Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்வுரிமை மறுக்கப்பட்ட யாழ்குடா மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வுரிமை மறுக்கப்பட்ட யாழ்குடா மக்கள்

- வே.தவச்செல்வம் -

யாழ்ப்பாணத்தில் கடந்த 13ம் திகதி மட்டும் ஐந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். எட்டுப்பேர் காணாமல் போயுள்ளார்கள். இதை விட மூன்று பேர் உயிர் அச்சுறுத்தலால் மனித உரிமை

கள் ஆணைக்குழுவில் சரணடைந்திருக்கிறார்கள்.

இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஒட்டுக்குழுவினரும், படையினரும் இருக்கின்றனர் என்பதை விட நேரடியாக இவர்கள் சம்பந்தப்பட்டு ள்ளார்கள் என்பதே உண்மையாகும்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு கொலையும் படையினரால் பட்டியல் தயாரிக்கப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன. பட்டியலின் கொலை செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் தமக்கு உள்ள கொலை அச்சுறுத்தல்கள் பற்றி முறையிட்டு இருக்கின்றார்கள்.

இந்த நிலையிலேயே இவர்கள் பின்னர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். முறையிட்டு என்ன பயன் என கொலையுண்டவர்களின் உறவினர்கள் கேட்கின்றார்கள். உண்மையில் யாழ்.குடாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை ஏற்று படிவங்களை அடுக்கி வைக்கும் ஒரு இடமாக உள்ளதே தவிர, அவர்களால் படையினரின் கொலை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது.

இதற்கான அதிகாரம் அவர்களிற்கு இல்லாதாலும், படையினருக்கும் ஒட்டுக் குழுவினருக்கும் எதிராக எந்த ஒரு நடவடிக்கையினையும் எடுக்க முற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழுவினரும் காணாமல் போக வேண்டிவரும்.

இது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் அதிகாரியான றுவான் சந்திரசேகரவிற்கு யாழ்ப்பாணத்தில் நடந்தது. அவர் ஒரு சிங்கள இனத்தவராக இருந்தும் அங்கிருந்து அடித்து துரத்தப்பட்டார்.

அதனால் பின்னாளில் அதன் செயற்பாடு கொலையுண்டவர்கள், காணாமல் போகின்றவர்களின் விபரப் பட்டியலை அடுக்கி வைப்பது மட்டுமே ஆகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற முறைப்பாடுகளை கூட வெளியில் ஊடகங்களிற்கு தெரிவிக்கக்கூடாது என சிறீலங்காவின் யாழ். குடாநாட்டுப் படைத்தளபதி டி.ஏ.சந்திரசிறி கடுமையான உத்தரவு ஒன்றினை யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த அச்சுறுத்தல் ஏன் விடுக்கப்பட்டது என்றால், நாங்கள் குடாநாட்டில் கொலை செய்வோம், கடத்துவோம், காணாமல் போகச்செய்வோம் இவற்றை ஒரு போதுமே நிறுத்த மட்டோம்.

தமிழர்களின் வாழ்வியலை பறிப்பது தான் எமது இலட்சியம். நீங்கள் நாங்கள் செய்வதை பார்த்து பதிந்து கொள்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்வதைப்

போலிருக்கிறது. ஒரு நாட்டில் ஒரு மனிதன் செல்வதற்கு அஞ்சுகின்ற, வெட்கப்படுகின்ற இடம் சிறைச்சாலை.

ஆனால் யாழ். குடாநாட்டில் உள்ள மக்களிற்கு இன்று சிறைச்சாலை தான் பாதுகாப்பான இடமாக மாறி வருகிறது. 13ம் திகதியுடன் யாழ். சிறைச்சாலையில் இதுவரை 67 பேர் உயிர்த் தஞ்சம் கோரித் தஞ்சமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையில் இப்போது பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், தொற்று நோய்களும் பரவி வருகிறது. ஆனால் சிறைச்சாலையை விட ஒரு இடத்தை இவர்கள் தெரிவு செய்தால் இவர்கள் வாழ்வு நிரந்தரமாகவே பறிக்கப்பட்டுவிடும்.

சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்படும் வாழ்வியல் பறிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்துவதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி என தங்களை அழைத்துக் கொள்ளும் ஈபிடிபியினர் முனைப்பாக உள்ளனர்.

சொந்த இனத்தை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் படையினரின் தமிழின அழிப்பு நடவடிக்கைக்கான விபரப்பட்டியல்

களை இவர்களும், படைப்புலனாய்வுத் துறையினரும் இணைந்தே தயாரிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் முன்னர் 2000 பேர் இவர்களின் கொலைப்பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தியின்படி யாழில் 3700 பேர் படையினரின் பட்டியலில் உள்ளனாராம்.

