பையுக்கை இருந்து காசை அடியுங்கோ. ரோட்டிலை நிண்று பியர் அடியுங்கோ. இல்லை சைட் அடியுங்கோ ;)

அசைலம் அடிக்கிறவனும், அப்பாவின் பையுக்குள்ள காசை அடிக்கிறவனுக்கும், பியர் அடிக்கிறவனுக்கும் நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லவாறீங்களோ? இரண்டு வேறு வேறு விடயங்கள்.. இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு..

அப்பிடி பார்த்தால் வெள்ளைக்காரனிலை 98% பேர் குடிக்கிறாங்கள். அவங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லுறதா? வெள்ளைக்காரனின் இராணுவத்தில் குடிக்கிறாங்கள், சிகரட் பத்துறாங்கள், அதுக்காக அவங்கள் நாட்டுப்பற்று இல்லாமலா போராடுறாங்கள்?

குறிப்பு: என்னுடைய கருத்து எந்த வகையிலும் குடிக்கிறவர்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல!

Edited by Kishaan

அசைலம் அடிக்கிறவனும், அப்பாவின் பையுக்குள்ள காசை அடிக்கிறவனுக்கும், பியர் அடிக்கிறவனுக்கும் நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லவாறீங்களோ? இரண்டு வேறு வேறு விடயங்கள்.. இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு..

அப்பிடி பார்த்தால் வெள்ளைக்காரனிலை 98% பேர் குடிக்கிறாங்கள். அவங்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லுறதா? வெள்ளைக்காரனின் இராணுவத்தில் குடிக்கிறாங்கள், சிகரட் பத்துறாங்கள், அதுக்காக அவங்கள் நாட்டுப்பற்று இல்லாமலா போராடுறாங்கள்?

#

ஓ... எல்லாத்திலையும் பற்று இருக்குது அதாலை தான் அடிக்கிறார்கள்.....

கணக்கெடுப்பு எல்லாம் எடுத்து விட்டியள் போல....??? அது சரி இராணுவத்திலை போராடுறவை நாட்டு பற்றுக்காகவா போராடுகினம்...??? நான் நினைச்சன் சம்பளத்துக்காக எண்டு...! தெரிய படுத்தியதுக்கு நண்றி....

நாட்டு பற்றோடை இருக்கு ஒண்ற்றரை கோடி சிங்களவனை எங்களாலை எதிர்க்க முடியாது நாங்கள்( நான்) ஒதுங்கி கொள்ளுகிறன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இராணுவத்திலை போராடுறவை நாட்டு பற்றுக்காகவா போராடுகினம்...??? நான் நினைச்சன் சம்பளத்துக்காக எண்டு...! தெரிய படுத்தியதுக்கு நண்றி....

அப்ப 100%மான இராணுவத்தினரும் சம்பளத்திற்காகதான் போராடுகிறார்கள் என்று சொல்லுறீங்களா?

நாட்டு பற்றோடை இருக்கு ஒண்ற்றரை கோடி சிங்களவனை எங்களாலை எதிர்க்க முடியாது நாங்கள்( நான்) ஒதுங்கி கொள்ளுகிறன்...

நான் எப்ப சிங்களவனைபற்றி கதைச்சனான்? நான் வெளிநாட்டு இராணுவத்தினரை பற்றிதான் சொன்னனான்? நீங்கள் ஏன் விவாதத்தின்ரை விடயத்தை வேறு திசைக்கு கொண்டுபோறீங்கள்?

அப்ப 100%மான இராணுவத்தினரும் சம்பளத்திற்காகதான் போராடுகிறார்கள் என்று சொல்லுறீங்களா?

நான் எப்ப சிங்களவனைபற்றி கதைச்சனான்? நான் வெளிநாட்டு இராணுவத்தினரை பற்றிதான் சொன்னனான்? நீங்கள் ஏன் விவாதத்தின்ரை விடயத்தை வேறு திசைக்கு கொண்டுபோறீங்கள்?

அப்ப கொஞ்ச இராணுவத்தினர் தேச பற்றுக்காக சம்பளம் வாங்காமலும் கொஞ்ச இராணுவத்தினர் சம்பளம் வாங்கியும் போராடுகிறார்களா...??? நீங்க சொன்னா சரி தான்....!

சரி ............. சிங்கள இராணுவம் வேற வெளிநாட்டு இராணுவம் வேறையா....?? அப்பிடீங்களா...?? வெள்ளைக்காறன் ஆப்கானிலையும், சோமாலியாவிலையும், வியட்நாமிலையும் ஈராக்கிலையும் தேசப்பற்ரோடை அட்டகாசமாய் வெற்றிகளை குவிச்சிட்டினமாக்கும்... இப்பவும் குவிக்கினமாக்கும்... நல்லது... தெளிவாய்தான் இருக்கிற்றீயள்:...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இததான் சொல்லுறது விதண்டாவதத்திற்கு கதைக்கிறது என்று.. முதலிலை நான் ஆரம்பத்திலை எழுதினதை வடிவா வாசிச்சு விளங்கிட்டு வாங்க கதைப்போம்..

