Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனா செயற்படவில்லை- பாலித கோஹன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் சீனா செயற்படவில்லை- பாலித கோஹன

By RAJEEBAN

20 SEP, 2022 | 12:37 PM
image

பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில்  சீனா செயற்படவில்லை என தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர்  பாலித கோஹன இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கப்பல்களை கையாள்வதற்கு விசேட கொள்கை அவசியமில்லை என தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கப்பல்களை கையாள்வதில் புதிய அணுகுமுறை  ஒருங்கிணைப்பு அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் தெரிவித்து வரும் நிலையிலேயே சீனாவிற்கான தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்

டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

 

இலங்கைக்கு பல வருடங்களாக பல பலம்வாய்ந்த நாடுகளின்  கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளதையும் அது குறித்து கரிசனை எதுவும் எழாததையும் கருத்தில் கொள்ளும்போது எதிர்காலத்தில் கப்பல் விஜயங்களை கையாள்வதற்கான விசேட கொள்கையொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை என தான் கருதுவதாக சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாடு சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்கள்; இலங்கைக்கு  விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குகின்றது ஒவ்வொரு கப்பல் விஜயத்தையும் ஆராய்ந்து அதனடிப்படையில் அனுமதி வழங்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அவ்வாறானா விருந்தாளிகளால்  தனக்கோ அல்லது தனது நண்பர்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு அனுமதிக்காது மேலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்பவர்கள் தங்கள் நோக்கம் குறித்து வழங்கிய உறுதிமொழிகளை நல்லெண்ணத்துடன் நம்பியுள்ளது எனவும் பாலிதகோஹன தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் இந்தியாவிற்கு நியாயபூர்வமான பாதுகாப்பு அபிலாசைகள் உள்ளன, அவற்றை பாதுகாப்பதற்கான பலமும் அதற்குள்ளது என தெரிவித்துள்ள அவர் அதேசமயம் சீனா கண்ணிற்கு புலப்படும் வகையில்  இந்தியாவின் நலன்களிற்கு சவால் விடுக்கும் விதத்தில் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாட்டிற்கு வலுச்சக்தி கொண்டு செல்லப்படும் பாதையை திறந்து வைத்திருப்பது தொடர்பானதே சீனாவின் கவலை எனவும் குறிப்பிட்டுள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர்  இவ்வாறான விஜயங்களின் மூலம்  இலங்கை நன்மையடைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் பிராந்திய சர்வதேச நண்பர்களின் நல்லெணணத்தை தொடர்ந்து பேணவேண்டும் நாங்கள் எங்கள் காலத்தினால் சோதிக்கப்பட்ட உறவுகளை பேணும்வரை  சிறிய தவறுகளும் பெரும் விளைவை ஏற்படுத்தக்கூடிய கடுமையான சூழலில் செயற்படவேண்டிய தேவை எழாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று எங்கள் நண்பர்கள் அனைவருடனும் நல்லுறவை பேண விரும்பும்  எங்கள் நேர்மையை மதித்துள்ளனர் ஆசியாவின் சகாப்தம் குறித்து அதிகம் பேசப்படுகின்ற நிலையில் இலங்கை அதன் மூலம் பயன்பெறும் நிலையில் தன்னை தக்கவைக்கவேண்டும்.

உலகின்ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது ஒரு தசாப்தத்தில் இந்தோனேசியா மாறிவிடும் எனவும்  பாலிதகோஹன தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/136017

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலை ஒருதன் பூசி மெழுகிறான்....இவர் ஒருதர் சீனாவுக்கு குடை பிடிக்கிறார்...ஆனான் 2 பேரும் மகிந்தவின் அடிகள் என்றே  ஒத்துக்கொள்ளுகினம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.