Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்தது- பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் குற்றமிழைத்தது- பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு

By RAJEEBAN

19 SEP, 2022 | 09:31 PM
image

இலங்கை சிரியா மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர  மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்த தனது தீர்ப்பில் நிரந்தர மக்கள்தீர்ப்பாயம்  ,அரசாங்கம் தனது செயற்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகளினால் வாழ்வதற்கான உரிமை கருத்துச்சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமை ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/135979

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லசந்த படுகொலை தொடர்பில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது என்ன?

By RAJEEBAN

20 SEP, 2022 | 01:34 PM
image

பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் ஹேக்கின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது

இலங்கை மெக்சிக்கோ சிரியாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சிவில்சமூக விசாரணைகளின் பின்னர் பத்திரிகையாளர் படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது.

lasantha22222.jpg

தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் குழுவை சேர்ந்த நீதிபதி எட்வர்டோ பெர்டோனி தீர்ப்பை அறிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் சர்வதேச மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என வழக்குரைஞர் தீர்மானித்துள்ளதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக நீதிபதிதெரிவித்தார்.

உயிர்வாழ்வதற்கான உரிமை  கருத்துச்சுதந்திரம் பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும்  லசந்த விக்கிரமதுங்கவிற்கு அரசியல் கருத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமை ஆகியவற்றிற்கான சுதந்திரத்திற்கான உரிமையை அரசாங்கம் மீறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லசந்த விக்கிரமதுங்க விவகாரத்தை சுட்டிக்காட்டிய எட்வர்டோ பெர்டோனி இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையாக பேசும் ஊடகவியலாளர் மீதான துணிச்சலான தாக்குதல் இலங்கையில் சுதந்திரமான சிந்தனை கெர்ட ஊடகவியலாளர்கள் அந்தக்காலத்திலும் இன்றும் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினையை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

தீர்ப்பாயத்தின் அமர்வுகள்ஹேக்கில்  2022 மே மாதம் 12 முதல் 13 வரை இடம்பெற்றன இரண்டு நாட்களில் 2004 முதல் 2010 வரை கொல்லப்பட்ட 27 பத்திரிகையாளர்கள் 17 ஊடக பணியாளர்கள் குறித்த விசாரணைகள் வாக்குமூலங்கள் ஆவணங்கள் ஆராயப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படுகொலைகள் உரிய முறையில் விசாரணை செய்யப்படவில்லை குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை தண்டிக்கப்படவில்லை அனேக பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக- தசாப்த கால உள்நாட்டு மோதலால்   அல்லது தமிழர்களிற்கு ஆதரவளித்ததால் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/136024

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.