தெளிவை பற்றி யார் யாரோடை கதைக்கிறது என்று விவஸ்தை இல்லாமல் போச்சு.. :lol: :lol:

அப்ப கொஞ்ச இராணுவத்தினர் தேச பற்றுக்காக சம்பளம் வாங்காமலும் கொஞ்ச இராணுவத்தினர் சம்பளம் வாங்கியும் போராடுகிறார்களா...??? நீங்க சொன்னா சரி தான்....!

விடயம் தொடங்கினது குடிக்கிறவனையும் குடிக்காதவனையும் பற்றி.. நீங்கள் என்னுடைய கருத்துக்கு ஒழுங்கா பதில்கூற முடியாமல் இப்ப திசையை மாற்றி "நாட்டுப்பற்று" தான் விடயம் என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறியள்..

தெளிவெண்டால் என்னண்டு உங்களிட்டைதான் நான் கனக்க படிக்கவேண்டி இருக்கு! தயவு எப்ப வகுப்பை தொடங்குவோம் என்று சொல்லுங்கோ?

இததான் சொல்லுறது விதண்டாவதத்திற்கு கதைக்கிறது என்று.. முதலிலை நான் ஆரம்பத்திலை எழுதினதை வடிவா வாசிச்சு விளங்கிட்டு வாங்க கதைப்போம்..

நான் எழுதியவைக்கு விதண்டா வாதம் பண்ணியது நானா நீங்களா... சும்மா போன ஓணானை பிடிச்சு வேட்டீக்கை விட்டுட்டு குத்துது குடையுதோ...??? தாங்கள் எதாவது அறிவு பூர்வமாய் இருக்குதா எண்டு மீளவும் படிச்சு பார்ப்பது நலம்... இல்லை எண்டால் அவைகளை நான் எடுத்து பிரிச்சு மேய்ஞ்சு காட்டுறன்...

தெளிவை பற்றி யார் யாரோடை கதைக்கிறது என்று விவஸ்தை இல்லாமல் போச்சு.. :lol: :lol:

சரி நீங்கள் தெளிவாக இருக்கிறீயள்...! தெளிவான உங்களிட்டை தெரியாத என்னக்கு ஒரு சந்தேகம்...

விடயம் தொடங்கினது குடிக்கிறவனையும் குடிக்காதவனையும் பற்றி.. நீங்கள் என்னுடைய கருத்துக்கு ஒழுங்கா பதில்கூற முடியாமல் இப்ப திசையை மாற்றி "நாட்டுப்பற்று" தான் விடயம் என்ற நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறியள்..

தெளிவெண்டால் என்னண்டு உங்களிட்டைதான் நான் கனக்க படிக்கவேண்டி இருக்கு! தயவு எப்ப வகுப்பை தொடங்குவோம் என்று சொல்லுங்கோ?

வெள்ளைக்காறன் ஏதோ தேசப்பற்றோடை இருக்கிறான் எண்டு அளந்ததும் தாங்கள்தான்... குடிக்கிறவன், கொள்ளை அடிக்கிற்றவன் எல்லாம் தேச பற்றாளன் எண்டதும் தாங்கள்தான்...

தன்னையே கட்டுப்படுத்த தெரியாமல் போதைக்கு அடிமையான குடிக்காறன் எதிலும் பற்றை மட்டும்தான் வைத்து இருக்க முடியும்... மற்றவரை சார்ந்து வாழும் திருடன்..ஒரு நாட்டை கட்டி எழுப்ப கை கொடுப்பான் என்பதை அவன் தேச பற்றாளன் என்பதின் மூலம் உங்களின் அறிவை காட்டினீர்கள்... திருடனால் மற்றவரை சுறண்டத்தான் முடியும் வாழ வைக்க முடியாது.. அப்படி முடிந்தால் அது சினிமா மட்டும்தான்.....

இராணுவம் என்பதில் சம்பளம் இல்லாமல் எவரும் சேர்வது இல்லை..... கொள்கைக்காக சேர்ந்த ஜேர்மானியர்களை ருஸ்யாவின் கடும் குளிரால் (இயற்கை) ஏற்பட்ட சேதம்தான் தடுத்து நிறுத்தியது... கூலிக்கு போன எந்த படைகளும் இல்லை... இதுதான் வரலாறு... படியுங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.