இக்கொலைகளுக்கு ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீவிரமாக ஒத்துழைக்கிறார் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் உள்ளது. சிறீலங்காவின் மனிதாபிமான நிலைமைகள் பற்றி ஆராய்வதற்கென வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செலாளரும் நிவாரணங்களுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் யாழ்ப்பாணம் வந்த போது, விழுந்தடித்துக் கொண்டு போய் அவரை பலாலியில் வரவேற்ற டக்ளஸ் தேவானந்தா, அவரின் நிகழ்ச்சி நிரலையே முற்றாக மாற்றி தனது எண்ணப்படி நிகழ்ச்சி நிரலை தயார் செய்து நல்லபிள்ளை போன்று நாடகமாடியுள்ளார்.

அதோடு, குடாநாட்டில் புலிகளே அடிக்கடி குழப்பம் விளைவிப்பதாகவும், குடாநாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களின் பின்னணியில் புலிகளே இருக்கின்றனர் எனவும் கூறியதுடன், மக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்துகிறேன் என கூறி யாழ் பொது நூலகத்தில் மக்கள் பிரதிநிகதிகளை சந்திக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு சந்திப்புக்கு சென்றவர்கள் வாயைக் கூடத்திறக்கவில்லை. பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் முகங்களில் வெளிப்பட்ட பிரதிபலிப்புக்களிலிருந்து நிலைமையை ஹோம்ல்ஸ் புரிந்த கொண்டாராம்.

சுற்றி வரப் படையினரும் ஈபிடிபியினரும் காண்காணிப்பில் ஈடுபட்டதுடன் சுற்றி வரகண்காணிப்புக் கருவிகளும் (வீடியோக்கமரா) பொருத்தப்பட்டிருந்தன. இச்சந்திப்பில் உண்மைகளைக் கூறினால் தமக்கு என்ன நடக்கும் என்பது கூட்டத்தில் கலந்தவர்களிற்கு தெரியும். இதனால் தான் அவர்கள் வாயே திறக்கவில்லை.

இச்சந்திப்பிற்கு முதல் நாள் இப்பிரதிநிதிகள் பலாலிப் படைத்தளத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு யாழ்.குடா படைத்தளபதியால் சந்திப்பு பற்றி நிகழ்ச்சி நிரல் கூறப்பட்டதுடன், படையினரைப் பற்றி வாயே திறக்கக் கூடாது என்றும் கூறப்பட்டதாம்.

இதனால்தான் இப்பிரதிநிதிகள் வாயே திறக்கவில்லை இதேவேளை குடாநாட்டில் உள்ள நீதிக்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழு உள்ளிட்ட முக்கியமான அமைப்புகளிற்கு இச்சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

காரணம் வெளிப்படையான உண்மைகளை கூறுவோர் இச்சந்திப்பில் இருந்து தவிர்க்கப்பட்டனர். இருந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராவது யாழ். குடாநாட்டிலிருந்திருந்தால் மக்களின் அவலங்களை விளக்கி இருக்கலாமே என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

கூட்டமைப்பினர் யாழ்ப்பாணத்தில் நிற்பது பாதுகாப்பு இல்லைதான், ஆனால் இப்படியான நாட்களில் இவர்கள் கட்டாயம் அங்கு வந்திருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். மக்களின் உரிமைக்காக தங்களின் உயிரைக் கொடுக்கும் மாவீரர்களின் கொடையையும் தமது உயிரைக் கொடுக்க தயாராக களமுனைகளில் உள்ள போராளி

களையும் நாம் நினைத்துப்பார்க்கின்ற போது ஏன் எங்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களின் நிலைமைகளை விளக்கி கூறியிருக்க முடியாதா என குடா நாட்டு மக்கள் கேட்கிறார்கள்?

ஆனால் டக்ளசின் திருகுதாளங்களையும் படையினரின் அட்டுழியங்களையும் மக்கள் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு வந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளின் முகங்களில் விழுந்த சுருக்கங்களில் இருந்தும் சோகங்களில் இருந்தும் ஐ.நா அதிகாரி ஹோல்ம்ஸ் புரிந்து கொண்டார். அவரும் மக்கள் பிரதிநிதிகளையும் டக்ளசையும் படை அதிகாரிகளையும் பார்த்து சிரித்து சமாளித்து விட்டார்.

அவரின் மனப்பிரதிபலிப்புக்களை கொழும்

பில் அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் புலப்படுத்தியுள்ளன. இதனால் தான் சிறீ

லங்காவின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநா

யக்கா ஐ.நா. அதிகாரி மீது காட்டமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஐ.நா. அதிகாரி சிறீலங்காவை விட்டு சென்ற கையுடன் யாழ்ப்பாணத்தில் டக்ளசும் சிறீலங்காப் படைகளும் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டன. அதன் வெளிப்பாடுகள் தான் தற்போது அதிகரித்திருக்கும் படுகொலைகள்.

-"ஈழமுரசு"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.