Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சண்டிகர் பல்கலைக்கழக விடுதியில் மாணவிகளின் தனிப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி: போராட்டம் வெடித்தது

18 Sep, 2022 | 12:40 PM
image

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chandi_uni.jpg

 பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ உள்ளிட்ட வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன.

Fc6HuIDaEAI9poh.jpg

இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்ற விவரம் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் அங்கு பயிலும் மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. 

ஆனால், எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரே இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்ததாக கூறப்படுகிறது.

Fc6e_TJacAANoos.jpg

இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்திலும் கசிய விட்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்தே மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் பரவியாதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட மாணவி தனது செயலை ஒப்புக்கொண்டதாகவும் தற்போது போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வீடியோக்கள் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாணவிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசாரும் மறுத்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/135878

 

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபில் சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக பல்கலைக்கழக மாணவி கைது - சண்டிகர் அருகே நள்ளிரவில் போராட்டம்

18 செப்டெம்பர் 2022, 06:59 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

போராட்டம்

பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.

என்ன நடந்தது?

பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து இன்று அதிகாலை 3 மணியளவில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், விடுதியில் சக மாணவிகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து, அவற்றை இமாச்சல பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை வைரலானதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதுகுறித்து பேசிய மொஹாலியின் காவல் காணிப்பாளர் விவேக் சோனி, "தற்கொலை முயற்சிகள் அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அதீத பதற்றத்தை உணர்ந்த மாணவி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எங்களின் குழு அவருடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளது. ஒரே ஒரு மாணவியின் வீடியோ மட்டுமே எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. வேறு எந்த வீடியோவும் எங்களின் கவனத்திற்கு வரவில்லை.

இதுவரை நடந்த விசாரணையில், வீடியோ எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மாணவியின் வீடியோ ஒன்று மட்டுமே கிடைத்துள்ளது. அவர் வேறு எந்த வீடியோவையும் பதிவு செய்யவில்லை. அலைபேசிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்; அது தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

 

போராட்டம்

பட மூலாதாரம்,GURMINDAR/BBC

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என பஞ்சாப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

'வீடியோ எடுத்த மாணவி கைது' - காவல்துறை

இந்த விவகாரத்தில் வீடியோ எடுத்ததாக கூறப்படும் மாணவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்துள்ளனர். அதன்பிறகே மாணவிகளின் போராட்டம் சற்று தணிந்தது.

பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊடகங்கள் தற்போது உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் மணிஷா குலாடி, "விசாரணை நடந்து கொண்டு வருகிறது. குற்றம் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என மாணவர்களின் பெற்றோருக்கு உறுதியளிக்கிறேன்." என தெரிவித்தார்.

முன்னதாக பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் சிலர், ஊடகங்களுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், விடுதியில் படிக்கும் மாணவி ஒருவர் பிற மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. அது வைரலானதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக 4 மாணவிகளின் வீடியோக்கள் வைரலாகியிருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால் அந்த ஆடியோவில் பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்கலைக்கழகம் இதுகுறித்து எந்த கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் அந்த ஆடியோ மெசேஜில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வைரலான மற்றொரு வீடியோவில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை விடுதி காப்பாளர் விசாரிப்பது போன்று தெரிகிறது. அதில் அவர் சில வீடியோக்களை எடுத்ததாகவும் ஷிம்லாவில் வசிக்கும் ஓர் ஆணுக்கு அந்த வீடியோக்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறுகிறார்

'இதை ஏன் செய்தாய்' ? என விடுதி காப்பாளர் கேட்ட கேள்விக்கு மாணவி பதில் ஏதும் கூறவில்லை.

https://www.bbc.com/tamil/india-62945252

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.