Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலிற்கான தடைகளை உருவாக்கியுள்ளனர் - அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலிற்கான தடைகளை உருவாக்கியுள்ளனர் - அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர்

By RAJEEBAN

07 SEP, 2022 | 01:07 PM
image

சர்வதேச சட்டங்களை பாரிய அளவில் மீறியவர்கள் துஸ்பிரயோகம் செய்தவர்களை அல்லது சர்வதேச  மனிதாபிமான சட்டங்களை பாரியளவில் மீறியவர்களை இலக்குவைத்து உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

-

 

நிலைமாற்றுக்கால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் புதிய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாக கொண்;ட மூலோபாயத்தை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் நம்பகதன்மை வாய்ந்த உண்மையை கண்டறியும் பொறிமுறை  தற்காலிக சிறப்பு நீதிமன்றம் போன்ற  ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை காலவரையறைக்குட்பட்ட விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்;கான திட்டம் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகாலநீதிப்பொறிமுறைகளை வடிவமைத்து செயற்படுத்துவதில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முக்கிய பங்கினை வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2019 உயிர்;த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மையை வெளிப்படுத்தும் விடயத்தில் போதிய முன்னேற்றம் காணப்படாதது குறித்து கவலை வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையாளர் சர்வதேச பங்களிப்பு பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடன்  சுயாதீன வெளிவிவகார விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்கள் துஸ்பிரயோகங்களிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கான பாதிக்கப்பட்டவர்களிற்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளிற்கு உள்ள உரிமையை உறுதி செய்வதற்கான  வலுவான நிலைமாற்றுகால நீதிப்பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர் என மனித உரிமை ஆணையாளரி;ன் அறிக்கை தெரிவித்துள்ளது.

மாறாக இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலிற்கான தடைகளை உருவாக்கியுள்ளனர்,மேலும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை  அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இணைத்துள்ளனர் எனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வழக்கு தொடர்வதற்கு அயல்நாட்டு மற்றும் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கிடைக்ககூடிய வழிமுறைகளை பயன்படுத்துவதற்கு நாடுகள் ஒத்துழைக்கவேண்டும் எனவும் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச சட்டங்களை பாரிய அளவில் மீறியவர்கள் துஸ்பிரயோகம் செய்தவர்களை அல்லது சர்வதேச  மனிதாபிமான சட்டங்களை பாரியளவில் மீறியவர்களை இலக்குவைத்து உலக நாடுகள் மேலும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/135220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.