Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகவியலாளர்களிற்குஎதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்தவேண்டும்- எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்களிற்குஎதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை பயன்படுத்துவதை இலங்கை நிறுத்தவேண்டும்- எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு

By RAJEEBAN

10 SEP, 2022 | 12:41 PM
image

தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு  ஆபத்தான விதத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சட்டவிரோத துஸ்பிரயோக நடவடிக்கைகளை பயன்படுத்துவதை கைவிடுமாறும்வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களிற்கு எதிரான சமீபத்தைய நீதித்துறை துன்புறுத்தலில் இரண்டு பத்திரிகையாளர்கள்  பயங்கரவாத சந்தேகத்தின் கீழ் அடுத்த சில தினங்களில் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர் என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

rsf.png

தமிழ் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான பெரும் அச்சுறுத்தலாக இது காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களிற்குஎதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எடுக்கவேண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர் விவகாரங்கள் குறித்து செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை வேட்டையாடுவதை பாதுகாப்பு படையினர் கைவிடவேண்டும் எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு  வேண்டுகோள் விடுத்துள்ளது.பத்திரிகையாளர்களி;ற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதற்கான சமீபத்தைய உதாரணமாக மட்டக்களப்பின் பாலசிங்கம் கிருஸ்ணகுமார் செல்வகுமார் நிலாந்தன் ஆகிய இருவரையும் 14 ம் திகதி விசாரணைக்காக சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினர்  அழைப்பு விடுத்துள்ளனர்.இருவரும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்தமை தொடர்பிலான விசாரணைகளிற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் மட்டக்களப்பில் ஊடக சுதந்திர பாதுகாப்பிற்காக தீவிரமாக செயற்படுபவர்கள் பௌத்த சிங்களத்தின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படும் நாட்டில் தமிழ் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் . 1983முதல் 2009 வரை காணப்பட்ட இரு சமூகங்களிற்கு இடையிலான மோதலை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இருவரும் முயல்கின்றனர் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ் கார்டியனிற்காக பணிபுரியும் நிலாந்தன் நீதித்துறை அழைப்பாணைகளை தொடர்ச்சியாக பெற்றுவரும் பத்திரிகையாளர் கடந்த காலங்களிலும் பலமுறை சிஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.பெப்ரவரியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடாளவியரீதியில் இடம்பெற்றவேளை அது குறித்த செய்தி சேகரிப்பிற்காக அவர் இறுதியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.சமூக ஊடகங்களை பயன்படுத்தி பயங்கரவாதத்தை தூண்டுகின்றார்  விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முயல்கின்றார் என அவர்குற்றம்சாட்டப்பட்டார்.

ஜூலை 2021 இல் மட்டக்களப்பில் அவரை மூன்று மணித்தியாலங்கள் பொலிஸார் விசாரணை செய்தனர்  அவர் சமூக ஊடக விபரங்களை மாத்திரமல்லாமல் வங்கி கணக்கு விபரங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அவருடைய வெளிப்படையான செய்தியறிக்கையிடல் பாணியும் அவர் தெரிவு செய்யும் விடயங்களும் தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கு பிடித்தமான விடயங்கள் இல்லை. https://www.virakesari.lk/article/135416

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.